தமிழகத்திற்குள் பவானி இனி பவனி வருமா

Friday, February 26, 2010


       நீலகிரி மலையின் உச்சியிலிருந்து உற்பத்தியாகி தமிழ்நாடு,கேரளா ,கர்நாடக மாநிலங்களில் பயணிக்கிற நதிதான் பவானி.217 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நதி தமிழகத்தின் இரண்டாவது பெரிய நதியாகும் .  நதியின் நீளத்தில்
        தமிழகத்தில் 87 சதவீதமும்,கேரளாவில் 9 சதவீதமும்,கர்நாடகாவில் 4 சதவீதமும் ஓடுகின்ற இந்த ஜீவனதியை ஜீவனமில்லாமல் செய்ய கேரளா முயற்ச்சிக்கிறது.
       பவானி நதி தமிழகத்தில் பாசனத்திற்காக ,குடிநீருக்காக பெரும்பங்கேற்கும் மாவட்டங்கள் கோவை,ஈரோடு ஆகிய மாவட்டங்கள் . பயன்பெறும் முக்கிய நகரங்கள் முக்காலி,ஆதிக்கடவு,கூடப்பட்டி,மேட்டுப்பாளையம்,பவானிசாகர்,சத்தியமங்கலம்,ஆப்பகூடல்,ஆவூடையப்பாரி ,பவானி.
இந்த முக்கிய நகரங்கள்,கிராமங்கள்  உள்ளிட்ட ஏராளமான மக்கள் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் நம்பியுள்ளனர் இவர்களின் அடிப்படை வாழ்வாதாரமான குடிநீர் தேவையை நிறுத்த கேரளா அரசு அதன் எல்லையில் புதிய அனைகட்டிதடுத்திட முயல்கிறது .   சம்பந்தப்பட்ட தமிழக மக்களை ஏமாற்ற முயலும் கேரளாவை தடுத்து நிறுத்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கைஎடுக்காமல் ஏற்கனவே புதிய அணையை முல்லைபெரியார் அணைக்கு கூடுதலாக கட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பினை மீறி வருகிறது.  இந்நிலையில் பவானியும் இனி தமிழகத்திற்குள் பவனி வருமா தமிழகத்தின் மேற்குமாவட்ட மக்களை காக்குமா என்பது கேள்விக்குறிதான். சம்பந்தப்பட்ட மாநில மக்களின் அல்லது அரசின் ஒப்புதலின்றி அணைகட்டும் கேரளா அரசின் நடவடிக்கை நீர்வளபாதுகப்பு சட்டம் (மத்திய அரசு) ,உச்சநீதிம்ற உத்திரவு மீறல் இவற்றிற்கெல்லாம் தமிழக அரசின் முடியாதனம் மக்களுக்கு விடியளைத்தருவது காலத்தின் கையில்.

?














      

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger