பொருள், சேவையில் குறைபாடு இருந்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யலாம் – சார்பு நீதிபதி ஆர்.ஸ்ரீதரன் பேச்சு - a2zTamilNadu.com

Monday, November 26, 2012

பொருள், சேவையில் குறைபாடு இருந்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யலாம் – சார்பு நீதிபதி ஆர்.ஸ்ரீதரன் பேச்சு - a2zTamilNadu.com

Sunday, November 25, 2012

ஊடகங்களுக்கு பொறுப்பு தேவை 

தமிழகத்தில் சில அரசியல் தலைவர்கள் தலித் மக்களுக்கு தாங்கள் ஒட்டுமொத்த பிரதிநிதி என்ற போர்வையில் சாதி வெறியை தூண்டிவிட்டு மோதல்களில் ஆதாயம் தேடுகின்றனர்.
மேல் சாதி பெண்களை காதலித்து திருமணம் செய்து பணம் சம்பாதிக்கும் வேலையில் தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு  தவறாக வழிகாட்டுகின்றனர்.
கால மாறுதல்களை எண்ணி காதல் திருமணங்களை ஏற்றுகொள்ளும் பெண்ணின் பெற்றோர்களுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது.
தலித் இளைஞர்கள் தலித் அல்லாத பெண்களை விரும்பி திருமணம் செய்வதற்காக காதலிப்பதில்லை.மாறாக அவர்களின் பணம் உள்ளிட்ட எதிர்பார்ப்பில்தான் காதல் என்ற ஆயுதத்தை கையிலெடுக்கின்றனர். இப்படி தமிழகத்திலுள்ள நாடார், தேவர், வன்னியர் உள்ளிட்ட சங்க தலைவர்கள் பகிரங்கமாக தெரிவிக்கின்றனர்.
சில சட்ட விதிமுறைகளை சாதகமாக வைத்துக்கொண்டு காலனி வழியாக செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களை கேலி செய்வதால் பெண்கல்வி பாதிக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இந்த சூழலில் ஏற்பட்ட முன்விரோதம்தான் தருமபுரி கலரத்திற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரச்சினை முடிந்து சட்ட ரீதியாக வழக்குகள் பதிந்து விசாரணைகள் துவங்கியுள்ளது.
இதனை தொலைகாட்சிகள் தினமும் இருவேறு சமூக தலைவர்களின் பேட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் சம்பவத்தை ஊதி பெரிதாக்கி சமூகத்தில் சிக்கலை ஏற்படுத்த முனைப்பு காட்டிவருகின்றனர்.
ஊடகங்கள் தங்கள் கடமைகள் என்ன என்பதை மறந்து விடுகின்றன. முக்கிய ரகசிய மற்றும் பாதுகாப்பு விஷயங்களை நேரடி ஒளிபரப்புகளை செய்து மக்களிடம் பதற்றத்தையும் , சமூக விரோதிகளுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கின்றனர்.
சமய சமூக தலைவர்கள் என்பவர்கள் சிக்கல்களை நிலையை பொறுத்து அவிழ்க்க பார்க்க வேண்டும் அதைவிடுத்து அதில் அரசியல் செய்வதில் ஆரவாரம் காட்ட கூடாது. ஊடகங்கள் இதனை நேரடி சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் பதற்றத்தி ஏற்படுத்தி டி .ஆர்.பி. ஓயார்த்திவதை விட சமூக பொறுப்புகளை எண்ணி செயல் படுத்தல் வேண்டும் .

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger