கொள்கையற்ற அரசியலால் விலைவாசிஉயர்வும்,வறுமையும்

Friday, February 26, 2010


          நாட்டின் பொதுமக்களை சமீபகாலமாக வாட்டிவதைக்கிற விஷயம் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ஏற்றம் விஷம் போல கட்டுக்கடங்காமல் ஏறிவருவதுதான்.  குழந்தைகளுக்கு தரும் பால் சமையலுக்கு பயன்படும் உப்பு ,காய்கறி , பருப்பு,சர்க்கரை,அரிசி,எண்ணெய் போன்றவைகளின் விளைஎற்றாம் நடுத்தர குடும்பங்கள் , ஏழைக்குடும்பங்கள் என ஒட்டுமொத்தமாக பாதித்துள்ளது.  உணவகங்களில் சாப்பிட சாதாரண ஓட்டல்களில் ரூ.25-35, பெரிய ஓட்டல்களில் 50 ரூபாய் முதல் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற நிலையில்.   ஏழை நடுத்தர குடும்பங்கள் மூன்று வேலை நல்ல சத்தான சாப்பாட்டை சினிமாக்களில் காணவேண்டிய நிலையாகிவிடும் என தோன்றுகிறது. வசதிபடைத்த  பணக்கார மனிதர்கள் ஒருகார் வாங்கினால் இன்னொரு காரை வாங்கும் நிலை நாட்டில் வளர்கிறது.  ஆனால் ஏழை இன்னும் ஏழையாகவே கீழிறங்கும் நிலை நிலவுகிறது.
                 இந்தியாவில் சில வருடங்களாக விலைவாசி ஏற்றம் குறித்த பல கருத்துக்கள் உலா வருகிறது.  ஆனால் அத்தியாவசிய பொருட்களான அரிசி,பருப்பு உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் வர்த்தகமாகிவிட்டதால் ,வெளிமாநிலங்கள்,வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி,கடத்தல் ,பதுக்கல் உள்ளிட்ட செயல்களால் விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறிவருகிறது.   இதை தடுக்க பொதுவழங்கள்துறையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அரசு தவறியது விளைஎற்றத்திற்கும் வறுமை அதிகரிப்பிற்கும் காரணமாக அமைந்தது.
கொள்கையற்ற வறுமை ஒழிப்பு திட்டம் தோல்வி:
            மத்திய ,மாநில அரசுகள் வறுமை ஒழிப்பிற்கு வாக்குறுதிகள் ,திட்டங்களை பொதுமக்களுக்கு அளிப்பார்கள் ஆனால் நடைமுறைப்படுத்துவதற்கான நிலையான திடனான கொள்கையை நடைமுறைப்படுத்த்தும்வரை  விலைவாசி உயர்வும்,வறுமையும் தீவிரமடியும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.  


0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger