தமிழகத்திற்குள் பவானி இனி பவனி வருமா

Friday, February 26, 2010


       நீலகிரி மலையின் உச்சியிலிருந்து உற்பத்தியாகி தமிழ்நாடு,கேரளா ,கர்நாடக மாநிலங்களில் பயணிக்கிற நதிதான் பவானி.217 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நதி தமிழகத்தின் இரண்டாவது பெரிய நதியாகும் .  நதியின் நீளத்தில்
        தமிழகத்தில் 87 சதவீதமும்,கேரளாவில் 9 சதவீதமும்,கர்நாடகாவில் 4 சதவீதமும் ஓடுகின்ற இந்த ஜீவனதியை ஜீவனமில்லாமல் செய்ய கேரளா முயற்ச்சிக்கிறது.
       பவானி நதி தமிழகத்தில் பாசனத்திற்காக ,குடிநீருக்காக பெரும்பங்கேற்கும் மாவட்டங்கள் கோவை,ஈரோடு ஆகிய மாவட்டங்கள் . பயன்பெறும் முக்கிய நகரங்கள் முக்காலி,ஆதிக்கடவு,கூடப்பட்டி,மேட்டுப்பாளையம்,பவானிசாகர்,சத்தியமங்கலம்,ஆப்பகூடல்,ஆவூடையப்பாரி ,பவானி.
இந்த முக்கிய நகரங்கள்,கிராமங்கள்  உள்ளிட்ட ஏராளமான மக்கள் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் நம்பியுள்ளனர் இவர்களின் அடிப்படை வாழ்வாதாரமான குடிநீர் தேவையை நிறுத்த கேரளா அரசு அதன் எல்லையில் புதிய அனைகட்டிதடுத்திட முயல்கிறது .   சம்பந்தப்பட்ட தமிழக மக்களை ஏமாற்ற முயலும் கேரளாவை தடுத்து நிறுத்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கைஎடுக்காமல் ஏற்கனவே புதிய அணையை முல்லைபெரியார் அணைக்கு கூடுதலாக கட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பினை மீறி வருகிறது.  இந்நிலையில் பவானியும் இனி தமிழகத்திற்குள் பவனி வருமா தமிழகத்தின் மேற்குமாவட்ட மக்களை காக்குமா என்பது கேள்விக்குறிதான். சம்பந்தப்பட்ட மாநில மக்களின் அல்லது அரசின் ஒப்புதலின்றி அணைகட்டும் கேரளா அரசின் நடவடிக்கை நீர்வளபாதுகப்பு சட்டம் (மத்திய அரசு) ,உச்சநீதிம்ற உத்திரவு மீறல் இவற்றிற்கெல்லாம் தமிழக அரசின் முடியாதனம் மக்களுக்கு விடியளைத்தருவது காலத்தின் கையில்.

?














      

கொள்கையற்ற அரசியலால் விலைவாசிஉயர்வும்,வறுமையும்


          நாட்டின் பொதுமக்களை சமீபகாலமாக வாட்டிவதைக்கிற விஷயம் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ஏற்றம் விஷம் போல கட்டுக்கடங்காமல் ஏறிவருவதுதான்.  குழந்தைகளுக்கு தரும் பால் சமையலுக்கு பயன்படும் உப்பு ,காய்கறி , பருப்பு,சர்க்கரை,அரிசி,எண்ணெய் போன்றவைகளின் விளைஎற்றாம் நடுத்தர குடும்பங்கள் , ஏழைக்குடும்பங்கள் என ஒட்டுமொத்தமாக பாதித்துள்ளது.  உணவகங்களில் சாப்பிட சாதாரண ஓட்டல்களில் ரூ.25-35, பெரிய ஓட்டல்களில் 50 ரூபாய் முதல் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற நிலையில்.   ஏழை நடுத்தர குடும்பங்கள் மூன்று வேலை நல்ல சத்தான சாப்பாட்டை சினிமாக்களில் காணவேண்டிய நிலையாகிவிடும் என தோன்றுகிறது. வசதிபடைத்த  பணக்கார மனிதர்கள் ஒருகார் வாங்கினால் இன்னொரு காரை வாங்கும் நிலை நாட்டில் வளர்கிறது.  ஆனால் ஏழை இன்னும் ஏழையாகவே கீழிறங்கும் நிலை நிலவுகிறது.
                 இந்தியாவில் சில வருடங்களாக விலைவாசி ஏற்றம் குறித்த பல கருத்துக்கள் உலா வருகிறது.  ஆனால் அத்தியாவசிய பொருட்களான அரிசி,பருப்பு உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் வர்த்தகமாகிவிட்டதால் ,வெளிமாநிலங்கள்,வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி,கடத்தல் ,பதுக்கல் உள்ளிட்ட செயல்களால் விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறிவருகிறது.   இதை தடுக்க பொதுவழங்கள்துறையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அரசு தவறியது விளைஎற்றத்திற்கும் வறுமை அதிகரிப்பிற்கும் காரணமாக அமைந்தது.
கொள்கையற்ற வறுமை ஒழிப்பு திட்டம் தோல்வி:
            மத்திய ,மாநில அரசுகள் வறுமை ஒழிப்பிற்கு வாக்குறுதிகள் ,திட்டங்களை பொதுமக்களுக்கு அளிப்பார்கள் ஆனால் நடைமுறைப்படுத்துவதற்கான நிலையான திடனான கொள்கையை நடைமுறைப்படுத்த்தும்வரை  விலைவாசி உயர்வும்,வறுமையும் தீவிரமடியும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.  


.புத்தரை தகர்த்த வன்முறையின் நினைவுதினம்

Thursday, February 25, 2010


" ஆசையே அனைத்து துன்பத்திற்கும் காரணம்" இந்த இரத்தின சுருக்க வாசகத்தால் மட்டுமல்ல தன் வாழ் நாளிலும் கடைபிடித்ததால் உலக உயிர்களிடத்தில் அன்புசெலுத்தி வாழ்ந்த இராகுலன் என்ற கௌதம புத்தர் உலகில் அமைதியை விரும்பும் உயிர்களால் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு ஆலயங்கள் எழுப்பி வழிபட்டனர். ஆனால் உலக உயிர்களிடத்தில் அன்புசெளுத்திய நாள் வரை இவ்வுலகில் அமைதி இருந்துவந்தது கால மாற்றங்களால் மதநல்லிணக்கம் சிதையதொடங்கியது, உயிர்கள் வதைக்கப்படுவது அரங்கேரத்தொடங்கியது கோரத்தின் உச்சம் மக்களிடம் இருந்து கடவுள்கள் வரை பிரிவினையை மனிதா குளம் வரையறுத்தது . இதன் விளைவாக வன்முறை,தீவிரவாதம் தலை தூக்காரம்பித்தது .

உயிர்களை நேசிக்க சொன்ன தன்னை கொள்ளவந்த மனிதனை தன்சீடனாக ஏற்ற புத்தகடவுளின் சிலைகளை ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் டைனமைட் குண்டுகளை வைத்து கடந்த 2001 பிப்ரவரி 26 நாளன்று தகர்த்து உலக அரங்கில் தங்களது கடவுளான அல்லவே ஏற்காத தீமையை செய்தனர்.



அதேபோல் புத்தமதத்தை பின்பற்றி வாழ்ந்துவரும் துறவிகளும் , மக்களும் நிறைந்த புத்தமத நாடு என்ற பெயர் பெற்ற இலங்கை தேசத்தில் தமிழ்மக்கள் இறக்க்கமற்றமுரையில் கொன்று குவிக்கப்பட்ட துயர நிகழ்வு கொள்கைமுரண்பாடுமட்டுமல்ல , மனிதநேயமற்ற நிலை இதற்கு புத்தமத துறவிகள் துரவரம்பூண்டும் பிரையிர்களிடத்தில் அன்புசெலுத்த சொன்ன புத்தரின்வாக்கு பிரையிரின் இரத்த்த்தைக்குடிக்கின்ற வெறியாக உருவெடுத்தது உலகில் புத்தமதம் துரவிகளுக்குமட்டுமல்ல பின்பற்றுகிறவர்களுக்கும் நல்லதல்ல . புத்தம் சரணம் கச்சாமி அல்ல புத்தம் மரணம் கச்சாமி.





  

மரபுவழி விவசாயத்தை அழிக்கவேண்டாம் -ரமேஷ்

Thursday, February 18, 2010





           இந்திய அரசு சுற்றுசூழல் துறை மரபணுமாற்றம் செய்யப்பட பயிர்களை அனுமதிக்க சம்மதம் தெரிவித்து நெல்,பருத்தி பயிர்களை சோதனை முறையில் இந்திய வயல்வெளிகளில் வளர்ந்தநேரத்தில் அதன் தீமைகள் குறித்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் ,இயற்கை  விவசாய அறிவியலார்கள் இந்த செயலுக்கு காரணமான அமெரிக்காவின் மான்சாண்டோ,மகிக்கோ நிறுவனங்களுக்கு எதிராகவும் , மரபணு மாற்றம் செய்தவிதைகளை அனுமதிக்கக்கூடாது என இந்திய மற்றும் மாநிலரசுகளை வலியுறுத்தி போராட்டம்,ஆர்ப்பாட்டம்,பேரணிகளை நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர் .
மரபணுமாற்றம் செய்தவிதைகளால் விவசாயிகளின் பாதிப்புகள்:
             மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் ,பருத்திவிதைகளை பயன்படுத்தி விவசாயம் செய்த விவசாயிகள் இயற்கையாக மண்ணில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து மண்ணின் வளத்தை கெடுத்தும், குறைவான விளைச்சளைமட்டுமே தந்தது , இந்த விதைகளை பயன்படுத்தி விவசாயத்தி செய்யும் அடுத்தடுத்த முறைகளில் அதிக நச்சு தன்மை வாய்ந்த பூச்சுகொல்லிகளை விவசாயிகள் வாங்க வேண்டியிருந்தது .
              மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்த நிறுவனங்கள் இந்த விதைகள் பூச்சிகளால் பாதிக்கப்படாது மாறாக தண்டு புழு ,காய்புழு இவைகளை அழித்து நல்ல கூடுதல் மகசூல் கிடைக்கும் என உறுதி தந்தபின்னர் பயிரில் விழும் பூச்சிகள் பற்றிய புகாருக்கு பூச்சிகொல்லிகளை பரிந்துரைத்தனர் , விதைகளுக்கு அதிகவிலை இவைகளால் தாங்கமுடியாத கடன்சுமையால் மூழ்கிப்போன விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட  சம்பவம் நாடறிந்தது .
              நமது நாட்டில் கிட்டத்தட்ட நூறுவகையானநெல்வகைகள் , ஏராளமான கத்தரிவகைகள் இருந்தது , இதனை பாதுகாக்க வேண்டிய அரசுகள் , இருக்கின்ற பாரம்பரிய நெல்,கத்தரி விதைகளை பாதுகாக்க , விளைவிக்க ஊக்க படுத்தாமல் விதைகள் காப்புரிமை  சட்டம் இயற்றி நாட்டுமக்களை அந்நிய நட்டு நிறுவனங்களிடம் கையேந்தவைக்க அரசின் அதிகார வர்க்க விஞ்சானிகளின் கருத்தைஏற்றுள்ளது  ,மக்களின் உணர்வுகளை புறந்தள்ளி ; இது ஜனநாயகத்தின் மிகப்பெரிய படுகொலை.
விதை காப்புரிமை சட்டமும், மரபனுமாற்றமும்: 
                 விதை காப்புரிமை சட்டத்தின்படி காப்புரிமை பெறாத நபர் விதைகள் வைத்திருத்தல் சட்டவிரோதம் , விதைகளை கட்டாயமாக நிறுவனகளிடம் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டும்.இந்த விதைகளால் மண்வளம் நாளுக்குநாள் குறைந்துகொண்டேபோகும் .  பெரும்பாலும் தாவரங்களில் தன்மகரந்த  சேர்க்கை ,அயல் மகரந்த சேர்க்கை நடைபெறுவது இயற்கை , அயல்மகறந்த சேர்க்கையால் நமது பாரம்பரிய விதைகள் பயிர்செய்யப்பட்ட நாற்றாங்காலில் உள்ள பயிர்களில் மரபணு மாற்றம்  செய்யப்பட்ட விதைகள் கலப்படம் வர நேர்ந்தால் விதைகள் காப்புரிமை சட்டத்தால் இந்திய விவசாயிகள் கைது செய்யப்படுவது நிகழும். அயல் மகரந்த சேர்க்கை நிகழ்வால் சுற்றுசூழல் பாதிப்புகள் ஏற்பட மலட்டு மரபணு மாற்றம்செய்யப்பட்ட விதைகள் காரணமாக இருக்கும்.
உணவு பொருள் பற்றாக்குறை :
        நாட்டில் நிலவும் வறுமையை ஒழிக்க பசுமைப்புரட்சி என்ற பெயரில் நவீன எந்திரங்களையும் , பூச்சிகொல்லிகளையும் கொண்டுவந்த பின்பும் வறுமையும் ,சாவும், எலிக்கறி உண்பதும் நிகழ்வதை தடுக்கவோ ,தீர்க்கவோ முடியவில்லை.  உணவுப்பொருள் தட்டுப்பாடு இல்லை போதிய அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பு உள்ளது .  என்று சொல்லும் அரசு இப்போது பற்றாக்குறையை போக்க மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் நாட்டிற்கு அவசியம் என விவசாய துறை அமைச்சர் கூறுவது தவறு.  உணவுபொருட்கள் தட்டுப்போடு  நிலவுதோ?,கையிருப்பு போதிய அளவு உள்ளதோ ? இந்த மாறுபட்ட விளக்கங்களால் மட்டும் வறுமை ஒழியாது.  அத்தியாவசிய பொருட்களின் முறைகேடு,பதுக்கல்,கடத்தல் இவைகளை முறையாக அறவே ஒழிப்பதுதான் வறுமையை ஒழிக்க ஒரே வழி , எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வழி செய்ய அரசு வெட்கப்படக்கூடாது , அதுவரை வறுமை ஒழியாது.
          மரபு வழிவிதைகளும், இயற்கை விவசாயமும்தான் இந்த நாட்டை காக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகளால் நன்மையேதும் கிடைக்காது என்பதே உண்மை.

அரியவகை நெல் வகைகள்

Monday, February 15, 2010

                                                                                                    சில  மாதங்களாக நாடெங்கிலும் விவசாயிகள்,தொண்டுநிறுவனங்கள்,சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் மரபீனி மாற்ற கத்திரிக்காய்க்கு மிகப்பெரிய எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக தற்காலிக தடையை விதித்து பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டங்களை நாட்டின் முக்கிய சில நகரங்களில் வைத்து மக்கள் கருத்தறிந்த பின்பே இருதிமுடிவேடுக்கப்படும் என சுற்றுசூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அறிவித்தார்.  இதற்கு முன் மான்சாண்டோ,மகிக்கோ போன்ற அமெரிக்கா நிறுவனங்களின் சோதனை முயற்சியாக இந்தியாவிற்குள் நெல்,பருத்தி போன்ற பயிர்களை விவசாயிகள் மீது பொய்யான கவர்ச்சி மிகுந்த காரணங்களான பூசிவிழாது,அதிக மகசூல் என சொல்லி விதைகளை அதிக விலைக்கு விற்றதன் காரணமாக வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் கடனாளியாகி ஆந்திராவில் மட்டும் 7000 க்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

                நமது பாரம்பரிய விவசாயமுறையில்  விவசாயிகள் ஏராளமான வகைகளை உற்பத்திசெயதனர் அதில் இயற்கையான முறையில் ஊட்டசத்துக்களும் ,விதவிதமான சுவையும்,வெவ்வேறுவிதமான பருமனும் , பூச்சிகளை எதிர்க்கும் திறனும் கொண்டவைகளாக இருந்து வந்தன .  இவைகள் ஒன்றும் ஆராச்சிகல்வி முடித்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்தவைகள் அல்ல அனுபவம் மட்டுமே உள்ள விவசாயிகள் கண்டுபிடித்தவைகள் அவைகளின் விவரங்கள் இங்கே.

பாரம்பரிய நெல்விதைகளின் வகைகள் :
              சம்பா நெல் வகைகள்:
        கஸ்தூரி சம்பா,நெல் சம்பா,குணா சம்பா,சீராக சம்பா,குண்டுமணி  சம்பா,கொத்தமல்லி சம்பா,தூய மல்லி சம்பா,கீர சம்பா,கல்லன் சம்பா,செறிய சம்பா .
        இந்த வகை நெல் 4  மாதம் முதல் 6 மாதம் வரை ஆகும்.
             குறுவா நெல்வகைகள் :
        கட்டு குறுவா,டார்ப்ப குறுவா ,மிக் குறுவா,கரி குறுவா,குல குறுவா,பணம் குறுவா,அறுவாள் குறுவா.
         இந்த வகை நெல் 2 மாதம் முதல் 4 மாதங்களில் விளைந்துவிடும்.
          சொர்ணவாரி,காடகழுத்தான்,விலங்கன்,மானாவாரி,மருதவேளி,கரிமுலாக்கி,ஜீரகமுலாக்கி,எவன்ன முலாக்கி,மஞ்சமுலாக்கி,.
            இந்த வகை நெல் வகைகள் மூன்றரை மாதத்தில் விளைவதாகும்.
காற்றாடி முத்தன்,காற்று காரிமைணன், விரியன் , கல்லுண்டான்,கருத்த அரிவிக்குருவி,சிறலாகி,சுட்டிவிரியான்,கருத்த செறு கண்டான் ,குற்றாலம்,குன்தாவேலா,குன்னியப்பன்,கொடா நரியன்,கட்டி வெல்லா,பூதல கறுப்பன்,முண்டாக்க(சிகப்பு)சொன்னால்,முண்டாக்க பள்ளிபுறா(கருப்பு
),கியூவாலா,மஞ்ச வள்ளி,வெற்றிகண்டான்,(பெரியது),சின்குனி,குருவகல்லான்,சிமநெல்,அதிக்கிரவி வெள்ளா,செண்பகா மார்த்தாண்டன் கருத்த தட்டார வெல்லா , பலன்த தட்டார வெல்லா ,ஆனா கொம்பன்,குட்டி ஆனா கொம்பன்,செம்புள்ளி,முத்து வெல்லா,கும்பாலாவால் கிளை முண்டான்,(வெள்ளை),பாலி  சொறிம்பு(கறுப்பு),பாலி  சொறிவு(வெள்ளை),வெள்ளை  செறு நெல்,விரியாதுங்கன்,புல்லு புளத்தி,கறுப்பு காணி,செம்பாக லிங்கம்,வாலி கறுப்பான்,சித்ரகாணி.
        இவற்றில் இன்று 90 சதம் அழிந்து போனது வருத்தமானது மல்ல மிகப்பெரிய இழப்பு மாகும் .

உயிரின் முதல் உரிமை தாய்பால்...

Friday, February 12, 2010


        வானம் பாலாய்  பொழிகிறது
                மண்ணுக்கு மழையை ..
        காட்டில் புலிகள் கூட தன்
             குட்டிகளுக்கு கொடுக்கிறது பாலை..
        பறவையினத்தில் வவ்வால் கூட
               தாய் பாலை கொடுக்கிறது
        கடலில் திமிங்கலம்,டால்பீன்கள்
                தன்குட்டிகளுக்கு தாய்பாலையே கொடுக்க...
        மனிதா நீ மட்டும் ஏனோ ?அழகை காக்க தன்
               பிள்ளைகளுக்கு பிளாஸ்டிக் புட்டிகளில் பால்....
         உலக நியதி ஒவ்வொரு உயிருக்கும் அதன்
              தாய் பால் அடிப்படை உரிமை ..........                                                                                
..


கூலிப்படைகளின் வேட்டைகள் தொடரவேண்டும்...


          தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்த காலம் ஒன்று அது மகாத்மா காந்தி அவர்களின் எண்ணப்படி நள்ளிரவில் கூட பெண்கள் தனியாக நடமாடமுடியும் ஆனால் இன்று ஆண்கள் கூட சொந்த வீட்டில் நிம்மதியாக கண்மூடி தூங்கமுடியாத நிலை.அது யாராக இருந்தாலும் சரி ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். என பெரிய அளவில் இருந்தாலும் கூலிப்படைகள் குடும்பத்துடன் தீர்த்துக்கட்டிவிடுகிரார்கள். அதிகார போட்டி, வணிக அறீதியான போட்டி என ஏதேனும் ஒருவிதத்தில் சாதாரண பகை முதல் பெரிய அளவிலான பகைக்கும் தீர்வு கொலை மட்டுமே என இன்றைய நிலை உள்ளது.   இதற்கு காரணம் கள்ள சாராயம் காச்சுதல்,கஞ்ச,கேட்டமைன்விற்றல் என ஏதேனும் ஒரு சட்டவிரோத நிகழ்வில் ஈடுபட்டால் பணத்தை வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவது பிறகு அரசியல் ,பெரிய அளவிலான கடத்தல் ,கட்டபஞ்சாயத்து என அரசியல் பலத்துடன் நிற்கும்பொழுது காவல்துறை சாதாரண விசாரணை என்றால் கூட யோசிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.  இவர்கள் பல கற்பழிப்புகள் ,பெண்களை கடத்தல், குழந்தைகளை கடத்தல்,கொலைகள், ரியல் எஸ்டேட் , முறையற்ற விதத்தில் நிலங்களை பலரிடம் விற்பது போன்று பொதுமக்கள் ஏராளமாக பாதிக்கப்பட்டு ஒன்றுகூடி போராடும்போழுதோ? அல்லது பெரிய அளவிலான புள்ளிகள் இவர்களால் பாதிக்கப்பட்டாலோ இவர்கள் மீது சட்டம் பாயும் அதுவும் நமது நாட்டின் சட்ட ஓட்டைகளை காவல் துறையைவிட நேர்த்தியாக குற்றவாளிகள் பயன்படுத்துவதால் சவாலான ஒன்றாக இருக்கும் கட்டுக்கடங்காத நிலையில் காவல் கடைசியில் துப்பாக்கி எடுத்து போராடவேண்டிய நிலை வளர்த்துவிட்ட காக்கிகளையே காவுகேட்கும் கூலிப்படை.
            இப்படி தமிழகம் முழுவதும் கூலிப்படைகளை வைத்து செயல்பட்ட திண்டுக்கல் பாண்டி சமீபத்தில் காவல் அதுரையினரின் அசத்தலான நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு தமிழகம் மட்டுமல்ல அண்டை மாநிலங்களிலுமுள்ள கூலிப்படையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .  குற்றம் சிறியதோ பெரியதோ அதற்கேற்றார்போல தண்டனைகள் இருந்தால்தான் தமிழகத்தில் மட்டுமல்ல உலகில் அமைதி ஏற்படும் , அதற்கு காவல் துறை தயக்கம் காட்டக்கூடாது .

..

உலக அழிவை தடுக்க...

Thursday, February 11, 2010

             அமரிக்காவை ஒட்டியமைந்துள்ள கரிபியன் தீவான ஹைத்தி யில் கடந்த ஜனவரி பனிரெண்டாம் தேதி ஏற்பட்ட நிலநத்க்கத்தில் 2,30,000  பேர் உயிரிழந்தனர். இது உலகெங்கிலும் மனிதகுலத்திற்கு பெருத்த அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கோபன் ஹெகன் புவி வெப்பநிலை மாநாடு:
             கடந்த டிசம்பர் 7-18 வரை நடைபெற்ற உலக அளவிலான மாநாட்டில் உலகின் 192 நாடுகளை சேர்ந்த பிரதம மந்திரிகள் , அதிபர்கள் , அமைச்சர்கள் , தன்னார்வ அமைப்புகள் என அனைவரும் கலந்துகொண்டு உலகின் வெப்பநிலை உயர்வு , பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து தீவுகள் கடலுக்குள் மூழ்குதல் , சுனாமி, புயல்,கடுமையான வறட்சி, நிலநடுக்கள் போன்ற பேரிடர்கள் குறித்தும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் விவாதித்தனர் இதில் வளர்ந்துவாரும் நாடுகள் பொருளாதார மேம்பாடு ,வளர்ச்சித்திட்டங்கள் உள்ளிட்ட காரணங்களை காரணம் காட்டி பசுமை இல்லை வாயுக்களை வெளி விடுவதை  குறைப்பதை மறுத்து நழுவிவிட்டனர். வல்லரசு நாடுகள் வளர்ந்துவரும் நாடுகள் பசுமை இல்லை வாயுக்களை வெளியேற்றத்தை குறைக்க அதற்கான நிதி உதவியை அமரிக்க அளிக்கும் என அறிவித்தது.

வளர்ந்துவரும்,வல்லரசு நாடுகளின் போட்டியால் அழிவின் விளிம்பில் தீவுகள்:
              
            உலகின் எழில மிகுந்த ஹைத்தி , சுமித்ரா உள்ளிட்ட ஏராளமான தீவுகள் கடலுக்குள் செல்லும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றன.சக நாடுகளில் வாழும் சக மனிதர்களின் உயிர்களை காக்கவும், எதிர்கால தலைமுறைக்கு எழில் சூழ்ந்த பாதுகாப்பான உலகை விட்டுசெல்ல மனமில்லாத வல்லரசு நாடுகளின் சுய நலம் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இவர்கள் வெளிவிடும் பசுமை இல்லை வாயுக்களின் வெளியேற்றத்திற்கு பொறுப்பேற்றால் அதற்கான விலை தருவதாக அமரிக்க போன்ற வல்லரசுகள் தெரிவிப்பது அந்நாட்டிற்கு அடிக்கடி வரும் ஹரிக்கேன் சுறாவளி போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை மறந்துவிட்டது போலும் .  எது எப்படியோ அமரிக்க தாழ்த்தப்பட்ட இனத்தின்(கறுப்பரினத்தின்) தலைவர் ஒருவரை ஏற்றுக்கொண்டதிலிருந்து தனது நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே நல்வழிபிறக்கும் என எண்ணிய அமரிக்க உள்ளிட்ட உலக மக்களின் எண்ணங்களுக்கு ஏமாற்றம் நேர்ந்துள்ளது.
அமரிக்க எப்போதும் பொருளாதார முன்னேற்றம் குறித்து கவலைப்படுமே தவிர மக்களை சூழல் , எதிர்காலம் குறித்து கவலைப்பட்டதில்லை அதை புதிய அதிபரும் பின்பற்றுவது வேதனை.
காக்க காக்க ......
         புவி வேப்பமடைவதற்கும் காலநிலை மாற்றத்திற்கும் கடந்த 100 ஆண்டுகளுக்குமேலாக வெளியிடப்பட்ட கரியமிலவாயு உள்ளிட்ட பசுமை இல்லை வாயுக்களை வெளியேற்றத்தின் விளைவுகளை நம்மால் தடுக்க முடியாது ;ஆனால் இனி வெளியிடப்படும் வாயுக்களை நாம் நிச்சயம் குறைக்கவேண்டியது அவசியம் அதை வல்லரசுகள் உணர்ந்து உலகை காக்க தானும் அது தொடர்பான நடவடிக்கைகளில் உடன் இறங்கவேண்டும்.  இயற்கையுடன் இணைந்த வாழ்வு மட்டுமே இனிக்கும் இல்லையேல் நமது அழிவு உறுதிசெய்யப்படும் .......


..

அன்புமணிக்கு இளைஞர்களின் சலாம்





           இந்திய அரசு கடந்த 2004 மே முதல் தேதியிலிருந்து புகையிலை தடைசட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தது. இதை மாநில அரசுகள் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென மத்திய அரசின் மக்கள் நலவாழ்வு அமைச்சர் மருத்துவர் இரா.அன்புமணி ராமதாஸ் தெரிவித்து , சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசு அதிகாரிகளின் பதவிகளின் பெயர்களை வெளியிட்டார் மாவட்ட சுகாதார செவிலியர் , கிராம சுகாதார செவிலியர் , மருத்தவ கல்லுரி முதல்வர், மருத்துவ இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் ,துணை இயக்குனர்கள், மருத்துவர்கள்,பள்ளி முதல்வர்கள்,உதவி ஆய்வாளர் அந்தஸ்த்திற்கு குறையாத காவல் துறை அதிகாரிகள்.
            இந்த சட்டத்தில் பொது இடங்கள் எவை என தெளிவாக குறிப்பிடப்படவில்லை என சட்டம் வழக்கம் போல காற்றில் பறந்தது , ஆனால் அமைச்சர் மனம் தளராமல் மீண்டும் சட்டத்தை முறையாக  சட்டத்தில் பொது இடங்களின் விவரங்களை குறிப்பிட்டு கடந்த அக்டோபர் இரண்டாம் நாள் தேச தந்தை அண்ணல் மகாத்மாகாந்தி அவர்களின் பிறந்த நாள் அன்று முதல் நடைமுறைப்படுத்தி அதை மாநில அரசுகள் தீவிரமாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டார் பெண்கள் , புகைபிடிக்காதவர்கள் மத்தியிலும் , சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது .  இந்த அறிய செயலுக்காக மருத்துவர் அன்புமணிக்கு  உலக நாடுகளின் பொதுமன்றமான ஐ.நா. பொதுசபையில் நடைபெற்ற உலக தலைவர்கள் மாநாடொன்றில் லூரதர் எல் டெர்ரி  என்னும் உயரிய விருதை உலக நாடுகளின் தலைவர்கள் வழங்கி கவுரவித்தனர். 
   fdfddfdsdsafdsasdபின்னர் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் புகையிலை ஒழிப்புக்காக விருதுவழங்கி கவுரவித்தார்.  ஆனால் சட்டத்தை தீவிரமாக ஒருசில இடங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தினர் பலஇடங்களில் கண்டுகொள்ளவில்லை ; எனினும் அவரின் பசுமைதாயகம்மூலமும் , அவரின் வலியுறுத்தல் மூலமும் மக்களிடம் நாளடைவில் விழிப்புணர்வு ஏற்பட்டு மக்களே புகை என்னும் அரக்கனிடமிருந்து விலகி வருகின்றனர் இதனை புகையிலை தயாரிப்புகள் விற்பனை குறைந்துவருவது சாட்சியாக ஊடகங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.  
pffஅன்புமணியின் புகையிலை தடைசட்டத்தை இளைஞர்கள் ஏற்பு 
       நாளொன்றுக்கு 2500 மனித உயிர்களை கொலை செய்யும் புகையிலை பொருட்கள் நாட்டில் மட்டுமல்ல உலகில் எங்கும் இல்லை என்ற நிலைக்கு இந்தியா முன்மாதிரியாக விளங்க உரிய அனைத்து நடவடிக்கைகளை பதவியின் நலன் சுகங்களை பாராமல் துணிச்சலுடன் செயல்பட்ட விதத்திற்கு மக்களிடம் அங்கிகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியானது. இந்த விருதுகள் அனைத்து விருதுகளிலும் முதலானது.  வாழ்க மருத்துவர் அன்புமணி சிறக்க அவரின் சமூக நலப்பணிகள்.



தனிநாடு கேட்கும் பால் தாக்ரே....

Friday, February 5, 2010

           இந்தியாவின் மிகப்பெரிய மாநகரங்கள் (metrocorporation-Mcity) மும்பை , கொல்கத்தா , டெல்லி , சென்னை இவற்றில் மும்பை அவ்வப்போது தீவிரவாத தாக்குதல், வன்முறை, இறையாண்மைக் கெதிரான  பேச்சுக்கள் இவைகல்லால் பரபரப்படைவது வாடிக்கை. சமீபத்தில் சிவசேன கட்சியின் தலைவர் பால்தாக்ரே மும்பை மராட்டியர்களுக்கு மட்டும்தான் சொந்தம் வட இந்தியர்களுக்கு அல்ல என வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது பேரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.  இவரது பேச்சுகளுக்கு அவ்வப்போது சில பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம் இந்த முறை பிரபல கிரிக்கெட் வீரரும் மும்பை மண்ணின் மைந்தருமான சச்சின் டெண்டுல்கர் இந்தியா இந்தியர் அனைவருக்கும் சொந்தம் என பேசி ஒருமைப்பாட்டுக்கு வலுசேர்த்து உள்ளார் ஆனால் சிவசேன தலைவர் பால்தாக்கரே எதிர்ப்பை தேடிக்கொண்டுள்ளார்.இந்த வரிசையில் இந்தி நடிகர் ஷாருக்கான் ,காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ராகுல் காந்தி , மகாராஷ்டிர முதல்வர் உள்ளிட்ட பலரும் பால்தாக்கரே கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததால் அவர் கோபமடைந்து , ஷாருக்கான் திரை படங்கள் பாதிப்படைந்தால் நாங்கள் பொறுப்பல்ல என பேசி வன்முறைக்கு அழைப்புவிட்டிருக்கிறார் .
இந்தியாவின் நுழைவுவாயில் 
           கேரளா மண்ணின் மைந்தர்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தேநீர் கடைகளையும், வணிக நிறுவனங்களையும் , அரசு பணிகளையும் செய்து வாழ்கின்றனர், அதேபோல் மும்பை , கர்நாடகா, ஆந்திரா,தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட அனைத்து மாநில மக்களும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பணிபுரிகின்றனர் அதற்கு நமது அரசியல் சட்டம் வழிவகை செய்கிறது .  ஏன் வெளிநாடுகளில் கூட சென்று பணிபுரிய புலம் பெயர் சர்வதேச தொழிலாளர் சட்டம் வழிவகைசெயகிறது.  நமது நாடு பல மொழிகள் பேசுகின்ற மக்கள் வாழ்வதால் அவர்களின் விருப்பப்படி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது .   ஆனால் பிரமாநிலத்தவர்கள் பணிபுரியக்கூடாது என கர்நாடக, மும்பை போன்ற மாநிலங்களில் மட்டுமே சில அரைவேக்காட்டு அரசியல் வாதிகள் மிரட்டுகின்றனர்.  முதலில் அந்த மாநில மக்களின் புலம்பெயர்தலையோ , பிறமாநில அரசுவேலை,(மத்திய அரசு பணி) , மின்சாரம் உள்ளிட்ட தேவைகளை புறக்கணித்தால் இது நியாயமானது.  நெய்வேலி அனல்மின்னிளையத்தில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கர்நாடக, மராட்டியர்கள் பணிபுரியலாம், கர்நாடகாவிற்கு மின்சாரம் தேவைப்படுகிறது; ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது  என்பது வெட்கமாக இல்லையா? இந்தியா என்ற ஜனநாயக நாடு அனைத்து மொழிகளை பேசுகின்ற அனைத்து மக்களும் எங்கு வேண்டுமானாலும் வசிக்க , பணிபுரிய , எந்த மதத்தையும் சார்ந்திருக்க வழிவகை செய்கிறது.  மராட்டிய இந்தியாவில் ஒரு மாநிலம் தானே தவிர தனி நாடு அல்ல என்பதை உணரவேண்டும் மராட்டியர்களுக்கு மட்டுமே மும்பை சொந்தம் என வன்முறையை தூண்டிவிடுவது இந்தியாவிலிருந்தும் இந்தியா மக்களிடமிருந்தும் மராடியர்களையும், மராட்டிய மாநிலத்தையும் தனிமைப்படுத்தும் ஒரு துர்பாக்கிய நிலையை மட்டுமல்ல சர்வதேச அளவில் வளர்ந்துவரும் பெரு நகரங்களில் புகழ்பெற்றுவரும் மும்பை அந்த வாய்ப்பை இழக்கவேண்டிவரும் . அந்த மாநில மக்களின் விருப்பத்திற்கு எதிராக பால்தாக்கரே மட்டுமல்ல வேறு யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநில , மத்திய அரசுகள் தயங்கினால் சம்பந்தப்பட்ட மாநில மக்கள் பிற மாநிலங்களுக்கு செல்ல, வசிக்க, பணிபுரிய வேண்டிய வாய்ப்பை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் , எனவே இறையாண்மை மீது அக்கறை செலுத்திவரும் காங்கிரஸ் அரசு உடனே அவர்களை தேசப்பதுகப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் . 


.









இறந்துபோகும் ஜீவநதிகள் ; நடந்தேறும் மணல் சுரண்டல்

Tuesday, February 2, 2010

         விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாககொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு நமது நாடு , ஆனால் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை இல்லாத நாடு .  கிட்டத்தட்ட 50 நதிகள் சீறிப்பாய்ந்து வளமாக்கிய நேரம் ஒருகாலம்.  சிந்து, கங்கை , பிரம்மா புத்திரா,நர்மத,தபதி, மகாநதி, தாமிரபரணி உள்ளிட்ட 14 பெரிய நதிகளையும் இதர சிறிய நதிகளையும் கொண்டது.  ஜன நாயக நாடு என்பதாலோ என்னவோ நாட்டின் வளங்களை யார் வேண்டுமானாலும் சுரண்டலாம் என்ற எழுதப்படாத விதியை வைத்துக்கொண்டு நாட்டை வளம் கொழிக்கவைத்து எழில்கொஞ்சும் இயற்கை வளங்களால் அன்னியதேசத்தினரை கவர்ந்திழுத்த நதிகளின் நதிநீரை தனியாருக்கு தாரைவார்த்து , சட்டவிதிகளுக்கு மாறாக நதிகளில் மணல் கொள்ளை பல மீட்டர்களுக்கு தோண்டி பல கிராம நகரங்களுக்கு கிடைக்கும் கூட்ட குடிநீர் திட்டத்திற்கு வேட்டுவைத்து  நதிகளை முள்புதர்கள் மண்டி அதன் போக்கை மாற்றி வெள்ளம் ஊருக்குள் சென்றும்,நிலங்களுக்குள் புகுந்து உயிர்,பொருளாதார பேரழிவை ஏற்படுத்துகின்றன.   சரஸ்வதி போன்ற நதிகள் புவிக்குள் ஓடும் நாதிகளாகிப்போனது.  தென்பெண்ணை போன்ற பல நதிகள் அழிவைத்தேடிகொண்டிருக்கின்றது.
             அரசு மணல் குவாரியை ஏற்ற பின்னும் மணல் சுரண்டல் , கொள்ளை தொடருவது தமிழகத்தில் வெட்ககேடானது.
அரசின் நடவடிக்கையும், பொதுமக்கள் போராட்டமும்:
         இன்று இயற்கை வளங்களை மட்டுமல்ல மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட்களையும்  அரசியல் வாதிகள் , குண்டார்கள் என பலரும் சுரண்டவும் கடத்தவும் செய்கிறார்கள்  இதற்கு மக்கள் ஒன்றாக இணைந்து போராடவும் , எதிர்க்கவும் முன்வரவேண்டும்.  போராட்டங்கள் நிறைந்த உலகில் நமது தேவைகளுக்கும் , நமது வளங்களை பாதுகாப்பதற்கும் போராடவேண்டும்.  ஏனெனில் இயற்கை வளங்களில் தான் நமது பொருளாதாரமும், வாழ்வின் ஆதாரமும் உள்ளது. அரசு நதிகளை மட்டுமல்ல நீர்மூலங்களை பாதுகாக்கவேண்டியது அவசியமும் கடமையும் ஆகும்.  ஏரிகள் தூர்வாரப்படும் , புதிய ஏரிகள் வெட்டப்படு என அறிவித்துவிட்டு  ஏரிகளில் அலுவலகங்கள் , பேருந்துநிலையங்கள் , கல்லூரிகள் என சட்டத்தை மதிக்காமல் அரசே ஏரிகளை ஆக்கிரமித்து செயல்படுவது மானக்கேடு மட்டுமல்ல ஜனநாயக படுகொலை அரசு இத்தகைய செயல்களை கைவிடவேண்டும் .
மத்திய அரசும் நீர்வள ஆணையம்:
       நதிகள் செல்லும் மாநில அரசுகள் நதிகளை எண்ணற்ற அணைகளை கட்டி திருப்பி விடுகின்றனர், இது நதிகள் பாதுகாப்பு சட்டத்திற்கு முரணானது பிறமாநில மக்களுக்கு குடிக்க , விவசாயத்திற்கு தண்ணீர் தர மறுப்பது இந்தியா இறையாண்மையை பதிக்கும்செயல் இது உல் நாட்டு கலவரங்களை தூண்டிவிடும் செயல் .  ஒற்றுமையுள்ள நாட்டில் நீரினால் பிரிவினைகள் ஏற்படுவதை தடுக்க நடுவணரசு நதிகளை தேசமயமாக்கவேண்டும் , அணைகட்டும் மாநில அரசு சட்டப்படி அடுத்த மாநிலத்தின் அதாவது கடைமடை விவசாயிகளின் அரசை அணுகி ஆட்சேபனை இல்லை ஒப்புதல் பெற்று அணைகட்ட அறிவுறுத்தவேண்டும். அப்போதுதான் பிறமாநில மக்கள் உரிமை மட்டுமல்ல நலனும் பாதுகாக்கப்படும் . மத்தியஅரசு முதலில் நதிகளை தேசமயமாக்கி, அனைத்து நதிகளையும் தூர்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டு மணல்கொல்லைகள் தடுக்கப்பட்டாலே நதி நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும்.  அனைத்து நதிகளும் அனைத்து இந்தியருக்கும் சொந்தம் என்ற நிலை ஏற்பட்டாலே ஒக்கேனக்கல் திட்டங்கள் எளிதில் நிறைவேறும்.

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger