தமிழா விழித்திடு ..

Wednesday, October 28, 2009

இந்தியாவில் நதிகள் இணைப்பு பற்றி அடிக்கடி தலைவர்கள் பேசுவதுண்டு அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் அடிக்கடி .  தமிழ் நாட்டில் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் , 234 சட்டமன்ற உறுப்பினர்கள் என இந்தியா ஆட்சியை யார் நிர்வாகிப்பது என்பதை தீர்மானிப்பது தமிழ்நாடுதான் என்றல் இல்லை  என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஆனால் கடுமையனவரட்சி என்றல் குடிக்க விவசாயத்திற்கு என எதற்கும் அண்டைமாநிலங்களான கர்நாடகா,கேரளா,ஆந்திர உள்ளிட்ட மாநிலங்கள் மதிய அரசு, உச்சநீதிமன்றம் என யார் சொன்னாலும் சட்டைசெய்வதில்லை. ஆட்சியை தீர்மானிப்பது தமிழன் என்ற நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளும் தமிழின தலைவர்கள் தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்காக குடிநீரை பெற்றுத்தரமுடியவில்லை என்பதுதான் வெட்கக்கேடு. காங்கிரஸ் ,பாரதியஜனதா கட்சி போன்றவர்கள் தேசியக்கட்சி இருமாநில மக்களை அரவனைத்திபோவதைவிட சட்டத்தை மதிக்கின்றவர்களை சமாதனம் செய்துவிட நினைப்பதால் அவர்களை விடுத்து மாநிலக்கட்சிகளை தேர்ந்தெடுத்து வாக்களித்து வெற்றி பெற  வைக்கின்றனர். ஆனால் மாநிலக்கட்சிகள் அதையல்லாம் மறந்துவிட்டு மத்திய அரசில் எத்தனை அமைச்சர்கள் கேட்டுப்பெறுவது சம்பாதிப்பதர்க்காக என்பதுமட்டுமே குறியாக உள்ளனர்.  தமிழன் மீன் பிடிக்கப்போனால், தமிழன் தண்ணீர் கேட்டால் , தமிழன் உரிமையைக்கேட்டல் தாக்குதல் வழக்கு என எங்கும்,தமிழன் மதிக்கப்படுவதில்லை இதற்க்க்காகவா தாய் தமிழ்நாடு .  ஒற்றுமை இல்லாத தலைவர்கள் விழிப்புணர்வு இல்லாத மக்கள் அடி மாட்டு கூட்டங்களாக இந்தியா அரசுக்கு வரிகட்டிய அடிமைகள் வெட்ககேடு .   திருந்தவேண்டும் தலைவர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் வோட்டுக்களை விற்பது , எது நடந்தாலும் தலை எழுத்து என்று மனதை தேற்றிக்கொண்டு போவது தமிழனுக்கு அழகில்லை.  பொறுத்தது போதும் தைமிழா  பொங்கி ஏழு.
.

உன்னைப்போல் நூறுகோடி

சமீபத்தில் தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல பொதுவாகவும் ஒரு பரபரப்பையும்,சர்ச்சைகளையும் ஏற்படுத்திய திரைப்படம் நடிகர் கமலஹாசன்,மோகன்லால் நடித்து வெளிவந்த உன்னைப்போல் ஒருவன்.இத்திரைப்படத்தில் தீவிராதத்தை தீவிரவாதத்தால் மட்டுமே அழிக்கமுடியும் என்ற கருத்தை வலியுறுத்தப்பட்டுள்ளது.  இது எங்களைப்போன்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கின்ற மக்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்ற கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஆயுள் தண்டனை கைதி உள்பட ஏராளமானவர்கள் கண்டித்துல்லதில் இருந்து இப்படம் முக்கியத்துவம்பெற்றது.  சமீபத்தில் இப்படத்தை பார்த்தேன் ; சர்ச்சைக்குரிய படம் என்பதால் இரண்டுமுறைபபர்த்தேன். இப்படத்தில் ஒரு ஆள் (நடிகர் கமல் ஹாசன் ) ஐந்து இடங்களில் வெடிகுண்டுவைத்து அதை மாநகர காவல் ஆணையருக்கு , தொலைக்காட்சி நிருபருக்கு தெரிவித்து , கோவை குண்டுவேடிப்பில் தொடர்புடைய ஆயுள் தண்டனை கைதிகள் உள்பட நால்வர்களை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுவித்து ஜீப்பில் ஏறவைத்து செல்போனில் இருந்து வெடிக்கின்ற வகையில் செட் செய்து தீர்த்துக்கட்டுகிறமாதிரி செய்து தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் ஆழிக்கவேண்டுமே தவிர இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நம்பி  ஒன்றும் பயனில்லை  என்பதுபோல் இருக்கும்.  இது சராசரி அமைதியையும் , நாட்டின்மீது பற்று உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள சராசரி உணர்வுகள் இந்த தேசத்தில் பல்வேறு மொழிகளை பேசுகின்ற மக்கள் வசித்தாலும்,பல்வேறு கொள்கைகளை கொண்ட மதங்களை பின்பற்றுகிறவர்கள் இருந்தாலும் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற ஒருமைப்பாடு உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா, இங்கு பல்வேறு காலகட்டங்களில் மக்கள் கூடுகிற இடங்களில் , வழிபாட்டு தளங்களில் , மருத்துவமனைகளில் , தொடர்வண்டிநிளையங்களில் , ஓட்டல்களில் , சட்டமன்றம் ,பாரளுமன்றம் உள்ளிட்ட பலஇடங்களில் வெடிகுண்டுவீசி தாக்குதல் நேரடித்தாக்குதல் உள்ளிட்ட பலமுறைகளில் ஆயிரக்கணக்கானவர்கள் சாதி, மத, இன வேறுபாடின்றி  கொன்றுகுவித்து வருவது அமைதியை விரும்பும் யாரும் ஏற்கமட்டர்கள் அப்படியிருக்க 112  கோடி இந்தியமக்களின் உணர்வுகள் போதுஅமைதிக்கும்,உயிருக்கும் கேடுவிளைவிக்கும் யாராக இருந்தாலு இந்து , கிறிஸ்து, முஸ்லிம், புத்த,சமண என எந்த மதத்திலும் கொலைசெய்ய போதிக்கதபோது எவரையும் , எவரும் கொலைசெய்வது மட்டுமல்ல மனரீதியாக பாதிக்கும் அளவிற்கு பேசுவதில் இருந்தே வன்முறை தோன்றுகிறது , எனவே யார்,யாரை தாக்கினாலும் அது குற்றமே , அது பொதுவாழ்வில் உள்ளவர்கள் அதுகுறித்து விழிப்புணர்வு செய்ய சொல்ல உரிமை உண்டு .அது கோவை குண்டு வெடிப்பனாலும் , பெஸ்ட் பேக்கரி வழக்கனாலும் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டுமே தவிர குண்டுவைத்து பிறரை கொள்ளக்கூடாது. அதற்க்கு யாரும் அதிகாரம் பெற்றவர்கள் இல்லை .  எது எப்படியோ குற்றஞ் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் ;கலையுனர்வுகள் போற்றப்படவேண்டும் அதுவும் சக குடிமகன்களின் உணர்வுகளின் பிரதிபலிப்புகளுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும்.  இந்த தேசம் சுதந்திரமாக அமைதியாக திகழவேண்டும். ஜெய் ஹிந்து.

நம் தாய் பூமியை காப்போம்

Thursday, October 22, 2009

புவிவேப்பமடைவதன் விளைவாக ஏற்படும் கால நிலை மாற்றதால் உலகம் அழியக் கூடும் .  எதிர்காலத்தில் பூமிபந்தில் மனித இனமே வாழ முடியாத சூழல் ஏற்படும்) என விஞ்சானிகள் எச்சரிக்கின்றனர். பெட்ரோல் , டீசல், நிலக்கரி, எரிவாயு, போன்ற புதைவடிவ எரிபொருட்களை பெருமளவு பயன்படுத்துவதால் அவற்றிலிருந்து வெளிவரும் கரியமிலவாயுவின் அடர்த்தி புவியின்வளிம்ண்டலத்தில் அதிகரிக்கொண்டே செல்கிறது.  சுமார் முன்னுறு ஆண்டுகளுக்குமுபு வளிமண்டலத்தில் கரியமிலவாயுவின் அடர்த்தி 250 ppm ஆகா இருந்தது .  தற்போது 389 ppm ஆகா அதிகமாகியுள்ளது. ( ஒரு ppm என்பது பத்து இலட்சத்தில் ஒரு பங்கு)  .
ithu aandukku 2ppm அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது .  கரியமிலவாயு சூரிய வெப்பத்தை பிடித்து வைத்துகொள்ளும் சக்தி வாய்ந்தது .  பூமியின் வளிமண்டலத்தில் கரியமில வாயு அடர்த்தி அதிகமாவதால் - பூமியின் மேற்பரப்பு வெப்பமும் அதிகமாகிறது. கடந்த  நூறாண்டில் சராசரியாக வெப்பநிலை 0.74 டிகிரி சென்டிகிரேடு அதிகமகிஒயுல்ல்து.
புவிவேப்பமடைவதன் விளைவு என்ன:
* புயல்,வெள்ளம், வரத்ச்போன்ற இயற்கை சீற்றங்கள் அளவுக்கு அதிகமாக தாக்குகின்றன.
* கடல் மட்டம் உயருகிறது, கடலோரங்கள் நீரில் மூழ்குகிறது , கடல் நீரால் நிலத்தடி நீர்வளம் உப்பாகிறது.
*  கடல் வெப்பநிலை அதிகரிப்பதாலும் அமிலத்தன்மை அதிகமவதலும் மீன்வளம் குறைகிறது.
*   வெப்பநிலை உயர்வதால் புதியவகை நோய்கள் தாக்குகின்றன.
*   மலைகளில் பனிப்பாறைகள் உருகுவதால் ஆறுகள் வற்றுகின்றன.
*   மழையில் மாற்றம் , வறட்சி, போன்ற காரணங்களால் தண்ணீர் பற்றாகுறை  ஏற்படுகிறது. விவசாயம் பாதிக்கிறது. உணவு பற்றக்குறை ஏற்படுகிறது. 

தீர்வு என்ன:

வளிமண்டலத்தில் 389ppm அளவாக
 அதிகமாகியுள்ள கரியமில வாயு அடர்த்தியை 350ppm அளவாக குறைப்படுது.  அதற்கு பெற்றோலிய பொருட்களின் பயன்பாட்டின் அளவை குறைக்கவேண்டும்.
*  தற்போதுள்ள ௦௦௦ 0.7 டிகிரீ சென்டிகிரேடு வேப்ப் உயர்வினை 2 டிகிரீ சென்டிகிரேடு அளவிற்கு உயராமல் குறைக்க வேண்டும்.  இப்போதுள்ள் நிலையில் ஏற்படும் இடர்பாடுகளுக்கு மனித இனம் ஓரளவிற்கு நிவாரணம் தேடும் வகையில் உள்ளது.  இதற்கு மேல் இயற்கை சீறினாள் நம்மால் தீர்வுகாணமுடியாது .  புவியின் வெப்பத்தை குறைக்க தனிமனிதனாலும் முடியும் ஒவ்வொருவரும் மரம் நடல், மழை நீர் சேகரித்தல்,   போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.

உயிர்பெறுமா க்யோடோ - உழன்றிடுமா புவி

புவி வெப்பமடைவதை தடுக்க்ப்பத், அதன் வயுளைவுகலி எதிர்கொள்வது குறித்த உலக நாடுகளின் ராஜதந்திர நடவடிக்கைகள் கடந்த இருபது ஆண்டுகளாக நடக்கின்ப்றன.  1988 ஆம் ஆண்டில் ஐ.நா.அவையின் அங்கமான உலக வானிலை அமைப்பும் (WMO)  ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டமும் (UNEP)  இணைந்து பன்னாட்ட்டு அரசுகளுக்கிடையிலான காலநிலை மாற்ற குழுமம் (Intter governmental Panel On Claimate Change - IPCC) என்ற அமைப்பை நிறுவின.
இந்த அறிவியலர்கள் குழு முறையே  1990, 1995,2001,2007 ஆகிய ஆண்டுகளில் கால நிலை மாற்றம் குறித்த மதிப்பீட்டு அறிக்கைகளை வெளியிட்டது .  இதன் முதல் அறிக்கையே கால நிலை மாற்றம் குறித்த அவசர நிலையை எடுத்துக் காட்டியதால் , 1992 ஆம்  ஆண்டில் பிரேசில் நாட்டின் ரியோ -டி -ஜெனிரோ நகரில் கூடிய ஐ.நா. புவி உச்சி மாநாட்டில் (UN Earth Summit) ஐ.நா.கால நிலை மாற்றத் திட்டப் பேரவை எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.(UN Framework Convention on Climate Change) . 
இந்த அமைப்பின் தொடர் நடவடிக்கையாக ௧௯௯௭ ஆம் ஆண்டில் க்யோட்டோ உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. உலக நாடுகளை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் இந்த ஆவணம் , 1990 இல் வளர்ந்த நாடுகள் வெளிட்ட பசுமை இல்லவாயுக்கள் அளவினை ஒரு இலக்காகக் கொண்டு - அந்த நாபால் அந்த அளவுக்கு தலைகீழாக 5.2% அளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாவதை  குறைக்கவேண்டும். இதற்கான கால அளவு 2008-2012 வரை ஆகும் . 
உலக பூபந்தில் உயிர்கள் வாழ உறுதி செய்யும் இந்த உடன் படிக்கை வளர்ந்த நாடுகளான அமெரிக்க , ரஷ்ய உள்ளிட்ட நாடுகளால் புறக்கணிக்கப்பட்டு இந்த ஒப்பந்தம் உயிர்பெறாமல் போனது சில ஆண்டுகளுக்கு முன் போலந்து ஏற்றுக்கொண்டது. இந்த ஒப்பந்தம் முடியும் தறுவாயில் இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வரும் 7-12-2009  அன்று டென்மார்க் நாட்டின் கோபென்ஹெகன் நகரில் கூடும் கால நிலை மாநாட்டில் இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்டு உலகில் உள்ள அனைத்து உயிர்களும் மகிழ்வுடன் ஆரோக்கியமாக வாழ ஒவ்வொருவரும் முயற்சிப்போம்.  நமது தாய் வீடு பூமி ஒன்றே  அதை காப்பது அனைவரின் கடைமை.

ஆண்மைக்கு வேட்டுவைக்கும் பிளாஸ்டிக்

Tuesday, October 13, 2009

மனிதனின் வாழ்க்கை முறை நவீன மையமான பிறகு பிளாஸ்டிக் அன்றாட செயல்களோடு இரண்டற கலந்து போனது .  காய்கறி சந்தைக்கு போனால், மளிகை கடைக்கு போனால், பூ கடைக்கு போனால்,மருந்து கடைக்கு போனால் , உணவகத்திற்கு  போனால், தறெனிர் கடைக்கு போனால் என எங்கு போனாலும்  சிலமணித்துளிகள் மட்டுமே நம்மோடு இருக்கின்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்கள் , பல நூறு ஆண்டுகள் மறக்காமல் இந்த பூமியில் மண்ணின் நீர்பரவலை கெடுத்து வளமட்ட்ற மன்னாக மாற்றிவிடுகிறது, மேலும்னகரட்சிகள்,மாநகராட்சிகள் , பெருரட்சிகள் என அந்த மக்கள் தொகைக்கு ஏற்ப சிலர் மெட்ரிக் டன்  குப்பைகளில் ஆரம்பித்து பலநூற்றுக்கணக்கான மெட்ரிக் டன்  என நாள்தோறும் குப்பைகள் குவிந்தவண்ணம் உள்ளதால் நகராட்சி, பேரூராட்சி,மாநகராட்சி,ஊழியர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் தீ வைத்து எரிதுவிடுகின்றனர் அதன் தீமை தெரியாமல்.
பிளாஸ்டிக் எரிப்பதால் உண்டாகும் தீமைகள்:
பிளாஸ்டிக் பொருட்களை தீ வைத்து எரிப்பதால் டயாக்சின், கரியமில வாயுக்கள் உண்டாகிறது.  நச்சுத்தன்மை கொண்ட டயாக்சின் வாயுக்கள் அனுதிரல்கள்  மனித உடலில் உள்ள அனுதிரல்களோடு எளிதில் பொருந்திவிடுகின்றன.  ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் எரிக்கும்போது நேர்நிலைகளில் உள்ள மீன்கள் உள்ளிட்ட உயிர்களிகழந்து மெண்டு மனித உடலுக்குள் கலந்து விடும்.  டயாக்சின்  வாயுவை சுவாசிக்கும்போது மனித உடலில் கலக்கும் நச்சுவல் மனித உடலில்;  ஆண்மைக்குறைவு , பென்மைக்குறைவு, மலட்டுத்தன்மை , உடலுறவில் குறைந்த நாட்டம், பிறவி ஊனங்கள், மயிர்ச்சருமநொஇகல், நரம்பு மண்டலம் பாதிப்புகள் ,தோல்நிறம்  பற்றிய நோய்கள்,
உள்ளிட்ட எராளமான நோய்கள் உண்டாகிறது மினித வாழ்வில் இந்து நிமிடங்க பயன்ப்படும்தேநீர் கோப்பைகள் , பைகள்  நமது தாய் மண்ணிற்கும் நமது சமூகத்திற்கும் ஏற்படுத்தும் தீமைகள் ஏற்கலாம் எனவே இயற்கையோடு இணைந்த வாழ்வோம் , இனிமையாக வாழ்வோம் .

பிணிபோக்கும் பணியில் போலிகள் ஒழிக்கப்போவது எப்போது?

நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச்செயல் என்று இரண்டாயிரம்  ஆண்டுகள்ளுக்கு முன்னமே மருத்துவத்தின் மகத்துவம் பற்றி அய்யன் திருவள்ளுவர் உலகப்பொதுமறையாம் திருக்குறளில் கூறியுள்ளார் .  அதையேதான் நவீன மருத்துவமான அல்லோபதி என்னும் ஆங்கிலமருதுவம் நோய் என்னவென்று தெரிந்து அதன் தன்மையினை ஆராய்ந்து அதற்கேற்ற அளவு மருந்தினை அந்தந்த காலத்தில் கொடுக்கவேண்டும் என்கிறது. இன்றைய நவீன வாழ்கை முறை மாற்றத்தில் புதிய வகை நோய்களும் , புதியவகை சிகிச்சை முறைகளும் நடை முறைக்கு  வந்துவிட்டன.  இப்போதுள்ள சூழலில் புதிய இதற்குமுன் கண்டறியப்படாத நச்சு கிருமிகளால் ஏற்படுகின்ற நோய்களுக்கு மருத்துவர்களே பலியாகின்ற நிலையில் மனிதகுலத்திற்கு சற்று சவாலாகவே உள்ளது.  இந்நிலையில் மருத்துவம் படிக்காமலேயே மருத்துவரிடம்  சிலகாலம் உதவியாளராக இருந்து கிராமங்களிலும் , சற்றுபெரிய கிராமங்களிலும் சிகிச்சை செய்கின்றனர்.  அதுவு சாதரண விதம் அல்ல அடிபடுகின்றன , சீழ்பிடித்த கட்டிகள் என ரண சிகிச்சியாளித்தலும், பிரசவம் பார்த்தாலும், சட்டத்திற்கு புறம்பான அரசு மருத்துவமனைகளில் கூட செய்ய தயங்குகின்ற நிலையில் இருக்கின்ற பெண்களுக்கு கருகளிப்பு போன்ற வைத்தியங்களை செய்து தாயின் உயிரோடும் குழந்தையின் உயிரோடும்  விளையாடும் போளிமருதுவர்களை கலையட்டுக்க சட்டங்கள் இருந்தும் அதை நடை முறைப்படுத்துவதில்லை. இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 .  (Indiyan Medical council ACT 1956) ; இச்சட்டத்தின் ௧௫ ஆம் பிருவு ௨ ஆம் உப பிரிவு படி இந்திய மருத்துவ கவுன்சில் பதிவு செய்து சான்றிதழ் பெற்றவர்கள்தான் மருத்துவராக பணியாற்றலாம். மற்றவர்கள் அலோபதி சிகிச்சை செய்யக்கூடாது .  இச்சட்டப்படி பிரிவு ௧௫ உப பிரிவு ௩ இந படி மேற்கூறிய படி இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யப்படாமல் சான்றிதழ் பெறாமல் சிகிச்சை செய்பவர்கள் ஒரு வருடம் சிறைத்தண்டனையும், அபராததொகையாக 1000 ரூபாய் வரை கொடுக்கவும் இப்பிரிவு வகை செய்கிறது.  
இந்திய மருத்துவ பட்டங்கள் சட்டம் : 1956
 Indian Medical Degree Act - 1916;  இச்சட்டத்தின் பிரிவு 6 எ இன் படி எந்த ஒரு மனிதனும் அவரது பெயரின் பின்னல் எந்த ஒரு பட்டத்தையும் முறையாக பெறாமல் போடக்கூடாது .இதை மீறி அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் பெற்றோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்களில் பெறாத பட்டங்களை போட்டுக் கொண்டால் முதல் முறையாக 250 ரூபாயும் இரண்டாம் முறையாக போட்டால் 500 ரூபாயும் கட்டவேண்டும்.
Drugs And Cosmetics Act 1940 ;  எந்தவ் ஒருமநிதரும் உரிஇமம் பெறாமல் மருந்துகளை உற்பத்திசெய்தல், விற்பனை செய்தல் பாதுகாத்தல் பிறருக்கு கொடுத்தல் செய்யக்கூடாது .  இந்த குற்றத்திற்கு ஒரு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறையும்,5000 ரூபாய் அபராதமும்விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.  மேலும் போலி மருந்து விற்பவர்களுக்கு சேமிப்பதற்கு உற்பத்தி செய்வதற்கு இடம் அளித்தால்  இவர்களுக்கு இ.பி.கோ. பிரிவுகள் 416,417,418,419,471,23,24,25,43,44,208,270,336,337,338  படியும் இந்த போலிமருத்துவர்கள் தண்டிக்கப்படுவார்கள் .  இந்த சட்டங்களை சம்பந்தப்பட்ட அரசுகள் உரிய அதிகாரிகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தி உயிர்காக்கும் பணிகள் சிறக்க வகைசெய்ய வேண்டியது கடமை சட்டம் தன்கடமையை செய்யட்டும்.

 

தேசம் காக்க தாலி இழந்த பெண்களை மறக்கவேண்டாம் சோனியா.

Monday, October 12, 2009

              உயிரைகொல்லுதல்வேறு , சிறைவைத்தலும்  , ஏன், உடலுக்கு ஊரு செய்யும் தண்டனை என்பதும்கூட வேறு என நான் கருதுகிறேன் .  அளவில் மட்டுமல்ல , தன்மையிலும் கூட வேறுபட்டிருப்பதாக நினைக்கிறேன் .  சிறைத் தண்டனையைத் திரும்பப் பெற முடியும் .  உடலுக்கு ஊறு  செய்யும் தண்டனைக்கு ஆளானவருக்கும் கூட இழப்பீடு செய்யமுடியும் .  ஆனால் ஒருவரைசாகடிதுவிட்டால் , அந்தத் தண்டனையைத் திரும்பப் பெறவும் முடியாது, இழப்பீடு செய்யவும் முடியாது .இது மரணதண்டனைக்கு எதிராக மகாத்மா காந்தியடிகள் கூறியது.                                                      இன்றைய இந்தியாவின் நிலை மரணதண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு  விட்டதாகத் தெரிகிறது .  இறுதியாக தமிழகத்தில் ஆட்டோசங்கர் தூக்கிலிடப்பட்ட பிறகு யாரும் தூகிளிடப்பட்ட்டதாக தெரியவில்லை .  அதனால்தான் என்னவோ இந்தியாவில் தீவிரவாதத்தின் தாக்குதல் அமைதிப் பூங்கா என்ற பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது . கடந்த    1996  இல் நடைபெற்ற தொடர் குடுவேடிப்பு, மும்பை தொடர் குண்டுவெடிப்பு, சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக,ஆந்திர,அகமதாபாத் , குஜராத்,டெல்லி உள்ளட்ட பல மாநிலங்களில் பொதுஇடங்கள், பேருந்து நிறுத்தங்கள் , மார்கெட் என மக்கள் நடமாடும் இடங்களில் நடத்திய குண்டுவெடிப்புகள் என நிகழ்வுகளுக்கு காரணத்தை அரசு ஆராய்வதற்கு முன்னமே தீவிராத்தின் நிகழ்வுகளில் மறக்கமுடியாத மைல்கல்லாக நிகழ்ந்துபோனதுதான் மும்பையின் தாஜ் ஹோட்டல் , நரிமன் இல்லம், சத்ரபதி சிவாஜி ரயில்  நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்.     இதுவரை இல்லாத அளவிற்கு தேசப்பாதுகாப்பு படையினருடன் நேருக்கு நேரான தாக்குதல் தீவிரமான பயிற்சி , தாக்குதல் தலங்களைப்பற்றிய நீண்டநாள் ஆராய்ந்த துணிவு  மட்டுமல்ல இந்தியாவின் தண்டனைகள் குறித்த விழிப்பும்கூட என்றுதான் சொல்லவேண்டும் .  கடந்த 2001 டிசம்பர் 13 ஆம் தேதி புது டெல்லியில் இந்திய பாராளுமன்ற வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவராக கைது செய்யப்பட்டு புது டெல்லியில் உள்ள பொடா(pota-prevention of Terrism Act) சிறப்பு நீதி மன்றத்தால் (designated court) விசாரணை செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது, இதனை டெல்லி உயர் நீதி மன்றமும்,உச்ச நீதி மன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது .  மரணதண்டனை விதிக்கப்பட்ட முஹம்மத் அப்சல்  எனும் தீவிரவாதியை தூக்கிலிடுவதற்காக கடந்த 20.10.2006 அன்று வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.மேலும் அபிசளின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் குறிப்பாக தொலைக்காட்சிகள் துடித்தன.இந்த மரணதண்டனையை நிறைவேற்ற அப்போது ஆட்சியில் இருந்த இப்போதும் ஆட்சியில் இருக்கின்ற காங்கிரஸ் அரசு ஒட்டு  வங்கியை நினைவில் வைத்தும் , தீவிரவாதத்தை வேரறுக்கும் திராணி இல்லாததாலும் தள்ளிப்போட்டது. அதன் விளைவுதான் மும்பை தாக்குதல்.   கொலைவெறிபிடித்த இதுபோன்ற தாக்குதல்களினால் நிம்மதி இன்றி தவிக்கும் மக்கள் நலனைவிட இந்த அரசுக்கு ஒட்டு  என்பதும், ஆட்சியின் மீதான தீராத ஆசையும் மிக மிக முக்கியமாகிப் போனது வெட்கக்கேடானது.    இந்தியாவின் கவுரவம், இதயம், என எந்தபெயரிட்டாலும்  பொருத்தமான இந்திய நாடாளுமன்ற கட்டிடத்தின் மீதான் தாக்குதல் நடத்திய  எல்லை கடந்த பயங்கரவாதிகள், இந்திய தலைவர்கள் பாரளுமண்டரத்தின் உள்ளே இருக்கின்ற பொழுது அசுரத்தனமான தாக்குதல்களை நடத்தினர், இதில் எட்டு பாடுகப்படை வீரர்களும் ஒரு தொட்டகரனும் உயிரிழந்தார்கள் . ஆகா ஒன்பது பெண்கள் தாலியை இழந்த கைப்பற்றிய நமது தேசத்தின் தலை .  இன்றுவரை அதற்கு காரணமானவர்களை தண்டிக்க இந்த அரசுக்கு துணிவில்லை என நாம் சொல்லவதை விட அப்சல்  என்ற தீவிரவாதி திமிராக பதிரிக்கையலர்கலிட சொல்கிறான் என்னை தூக்கில்போட இந்த அரசுக்கு தெம்போ, திராணியோ இல்லை லால்க்ரிஷ்ணன் அத்வானி பிரதமராக வந்தால் மட்டுமே என்னை தூக்கில் போடமுடியும் என்றதுகூது இந்த ஆட்சியாளர்களுக்கு கோபம் வரவில்லை என்பதுதான் கேவலம்.     இப்படி வாழ்கின்ற மக்களுக்கு உள்நாட்டில் ஏற்படுகின்ற தீவிரவாத தாக்குதல்களை தடுத்தி நிறுத்தி தீவிரவாதத்தை வேரறுக்க வக்கில்லாத பிரதமமந்திரி அப்ஸலை தூக்கிலிட்டால் மட்டும் தீவிரவாதம் ஒழிந்துவிடுமா  என்றும் ,   பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தானின் ஐ,எஸ்.ஐ. அமைப்புதான்  காரணம் என்று அமரிக்க நாடும்,இந்தியாவும், மட்டுமின்றி உலகிற்கே தெரியும்போது;   110 இந்திய மக்களின் விருப்பமே பாகிஸ்தான் மீது போர் தொடுக்கவேண்டும்  என்பது. மும்பை மீது நடந்த தாக்குதலுக்கு  பாகிஸ்தான் மக்களை பொறுப்பாக்க விரும்பவில்லை  என்று பொறுப்பான பிரதமர் சொல்வது வேடிக்கையானது.  உள்நாட்டில் நடக்கின்ற செயலுக்கு மக்களை பொறுப்பாக்க விரும்பாத அரசு நமது அண்டை  இலங்கை நாட்டில் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்திர்க்காகவும்  போராடிவரும் விடுதலைபுலிகளை அழிக்க பூகோள வரைபடங்களையும், இராணுவ  பயிற்சிகளையும் அளித்து , இந்திய இராணுவத்தை அனுப்பி உரிமைக்காக போராடிய போராளிகளை  ஒடுக்கியதொடு உரிமையின்றி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை குண்டுபோட்டு அழித்து , நிர்வாணப்படுத்தி சுட்டுகொன்றும் , பெண்களை மானபங்கபடுதியும் , திருமணம் ஆகாத பெண்களுக்கு கருத்தடை செய்தும் முகாம்களில் விலங்குகளைவிட கேவலமாக அடைத்துவைத்து வெயிலிலும், மழை வெள்ளத்திலும், நனையவைத்து தினம்,தினம், சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றவர்கள் மேல் எந்த கரிசனமும் அண்டை நாடான தேச என்பதை விட தன அரியாசனத்திற்கு திட்டமிட்டு நாற்பது நாடளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிவிடும் தமிழ் மக்களின் தொப்புள் கொடி உறவுகளுடன் ஈழ தமிழ் மக்களிடம்  காட்டாதது  வேதனைதான். ராஜீவ் கொலைக்கு காரணமான விடுதலைபுலிகளை அழிக்க தீவிரம் காட்டிய சோனியா இந்திராகாந்தியை  கொன்ற சிங் இனத்தவரை அரியணை அமர்த்தியது விந்தை மாமியார் வேறு கணவன் வேறு என்பதாலா.  இந்த இன அழிப்பு நாளை தனிதமிழ் நாடு கோர அடிப்படையகிவிட்டால்  எந்த இறையாண்மையை காக்க தமிழ் தலைவர்களை தேசப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தார்களோ அந்த இறையாண்மை கெட்டுப்போக வைத்த பெருமை இவர்களையே சாரும் என்பதை மறந்துவிடக்கூடாது.  விடுதலைபுலிகள் இயக்கம் விடுதலைக்காக போராடுகிற இயக்கம் அல் கொய்த , இஸ்லாமிய மாணவர் இயக்கம், லஷ்கர்  இ தொய்பா  உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்கள் இன்றும் செயல் பட்டுகொண்டிருக்கிறது ஆனால் விடுதலைபுலிகள் இயக்கம் தடை செய்தது முதல் இந்தியாவில் எந்த செயலிலும் ஈடுபடவில்லை என்பதை தெரிந்தவர்களுக்கு புரியும். எனவே தீவிரவாததிடம் இருந்து காக்கவேண்டியது இந்தியாவையும், இந்திய மக்களையுதான், இலங்கையில் தமிழ்மக்களுக்கு தேவையான அதிகாரப் பகிர்வையும், சுதந்துஇரதியு உள்ளடக்கியல் தனித் தமிழ் ஈழம் என்பதை இந்திய அரசும், சர்வதேச சமூகமும் உணரவேண்டு.    எனவே நமது நாட்டில் நிழுவில் உள்ள துக்கு தண்டனை கைதிகளின் தண்டனைகளை நிறைவேற்றாவிட்டால் துக்குதண்டனையை ரத்துசெய்து ஆயுள் தண்டனையாக மடறிவடுவோம் என உச்ச நீதி மன்றம் சமீபத்தில் அறிவுரிதியத்தை மதிய அரசு நினைவில் கொள்ளவேண்டும் .  இந்தியாவின் இறையாண்மை மேலும் மோசமகிவிடமைல் இருக்கவேண்டுமானால் கிடப்பில் உள்ள முமை,பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களின் தூக்கு தண்டனைகளை துணிச்சலுடன் அரசு நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் திறமையின்மையை ஒப்போக்கொண்டு ஆட்சியைவிட்டு விலகினால்தான் இந்தியனின் திறமைமீதும், துணிச்சல் மீதும் சர்வதேச சமூகத்திற்கு நம்பிக்கைவரும். வாழ்க சுதந்திரம்.

காவல்துறைக்கு அவசிய தேவை தன்னாட்சி

Sunday, October 11, 2009


இந்திய அரசு 1977 ஆம் ஆண்டு நவம்பர் பதினைந்தாம் நாள் சட்டத்தை நிலை நிறுத்தவும் குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் ஆண் ஒரு அமைப்பாக காவல்துறை இயங்குவதை பற்றி ஒரு விரிவான ஆய்வு நடத்த ஒரு ஆணையத்தை நியமித்தது .  இந்த ஆணையம் தனது அறிக்கைகளை 1979 பிப்ரவை முதல் 1985 மே வரை அரசுக்கு அளித்தது .  கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இந்த அறிக்கை மேல் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை .  ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரி பிரகாஷ் சிங்  உள்ளிட்ட  சிலரும் உச்ச நீதிமன்றதில் மத்திய அரசு காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுரிப்படுத்த கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 22.9.2006 அன்று மிக முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது .  அதில் காவல் துரையின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளுக்கு பெரும்பாலான காரணம் மிகையான , நாட்டு நலனுக்கு போருதமில்ல்லாத வெவ்வேறு மட்டத்திலான அரசியல் குறுக்கீடுகளே (An overdose of unhealthy and petty political interferance)  என்பதே மக்கள் கருத்தாக நாடுமுழுவதும் உள்ளது .  இந்த குறிக்கீடுகள் காவலர்களின் பணி மாறுதல்களில் இரிந்து தொடக்கி கட்சி நலனுக்காக காவல்துறையை பயன்படுத்துவது மற்றும் ஊழல் அலுவலர்களுக்கு அரசியல் பாதுகாப்பு அளிப்பது வரை உள்ளது. மைய அளவிலும் மாநில அளவிலும் மாநில பாதுகாப்பு ஆணையம் ( State Security
Commission) அமைக்கப்படவேண்டும் .  இந்த ஆணையம் காவல்துறை மேல் மாநில
அரசு முறையற்ற அழுத்தத்தையோ  தாக்கத்தையோ கொடுக்காமல் (Unwarranted influnce or pressure) காவல் துரை அரசியல் அமைப்புசட்டம் படியும், இதர சட்டபடியும் செயலாற்ற வழிவகை செய்யும் பொருட்டு தக்க வழிகாட்டுதல்களை வழங்கவேண்டும்.இந்த ஆணியத்தின் தலைவராக முதல்வரோ அல்லது உள்துறை அமைச்சரோ இருப்பர், மாநில காவல் துரை தலைவர் செயலாளராக இருப்பார் . அரசின் கட்டுப்பாடின்றி சுதந்திரமாக இயங்கும் வகையில் இந்த ஆணையத்தின் இதர உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படுவர்,இதற்காக மாநில அரசு மனித உரிமை ஆணையம் ,ரிபெரோ குழு , சோரப்ஜி குழு ஆகியவை பரிந்துரைத்த குழுக்களில் இரூந்து ஒன்றை தேர்வு செய்யலாம்..  மாநில காவல் துரை இய்யக்குனர் பதவிக்கு துரை அலுவலர்களின் பனிக்காலம் , அனுபவம், பணியின் தரம் ஆகியவைகளின் அடிப்பாடையில் மைய தேர்வனையத்தின் பரிந்துரைப்பட்டியலில் இறந்து மூன்று மூத்த அலுவலர்களில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கவேண்டும்.  அவர் இரண்டாண்டுகள் குறைந்தபட்சம் பணியில் இருக்கவேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உதவி காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு கீழ் உள்ள பதவிகளுக்கான் நியமனம் மாறுதல், பதவி உயர்வு,மற்றும் இதர பணிகளுக்காக நிர்வாக நலவாரியம்  அமைக்கப்படவேண்டும்.  இந்தவரியம் மேல்முறையீடுகளை ஏற்று தீர்பளிக்கும் வாரியமாக செய்யல்படும். மாவட்ட அளவில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு கீழ் உள்ள அலுவலர் களின் மீதான் புகார்களை விசாரிக்க புகார் குழுமம் நியமிக்க்கப்ப்படவேண்டும்,  அதற்கு மேல் உள்ளவர்கள் மீதான புகார்களை விசாரிக்க மாநில அளவில் தனி குழுமம் அளிக்காப்படவேண்டும்..  மாவட்ட குழுவிற்கு தலைவராக நீதிபதியும், மாநில குழுவிற்கு தலைவராக உயர் அல்லது உச்ச நீதிமன்ற நீதி பதியும் இருக்கவேண்டும், மேற்கண்ட வழிகாட்டுதல்கள் மைய, மாநில அரசுகளால் 31.12.2006 குள்நடைமுரைபடுதவேண்டும், இந்த புதிய அமைப்புகள் 1.1-2007 முதல் செயல்பட வேண்டும். இதற்கான பிரமான பத்திரத்தை மத்திய அமைச்சரவை செயலாளர், மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள் 3-1-2007-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இதுவரை உச்சநீதிமன்ற உத்தரவுகள் இதுவரை நடைமுறை படுதாததுதான் நாட்டில் ஊழல்களும், குற்றங்களும் பெருகியதற்கு காரணம்.

வாழ்த்துக்கள் திரு.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் .

வரும் டிசம்பர் பத்தாம் நாள் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் நோபல் பரிசுபெறும் விழாவில் மூன்றாவதுமுறையாக தமிழன் நுழைவது தமிழனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியனுக்கும் பெருமைதான் .  இந்த நோபல் பரிசு ரிபோசோம்களின் பனி மற்றும்  கட்டமைப்பு பற்றிய ஆய்விற்காக வழங்கப்படுகிறது .  இந்த கண்டுபிடிப்பு புரதச்துகுரைவால் உலக அளவில் அன்றாடம் உயிர் இழக்கும் கோடிக்கணக்கான குழந்தைகள் உடல்நலத்தை பாதுகாத்து  உயிரிழப்பையும் தடுக்கிறது.   உலகஅளவில் இரண்டுகோடியே அறுபது லட்சம்  இந்திய அளவில் ஒருகோடியே அறுபது லட்சம் பேர் புரதுசத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். நீண்டகாலமாக மனித  சமூகத்திற்கு இருந்துவந்த சவால் தீர்க்கப்படும் என்ற நிலை நமது தமிழன் திறமையினால் என்று நினைக்கும்போது பெருமை படுகிறோம்..நோபல் பரிசுபெறப்போகும் நமது சகோதரர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு என்தனிப்பட்ட முறையிலும் ஒட்டுமொத்த மனித சமுகத்தின் சார்பிலும் பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  

காற்றில் பறக்கும் சட்டங்கள்

Wednesday, October 7, 2009


இந்தியஅரசு திருத்தியமைக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு சட்டம்,புகயிலைபொருள் தடைசட்டம்.  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொண்டுவந்தது. இச்சட்டப்படி (போதைபொருள்) பெரிய அளவில் அல்லது சிறிய அளவில் போதை பொருள்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என யார் வைத்திருந்தாலும் குற்றம் .  புகையிலை தடைச்சட்டம் கோவில்கள் , பள்ளிகள்,மருத்துவமனைகள், உணவகங்கள் , திரையரங்குகள் ,அலுவலக வலாகங்கள் , பேருந்துகள் , தொடர்வண்டிகள்,பெட்டிகடைகள் என மக்கள் குடும் இடங்களில் புகை பிடிக்க ,கோவில் , மருதுவமைகள், கல்விநிலைய வளாகங்கள் நூறுமீட்டர் சுற்றளவில் புகைக்க , புகையிளைபோருல்கள் விற்க தடை செய்கிறது. புகையிலை பொருட்கள் மீதான் எச்சரிக்கை வாசகங்கள் , படங்களை கட்டாயமாக்கவேண்டும் என இந்த ஆண்டு மே 31  முதல் நடைமுறைக்கு வந்தது ஆனால் இந்த தடை சட்டங்கள் தமிழகம் , புதுவி உள்ளிட்ட மாநிலங்களில் முழுவதுமாக நடைமுறைப்படுத்தவில்லை  என்பது வேதனைதான்.  எதிர்கால இந்திய என்ற இளம் தலைமுறை கலை குறிவைக்கும் போதை பொருள்களும் , புகையிலை பொருள்களும்  பள்ளி கல்லுரி மாணவ மாணவிகளுக்கு தாராளமாக கிடைக்கிறது இதை தடுத்தாலே வளமான இந்திய , இளமையான இந்தியா என உரக்கவளிமையோடு சொல்லலாம் இதற்கு அரசு மட்ட்டுமல்ல            பிள்ளைகளின் வாழ்வில், நாட்டின் வளர்ச்சியில் அக்கறை உள்ள ஒவ்வொரு வரும் முயற்சிக்கவேண்டும் , நம்பிக்கைவைப்போம் வல்லரசு இந்திய விரைவில்.    .

குளங்களை அழிக்கதீர்...

விழுப்புரம் நகரம் தமிழகத்தின் நடுப்பகுதிமட்டுமல்ல பெரும்பாலான் தமிழகபோக்குவரதினை இணைக்கும் இடம் .  இந்த நகரத்சியில் நற்பதிஎட்டு மெட்ரிக் டன் நகரகழிவுகள் உற்பதியவதாக அந்த நகர நிர்வாக அலுவலக தகவல்.  இந்த குப்பைகளை தரம்பிரிக்காமல் நகரின் நடுவிலும் பழைய பேருந்து நிலையதிணை ஒட்டி உள்ளது ஆதிவாலிஸ்வரர்  கோவிலுக்கு சொந்தமான குளம் தற்போது என்பது சதம் தூர்கப்பட்டுவிட்டது நகரகழிவுகள் , பழைய கட்டிடங்களை இடிக்கும் கழிவுகள் அனைத்தும் கொட்டப்பட்டு வணிகவலாகம் கட்ட நகரின் நடுவே இருந்த குளம் பயனற்று போனதோடு அன்றாடம் நகரகழிவுகளை கொட்டி எரித்து அங்குள்ள பேருந்து ஓட்டிகள் மாணவ மாணவிகள் , அருகில் உள்ள கார் வாடகை  ஓட்டுபவர்கள் , குளத்தை ஒட்டி உள்ள நகர அரசு நடுநிலைப்பள்ளி மாணவமாணவிகள் , வணிகர்கள்  என நாளொன்றுக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் துன்பப்படுகின்றனர், நகரகழிவுகளை சம்பத்தப்பட்டவர்கள் ஒதுக்கப்பட்ட இடத்தில திடக்கழிவுமேலன்மை செய்து உரம் தயாரித்து விற்பனை செய்வதை விடுத்தது எரித்து மனித வளத்தை அழிப்பதை அரசு வேடிக்கைபார்க்ககுடது.  மாவட்டத்தின் நிர்வாகம் இதுகுறித்து ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கவேண்டும்.   குளங்களை அழிக்கதீர்...

புதுவையை காக்க தடை விதிக்க


புதுச்சேரி மாநிலம் சிரியளவில் இருந்தாலும் அதிக அளவிலான தொழில்சாலைகள் , அழகிய வீதிகள் , சுத்தமான கடற்கரை,உலகத்தரத்திலான ஆரோவில்நகரம் , அரவிந்தர் ஆசிரமம் , காந்தி நினைவு மண்டபம் என புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்த மண் தொழிர்சாளைகழலும், நகராட்சி தரம்பிரிக்கப்படாத கழிவுகளை வில்லியனூர் புறவழிச்சாலை ஓரம் கொட்டி தீஇட்டு எரிக்கின்றனர். இதனால் டை ஆக்சின் என்ற விஷ வாயுவும் , கரியாமிலவயுவும்  கலந்த புகை மண்டலம் அந்த சாலையில் வாகனோட்டிகள் மிகவும் சிரமதிற்குள்ளகின்றனர் . அந்த பகுதில் குடியிருக்கும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.  பிளாஸ்டிக்ஸ் , அந்தபகுதி மருத்துவமனைகளில் உருவாகும் மருதுவக்கழிவுகள் எரிக்கப்படும்போது வுருவாகும் விஷவாயு ஆண்மைக்குறைவு,பெண் தன்மைகுறைவு, மலட்டுத்தன்மை , மயிர்சருமநோயிகள்,பிறவி ஊனங்கள் ,தோல் நிறம்பற்றிய நோய்கள் , நரம்புமண்டலம் பதிப்புகள்  என எராளமான பாதிப்புக்கள் உண்டாகிறது .  இதுகுறித்து பசுமைத்தாயகம் சார்பில் நகரகழிவுகளை எரிப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு உயிர் கொல்லி நோய்கள் வரும் மேலும் கழிவுகளை எரிக்காமல் திடக்கழிவு மேலாண்மை செய்து உயிர் உரங்கள் தயாரித்தால் மாநிலத்தின் உரதட்டுப்படு தீரும்,அதன்மூலம் நகராட்சிகளுக்கு வருமானம் பெருகும் , மனிதவளம் பாதுகாக்கப்படும் . மேலும் மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு , நிலவளம் பாதிக்கப்பட்டு எழில்மிகுந்த புதுவை சுற்றுலாத்தளம் என்ற அந்தஸ்தை , அடையாளத்தை இழக்கும் எனவே பிளாஸ்டிக் மீதான எரிக்க, பயன்பாட்டுக்கு தடை விதிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. அதுதொடர்பான மனு கடந்த ஆண்டு அம்மாநில முதல்வரிடம் அளிக்கப்பட்டது, வில்லியனூர் சேர்மன் புறவழி சாலையில் குப்பைகளை கொட்டி எரித்தால் கடும் நடவடிக்கை என எச்சரித்தார் ஆனால் இன்றுமந்த நிகழ்வு தொடர்கிறது.  புதுவை அரசு கடந்த ஜூலை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை அமுலுக்கு வருவதாக அறிவித்தது.  பிளாஸ்டிக் வணிகர்களின் நிர்பந்தத்தால் அந்த தடை அமல்படுத்தாமல் உள்ளது .  அரசின் இந்த நிலை ஒருவகையில் மனிதஉரிமை மீறல்தான் , இதுகுறித்து பசுமைத்தாயகம் சார்பில் வழக்கு தொடர உள்ளோம் .

வேண்டாம் தாய்பால் வங்கி

Tuesday, October 6, 2009


இரத்ததானம், கண்தானம், உடல்தானம், அன்னதானம் என பிற உயிர்களை காப்பதில் மனித இனம் சமீபத்தில் மிகுந்த அளவில் விழிப்புணர்வு அடைந்துள்ளது மகிழ்ச்சியான ஒன்றுதான் .  ஆனால் தாய்பால் கொடுக்கும் விசயத்தில் இன்னும் மனித இனம் முதிர்வு பெறவில்லை என்பதுதான் வருத்தம். ஏனெனில் தாய்பால் குறித்து மூன்று மணிநேரம் பேசுபவர்கள் கூட அதை பின்பற்றுவதில்லை. தாய்பால் மட்டுமே ஆரோக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் அதை குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்ற நிலையிலும் அழகு          கெட்டுபோய்விடும் என்றெண்ணம், வறுமை உள்ளிட்ட காரணங்களால் தாய்பால் கிடைக்காத நிலையை தொடர்ந்து தற்போது தாய்பால் வங்கி தொடங்கி வருகின்றனர்.  இதில் தாய்மார்களிடம் இருந்து சேகரித்த தாய்பாலை சில்வர் பாத்திரத்தில் சேகரித்து வைத்தால் கெடாது என மருத்துவர்கள் கூறி வருகின்றனர் . தாய்பாலை சீசாவில் கொடுக்கவேண்டும் என நினைப்பவர்கள்  வழக்கமாக தரும் பசும்பால் போன்றவற்றையே தரலாம் ஏனெனில் பசும்பால் சேகரிக்கும் முறை சுத்தமனதாக இருக்கும்படி பார்த்தாலே சிறப்புதான்.  தாய்பாலை கருவிகள் மூலம் உறிஞ்சி சேகரித்து பாதுகாப்பதிலும் சில ஆரோக்கிய குறைபாடுகள் வரலாம், ஒருவேளை இல்லை என நிருபிதலும் இதில தாய்க்கும் குழைந்தைக்குமான பிணைப்பு  குறைத்துவிடும். மேலும்  இதனால் வறுமைகள் உள்ள தாய்மார்கள் தன் குழந்தைக்கு பால் தருவதை தவிர்த்து வருமயை போக்க பாலை விற்பது அதிகரிக்கும்.  எனவே ஒவ்வொரு உயிரின் தாய்பால் அதன் குழந்தைகளுக்கு சேர்வதற்கு  உண்டான உரிமையை  பாதுகாக்க வேண்டிய நாம் மனித இனத்தின் தாய் பாலையாவது வணிக பொருள்   ஆவதை ஊக்குவிக்க வேண்டாம். எனவே  ரத்தவங்கி போன்று  தாய் பால் வங்கி திறப்பது மனிதகுலத்தில் எஞ்சியுள்ள பாசபினைப்பை வேரறுக்கும் செயல் ஆகும்.

வேண்டாம் தாய்பால் வங்கி 

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger