கல்வி அரசுடமையாக்கப்படவேண்டும் ; சாராயம் ஒழிக்கப்படவேண்டும்

Sunday, November 29, 2009

     
 தமிழகம் சட்டத்தை பொதுமக்களும், அதிகாரிகளும் மதிக்கின்ற மாநிலங்களில்




முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக திகழ்ந்தது. ஏனெனில் இங்கு ஆண்ட மன்னர்களும் அதனைதொடர்ந்துவந்த ஆட்சியாளர்களும் அதாவது பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா , காவல் துறை அமைச்சர் கக்கன் போன்ற முன்மாதிரியாக ஆட்சியாளர்கள் வாழ்ந்து இருக்கின்றார்கள். பொதுமக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல் பட்டு வந்ததால் அதனை பொதுமக்களும் , அதிகாரிகளும் அதனை பின்பற்றிவந்தனர் அதனால் தான் என்னவோ தமிழக உலகிற்கு அமைதி பூங்காவாகவும் , உலகின் இதர நாட்டின் குடிமக்கள் பின்பற்றும் அளவிற்கு நமது கலாச்சாரம் இருந்திருக்கிறது.



சுயநலமும் , மக்கள்நலனை பாதுகாக்கின்ற துணிச்சலும் இல்லாத ஆட்சில்யாளர்கள் கையிலேயே தொடர்ந்து அதிகாரம் இருப்பதால் அமைதிபூன்காவான தமிழகம் குண்டர்கள் , கள்ளச்சாராய,கூலிப்படைகள் , நுகர்வோரை ஏமாற்றுகின்ற கொல்லைகும்பளிடம் வணிகம் போன்ற வெட்ககேடான நிகழ்வுகள் நடைபெற்றுவந்த நிலையில் அமைதி,நேர்மையான நுகர்வு தன்மை , அடிப்படை உரிமைகள் ,இலவச தரமான கல்வி , இலவச தரமான மருத்துவம் , வழங்கல் துறையில் சுத்தமான , தரமான , அத்தியாவசிய பொருட்கள் அவர்களுக்கு உரியவகையில் கிடைப்பது கேள்விக்குரியாகிப்போனது.



அரசின் மாறும் கடமைகள்:



ஆரம்ப கல்வி முதல் கல்வி வரை இலவசமாக தரப்படும் சிறிய நாடாப் கியுபா அளவிற்கு கூட நமது 6 .5 கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் ஆரம்ப கல்விய கூட இன்னோம் முற்றிலும் இலவசமாக அரசே அனைவருக்கும் கொடுக்க சரியான திட்டத்த வகுத்தும் நடைமுறைப்படுத்த முடியவில்லை ஏனெனில் ஆரம்ப கல்வி (pre KG-Phd.,



) முதல் ஆராய்ச்சி கல்வி வரை அரசியல் வாதிகளின் கைக்குள் சிக்கி தவித்துக்கொண்டு வியாபாரத்தலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது கல்வி கோயில்கள் . மிகப்பிரம்மாதமாக கல்லாகட்டும் கடைகளாகிப்போனது கல்வி நிலையங்கள் . முன்னால் ஜனாதிபதி



ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைக்க மூன்று கிலோமீட்டருக்கு ஒரு உயர்நிலை பள்ளி திறக்கவேண்டியது அவசியம் என்று கூறினார்.



அதை தவறாக புரிந்து கொண்ட அரசு தெருவெங்கும் சில ஆயிரங்களை கறக்கும் மழலையர் பள்ளிகள் , லட்சங்களை கறக்கும் பொறியல், மருத்துவக்கல்லுரிகள் மிகப்பெரிய வர்த்தக நிருவனங்களாகிப்போனது ஏழைஎளிய மக்களுக்கு உயர் கல்வி எட்டாக் கனியாகிப்போகச்செய்தது , சேவை வணிக மையமாகி போகச்செய்தது எது?



அது தவிர்த்து தனியாருக்கு விடவேண்டிய சாராயம் அரசுடமையாக்கப்பட்டு இளைஞர்களை சாராயம் விற்க செய்து குடிகாரர்களாகி அழிந்துபோகச் செய்தது அரசின் தர்மாம?



அரசின் நியாய விலை கடைகளில் அத்தியாவசியப்பொருள் களான அரசி , கோதுமை, மண்னென்னை போன்றவைகள் கிடைக்கசெய்யாமல் தரமற்ற சோப்புகள், ஷாம்புகள், டீ தூள் போன்ற விற்காத தரமட்ட்ற பொருட்களை அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் பணம் சம்பந்த பட்ட நிறுவனத்திடம் பெற்றுக்கொண்டு சிபாரிசு செய்து சப்பளை செய்ய வகை செய்கின்றனர் இது நுகர்வோரை ஏமாற்றும் வேலை இல்லையா?



அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் ,ஆட்டோக்கள் என மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய தினசரி சேவைகள் திடீரென அரசு அறிவிக்காமல் கட்டனங்ககளை ஏற்றுவது பொதுமக்களை வேதனையில் சிக்கவைக்கிறது மேற்படி இடங்களில் பெரும்பாலும் ரௌடிகள் ராஜ்யத்தில் பணிபுரிவதால் பொதுமக்கள் கேள்வி கேட்க தயங்குகின்றனர் . இது குறித்து அரசு அதிகாரிகளும் தங்களுக்கு கிடைக்கவேண்டியது கிடைத்தால் போதும் என நினைக்கின்றனர் நடவடிக்கை எடுக்கும் இடங்களில் உள்ளவர்கள் .



இப்படி பொதுமக்கள் களை எழுந்து வாங்கும் பால் பாக்கெட்டில் இருந்து அரசி, பருப்பு ,காய் கரி, செல்லும் ஆட்டோ, பேருந்து , அறுந்து தேனீர், சாப்பாடு இவை எல்லாமே அன்றாடம் நிர்ணயிக்கப்படுகின்ற தங்கம் மற்றும் வெள்ளி விளையைப்போன்றது அதுவும் ஒருநாள் குறையும் இதன் விலை எல்லாம் ஒரு நாள் ஏறினாள் மறுபடி இறங்காது.



பேருந்து கட்டணங்களை அரசு அறிவிப்பின்றி அரசு போக்குவரத்து கழகம், தனியார் பேருந்துகள் ஏற்றுவது எப்படி சரியாகும் . இப்படி ஒரு மனிதன் எழுந்து அலுவலக மற்றும் பிரவேளைகளுக்காக வெளியில் செல்வது பொருட்களை வாங்குவது என எங்கும் ஒழுங்குபடுத்தாதா நிலை ஊழல்கள் கீழ் நிலை முதல் மேல் மட்டம் வரை ஊழல் பெருத்துவிட்டதால் அயல்நாடுகளில் கூட நமது மரியாதை குறைந்து விட்டதை பிரதமர் சமீபத்தில் குறிப்பிட்டு சி.பி.ஐ. அதிகாரிகளை ஊழல் வாதிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் அதற்கு முன் உங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என குறிப்பிட்டார்.



இந்த தேசம் நல்ல வல்லரசாக மாற நிறைய இளைஞர் சக்திகள் நமது நாட்டில் உள்ளது , அறிவு சார்ந்த திறமைசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களின் திறமைகள் முறையாக பயன் படுத்தி ஊழலை ஒழித்தாலே இந்தியா வல்லரசாக மாறும். ஆக மொத்தம் பொதுமக்களுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை வசதிகள் , அடிப்படை உரிமைகள் விசயத்தில் தலையீடுகள் முறைகேடுகள் களையப்பட்டாலே நாடு வளம் பேரும் நல்ல பேர் பேரும்.

பார்த்தீனியம் நச்சு செடிகளை அரசு அழிக்குமா?

Saturday, November 28, 2009


            விவசாயநிலங்களிலும் , சாலையோரங்கள்,வீட்டின் தோட்டங்கள் என எங்கு பார்த்தாலும் தக்காளிச்செடியைப்போன்ற தோற்றமுடைய , வெள்ளை நிறத்திலான பூக்களை பூக்கும் ஒரு நச்சு களைதான் பார்த்தீனியம் .  இதன் பிறப்பிடம் வட மற்றும் தென் அமெரிக்கா இந்த களை தானியங்களை இறக்குமதியின்போது வந்ததாக கூறப்படுகிறது.
பார்த்தீனியம் தீமைகள்:
பார்த்தீனியம் நச்சு செடிகள் செடி முளைத்த 4 முதல் 6 வாரங்களுக்குள்ளாக பூக்களை பூத்து அதன் மூலம் நச்சு வாயுக்களை காற்றில் பரவ விடுகிறது இதனால் மனிதர்களுக்கு சுவாசக்கொலாருகளையும், தோல் நோய்களையும் ஏற்படுத்துவதோடு , பிற உயிர்களுக்கும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது .
பார்த்தீனியம் பரவும்  முறைகள் :
           நீரின் மூலமாகவும் , கால்நடைகள் இதை தின்பதால் அவைகளின் சாணங்களின் மூலமாகவும் , இந்த செடிகளின் விதைகளை சுற்றி முட்கள் போல இருப்பதால் எளிதில் காற்றில் மூலம் பரவும் .
அழிக்கும் முறைகள் :
              இந்த செடிகளை பிடுங்கி ஒரு பள்ளம் வெட்டி அதில் போட்டு சோடியம் குளோரைட் என்ற சாதாரண உப்பை கரைத்து தெளித்தால் அழிந்துவிடும். அல்லது 24D , (gamaxin ) கிரமாக்சின் என்ற ரசாயனங்களை நீரில் லிட்டருக்கு 4 மி.கி.\மி.லி. கரைத்து தெளித்தால் அழிந்துவிடும்.  இந்த களை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இருப்பதால் நீண்ட காலமாக இருப்பதால் ஒரு முறை அழிப்பதால் எளிதில் அழிந்துவிடாது , மூன்று அலது நான்கு முறை அழித்தால் இவை அழிந்துவிடும் , இவற்றை பிடுங்கி அழித்தபின் கைகளை சொப்புபோட்டு நன்கு கழுவவும் , இவைகளை பிடுங்கி போட்டாலோ அல்லது எரித்தாலோ அழியாது . இவைகளை கிராமங்கள்தோறும் சுத்தமாக அழித்து இந்த கிராமம் பார்த்தீனியம் இல்லாத கிராமம் என அறிவிக்கவேண்டும் , இதை தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்ல பொது மக்களும் செய்யலாம். சுற்றுசூழலுக்கு மட்டுமல்ல மனித வளத்தையும் காத்திட இந்த கலைகள் அழிக்கப்படவேண்டும். இதற்கு அரசு சார்பிலான விவசாய துறைகள் வழிகாட்டல் வேண்டும் அரசு ரெக்கார்டுகளில்  மட்டுமே பார்தினியும் அழிக்கப்படுகிறது நிஜத்தில்  அல்ல .அரசின் விவசாயத்துறை அதன்
கடமையை செய்யவேண்டும்.

திறந்தவெளி கழிப்பறை 15 லட்சம் பேர் சாவு

       இந்தியாவில் சுமார் 66.5 கோடிபேர் கழிவறை வசதி இல்லாமல் ஏரிகள் , குளங்கள், சாலை ஓரங்கள் , தெரு       ஓரங்கள் ,வயல்வெளிகள்,கண்மாய்கள் போன்ற இடங்களை தங்களது அன்றாட காலை கடன்களை (கழிப்பறைகளாக) கழித்திடும் இடங்களாக தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையே உள்ளது.  இதனால் வயிற்றோட்ட நோய்கள் உள்ளிட்ட நோய்களால் 15 லட்சம் குழந்தைகள் இறக்கிறார்கள். இந்தியா அரசு 1999 இல் 11 கோடியே 98 லட்சம் கழிப்பறைகள் 2012 க்குள் கட்டிமுடிக்கப்படவேண்டும் என நிர்ணயித்தது.கடந்த பத்து ஆண்டுகளாக 5.95 கோடி கழிப்பறைகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. மீதமுள்ள 6.03  கோடி கழிப்பறைகளை மீதமுள்ள இரண்டாண்டுகளில் செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க முடியுமா.  ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்டிக்கொள்ள ரூ.500 மானியம்  வழங்க அரசு கூறியது ஆனால் இத உறுதிப்படுத்த முடியாத அரசு இன்னும்  ஐம்பது சதவிதம் கூட நாம் எட்டமுடியவில்லை அடிப்படை வசதிகளை அரசு செய்து தந்தாலே நோயவர வாய்ப்புள்ள காரணிகள் அழிக்கப்படும்.கழிப்பறைகள் கிராமங்கள்தோறும் குழந்தைகள் , பெண்களுக்காக கட்டப்பட்டுள்ளவைகள் செயல் வடிவத்திற்கு வராத நிலையிலேயே உள்ளது, தண்ணீர் வசதிக இல்லை, பாதுகாப்பு அல்லது ஊரை விட்டு நீண்ட தொலைவு போன்ற காரணங்களால் சுகாதார கழிப்பறைகள் பாழடைந்த நிலையிலேயே பெரும்பாலான கிராமங்களில் உள்ளது இவைகள் அரசியல்வாதிகள் டெண்டர்  வேலைகள் முடித்து பர்சண்டேஜ் கொடுத்து பில்  பாஸ் செய்து பணம் பெற்று கொள்ளை லாபம் சம்பாதித்ததொடு முடிந்தது சுகாதார கழிப்பறைகள் கிராமங்களில் ஆரோக்கியமாக இல்லை வெட்கக்கேடான அரசியல் நமது நாட்டில் நிலைமை சுடுகாட்டில், கழிப்பறை, சாலைகள்,மருத்துவம் போன்ற அவசியதேவையான அடிப்படை வசதிகள் பேரும் ஊழலில் சிக்கிதவிப்பதால் நிலை மக்களுக்கு பயனின்றி உள்ளது. சட்டம் மட்டுமல்ல மனசாட்சிப்படியும் பணிகள் நடக்கவகைசெய்யுமா அரசு.

மேதகு.வேலுபிள்ளை பிரபாகரன் தலைமையில் போர்.

Friday, November 27, 2009

              தமிழீழ விடுதலை போராட்டத்தை கடந்த முப்பது ஆண்டுகளாக உலகில் எந்த விடுதலைபோராட்ட இயக்கமும் மேற்கொள்ளாத யுக்திகளை மேற்கொண்டு தீவிரப்படுத்திவந்த வேளையில் உடன் இருந்த கருணா போன்ற பதவி சுகத்திற்காக காட்டிகொடுத்த  எட்டப்பன்களாலும் நேசநாடாக இருக்கவேண்டிய  இந்தியா தேசத்தின் பூகோள வரைபடம் ,ஆயுதங்கள் , ராடார் , ஆயுதப்பயிற்சிகள், நிதிஉதவிகள் என விடுதலைபுலிகளின் சக்தியை வீழ்த்துமளவிற்கு அவர்களை ஆய்ந்து இலங்கை அரசிற்கு உதவி செய்ததுதான் விடுதலைப்போர் சரிவை சந்திக்க முக்கிய காரணமாக இருந்தது , பிறகு இலங்கை நாட்டின் வளங்களையும், உதவிகளையும் பெற பாகிஸ்தான்,சீனா போன்ற நாடுகளின் உதவிகள் கூடுதல் பலமாக இருந்தது. இந்தியா நாட்டின் தேர்தல் முடிவுகள் சதிகாரர்களுக்கு கை கொடுக்கும் வேளையில் விடுதலைபோராட்டத்தை இலங்கை அரசு முடிவுக்கு கொண்டுவந்தது .  இதில் பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
வேலுபிள்ளை பிரபாகரன் இறக்கவில்லை:
          வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்ததாக இலங்கைஅறிவித்ததை இந்தியா நம்பினாலும் அதை சட்டரீதியாக ஏற்க மறுத்துவிட்டது. ஏனெனில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை  அரசால் வழங்கமுடியாமல்  போனதுதான் . இந்த இறப்பு சான்றிதழ் இல்லாததால் ராஜீவ் கொலைவழக்கு இந்தியா அரசு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது , ஒவ்வொரு புலிகளின் தலைவர்கள் இறப்பிற்கும் இரங்கல் கவிதை எழுதும் தமிழக முதல்வர் இந்த முறை அதை செய்யாதது , பிரபாகரனின் டி.ஏன்.ஏ. ரேப்போர்ட் இலங்கை அரசால் வெளியிடப்படாதது , ஆயிரக்கணக்கான போராளிகள் , பொதுமக்கள் உயிரிழந்ததற்கும் , தமிழகம் உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் செய்த உயிர்தியாகத்திற்கும் அஞ்சலி உலகம் முழுவதும்  உள்ள தமிழர்களால் செலுத்தப்பட்டபோதும் மாவீரன் விடுதலை புலிகளின் இயக்க தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தாதது போன்ற நடவடிக்கைகள் அவர் உயிருடன் உள்ளதை உறதி செய்திருக்கின்றன.  இன்றைய சூழலில் அவர் உரை ஆற்றுவதை தவிர்த்தது அவர்களின் அடுத்த சர்வதேச கட்டமைப்பை பலப்படுத்த இந்த நிகழ்வை தவிர்த்திருக்கலாம் , புலிகளின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ள பிரபாகரனின் வழிகாட்டலில் தனி தமிழீழத்திற்கான போராட்டம் தொடரும் என்பது அவர் உயிருடன் இருப்பதை தான் காட்டுகிறது.
உண்மைதான் தனி ஈழம் தமிழ் ஈழம் மலரும் வரை ஒவ்வொரு தமிழனின் ஒத்துழைப்பும் தியாகமும் அவசியமானதுதான் உறுதி ஏற்போம் பிரபாகரனின் தலைமையில்  தமிழனின் விடுதலை மலரும் வரை ஓயமாட்டோம் என்று.

ஆங்கிலத்தை தூக்கிபிடிக்கும் தமிழினத்தலைவர் கருணாநிதி

             தமிழகத்தின் கல்வித்தரத்தை உயர்த்துவதர்க்காகவும், கல்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் நீண்ட நாட்களாக கல்வியாளர்கள் , அரசியல் தலைவர்கள் (மருத்துவர் ராமதாஸ் ) போன்றவர்கள் ஆரம்பகல்வியை தரமாக தர அவர்களின் புத்தக சுமையை குறைத்து , சமச்சீரான கல்வியை நடைமுரைப்படுத்தவேண்டி போராடி வந்தனர் .  கடந்த 1996  ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஏ.பி.ல். (செயல் வழி கற்றல் முறை ) கொண்டுவரப்பட்டு கடந்த இரண்டாண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது .  இந்த நிலையில் மருத்துவர் ராமதாஸ் தீவிரமான போராட்டம், கருத்தரங்குகள் , தீவிர பிரச்சாரம் செய்து அரசுக்கு கொடுத்த நெருக்கடிகாரணமாக அரசு பேராசிரியர் முத்துக்குமரன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து சமச்சீர் கல்விகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய சொன்னது , அவரும் அந்த அறிக்கையை தாக்கல் செய்தார் ஆனால் இதுநாள் வரையில் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சமச்சீர் கல்வியை அடுத்த ஆண்டுமுதல் நடைமுறைப்படுத்த நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
சமச்சீர் கல்வியா?சமரசக்கல்வியா?...
           தமிழகஅரசின் சமச்சீர் கல்வித்திட்டம் அமல் முறை ஒரு சமரசத்திட்டம் என ராமதாஸ் தெரிவித்திருந்தார் இதற்கு முதல்வர் சமச்சீர் கல்வியை கேட்டதே அவர்கள்தான் இப்போது இதையும் குறை சொல்லுகிறார்களே என வருத்தப்பட்டார் .  சமச்சீர் கல்வி அண்மைய பள்ளிமுறை , பொதுப்பள்ளி முறையில் அனைத்து அதாவது மாநில பாடத்திட்டம் , மத்திய பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம்,ஆண்களோ இந்தியன் பாடத்திட்டம் என நான்கு படத்திட்டத்திற்குமான பாடங்கள் ஒன்றாக இருக்கவேண்டும் , அண்மை பள்ளிமுறையில் வட்டாரத்திற்குள் வரும் சாதாரண தொழில்லாளி பிள்ளை, மாவட்ட ஆட்சியர் பிள்ளை, அமைச்சர் பிள்ளை என அனைவரும் அன்மைபல்லியில் கல்வி பயில வகை செய்தால் மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் .  முன்னால் ஜனாதிபதி. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வலியுறுத்தியபடி மூன்று கிலோமேட்டேருக்கு ஒரு உயர் நிலை பள்ளி அவசியம் , முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம்  பின்பற்ற  போதிய ஆசிரியர்கள் அரசு நியமிக்கவில்லை இப்படிப்பட்ட சூழலில் அரசு அமல் படுத்தப்போகும் சமச்சீர்கல்வியால் நமக்கு பதிப்பு எனக்கருதிய தனியார் பள்ளி நிர்வாக உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள் அதற்கு கல்வித்துறை அமைச்சர் தனியார் பாதிக்கப்படதவாறு நடைமுறைப்படுத்தப்படும் என்றார். சமச்சீர் கல்வி குறித்தார் கமிட்டி பரிந்துரை வெளியிடப்படாமல் அதற்குரிய சூழலை வகுக்காமல் பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது யாருக்காக நலன்பயக்க என்பதுதான் கல்வியாளர்களின் ஐயம்.அதனால்தான் என்னவோ மருத்துவர் ராமதாஸ் சமச்சீர் கல்வியா சமரசக்கல்வியா என்று வினா எழுப்பியுள்ளார்
                சமச்சீர் கல்வி குறித்த கமிட்டியின் தலைவரும் பேராசிரியருமான முத்துக்குமரன் ஒரு கருத்தரங்கில் பேசும்போது தமிழ் பாடத்திற்கு குறைவான பக்கங்களும், ஆங்கிலப்பாடத்திற்கு அதிகப்பக்கங்களையும் ஒதுக்கியுள்ளனர் என தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வேதனையை தெரிவித்துள்ளார்.
                தமிழ் இனத்தின் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் தமிழை விட ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் தருவது தமிழுக்குமட்டுமல்ல தமிழனுக்கும் செய்யும் துரோகம் இது மாற்றப்படவேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் வாழவேண்டும், தமிழனும்
வாழவேண்டும் , அதற்கு தமிழின் நலன் விரும்பி ஆளவேண்டும் .








விடுதலை புலிகளின் மாவீரர் தின உரை

எமது 2009 -மாவீரர் நாள் உரையில் தலைவர் பிரபாகரன் அவர்களது வழிகாட்டுதலில்செயல் படுவோம் என்றும்புலம் பெயர்ந்து வாழும் எமது சொந்தகள் ஒன்று பட்டுபோராட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.. எமக்காக குரல் கொடுத்தஎமது தமிழ் சொந்தங்களுக்கு,தமிழ் நாடு சொந்தங்கள் ,புலம் பெயர்ந்த தமிழர்கள்அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர் ..



மேலும் உரையின் முழு வடிவம் ...


 விடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களை கௌரவிக்கும் தேசிய நினைவெழுச்சி நாள் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களினால் இன்று அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தின அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கை பின்வருமாறு :

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2009

எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழ் மக்களே!

இன்று மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களை ஒளிவிளக்கேற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள். ‘நான்’, ‘எனது’ என்று பாராமல் தமிழினத்தின் எழுச்சிக்காகவும், தமிழ் மண்ணின் விடிவிற்காகவும் தன்னலமற்று அறப்போர் புரிந்து வீரவரலாறாகிய உத்தமர்களை வாழ்த்தி வணங்கும் திருநாள். தமிழீழத் தாய்நாட்டைக் கட்டியமைக்கும் நோக்கோடு தாயக விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கியவர்களை நினைவுகொள்ளும் எழுச்சிநாள். ஈழத்தமிழினத்தை அடிமைப்படுத்தும் அன்னிய சக்திகளின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்துத் தனிப்பெரும் சக்தியாகத் திகழும் வீரமறவர்களை மனதாரப் பூசிக்கும் புனிதநாள்.
அர்ப்பணிப்பின் உச்சத்தைத் தொட்டு தாயகப் பற்றுறுதிக்கு உதாரணமாக விளங்கிய மாவீரர்களை இன்று நினைவு கூருகின்றோம். கடல்போல திரண்டுவந்த எதிரிகளை மனவுறுதியோடு எதிர்கொண்டு மோதிய எமது மாவீரர்கள் தாயக மண்ணின் மேன்மைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தார்கள். எத்தனையோ வல்லாதிக்கச் சக்திகள் எல்லாம் எதிரியோடு கைகோர்த்து வந்தபோதும் தாயக விடுதலைக் கொள்கைக்காகவே இறுதிவரை போராடி மடிந்தார்கள். தமது உயிருக்கும் மேலாக தாம் பிறந்த மண்ணையும் தம்மின மக்களையும் நேசித்த இம்மாவீரர்கள் தியாகத்தின் சிகரமாய் தனித்துவம் பெறுகிறார்கள்.
வரலாற்று ரீதியாக எம்மினத்துக்கென இருந்த தனித்துவமான அரச கட்டமைப்புக்கள் படிப்படியாக அன்னியப் படைகளால் வெற்றிகொள்ளப்பட்டன. பிரித்தானியர் இலங்கைத்தீவிலிருந்து வெளியேறியபோது இலங்கைத்தீவை ஒரே நாடாக்கி சிங்களவரிடம் கையளித்துவிட்டுச் சென்றார்கள். அன்று தொடக்கம் சிங்களப் பேரினவாதம் தமிழர்களது உரிமைகளைப் பறிப்பதிலேயே கவனம் செலுத்திவந்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள். தனிச்சிங்களச் சட்டமென்றும் கல்வித் தரப்படுத்தலென்றும் தொடர்ந்த அடக்குமுறைகள் தமிழர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடும் நிலையைத் தோற்றுவித்தன. வன்முறையற்ற வழியில் போராடிய எமது மக்கள் மேல் திணிக்கப்பட்ட வன்முறை வழியிலான அடக்குமுறைகளும், தமிழ் அரசியல் தலைவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பின்னர் சிறிலங்கா ஆட்சியாளர்களால் கிழித்தெறியப்பட்ட சம்பவங்களும் தமது உரிமைகளைப் பெற ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்ற நிலைக்கு தமிழ்மக்களை இட்டுச் சென்றது.











ஈழத்தமிழினத்தின் மீதான சிங்களப் பேரினவாத அடக்குமுறை காலத்துக்குக்
காலம் அதிகரித்து இன்றைய நிலையில் அதியுச்சநிலையை அடைந்து தனது கோரமுகத்தை வெளிக்காட்டி நிற்கின்றது. எமக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை தொடக்கத்திலிருந்தே படிப்படியாக மீறிவந்த அரசதரப்பு, மகிந்த ராஜபக்ஷ அரசதலைவர் ஆனதும் இன்னும் மோசமான முறையில் செயற்படத் தொடங்கியது. ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட தாயகப் பகுதிகளுடன் மீண்டும் புதிய நிலங்களுக்கான ஆக்கிரமிப்புப் போரை சிறிலங்கா அரசபடை தீவிரப்படுத்தியது. தென்தமிழீழத்தில் மாவிலாறில் தொடங்கிய நிலஆக்கிரமிப்பு யுத்தம் மென்மேலும் விரிவடைந்து தமிழர்களைப் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கியது. முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை எதிர்த்து எமது இயக்கம் தற்காப்புச்சமர் மட்டும் நடாத்திக்கொண்டிருக்க, சிங்கள இராணுவம் மிகமோசமான முறையில் தனது படைநடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. சிறிலங்கா இராணுவத் தரப்பின் வலிந்த தாக்குதல்களையும் யுத்தநிறுத்த ஒப்பந்த மீறல்களையும் நிறுத்தவேண்டிய கடமைப்பாடு கொண்ட சர்வதேச சமூகமோ பெயரளவில் சில அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டு மெளனமாயிருந்தது.

இந்த ஆக்கிரமிப்புப் போரினால் எமது மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கத் தொடங்கினார்கள். சம்பூர், கதிரவெளி, வாகரை தொடங்கி தமிழரின் பூர்வீக நிலங்கள் அரசபடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மூலம் எமது மக்கள் நெருக்கமாக அடைக்கப்பட்டு அரசபடைகளின் தாக்குதல்கள் மூலம் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகள், மக்கள் தங்கியிருந்த பாடசாலைகள் மீது குண்டுவீச்சுக்கள் நடாத்தப்பட்டன. எமது தரப்பு தற்காப்புப் போரை மட்டுமே நடத்திக் கொண்டிருந்ததையும், சிறிலங்காவின் ஒருதலைப்பட்சமான யுத்தநடவடிக்கையை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததையும் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட சிறிலங்கா அரசதரப்பு, அநீதியான போரொன்றின் மூலம் நிலங்களைத் தொடர்ச்சியாக ஆக்கிரமித்தது.

தென்தமிழீழ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து வடதமிழீழத்திலும் தனது நில ஆக்கிரமிப்பைத் தொடங்கியது சிறிலங்கா அரசாங்கம். வன்னியின் மேற்குப்பகுதியில் தொடங்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் படிப்படியாக வன்னிமுழுவதும் விரிவாக்கப்பட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயரத் தொடங்கினர். 2002 ஆம் ஆண்டு சர்வதேச அனுசரணையோடு செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து தாம் விலகிக் கொள்வதாக சிறிலங்கா அரசதரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொண்டு தனது ஆக்கிரமிப்புப் போரை மேலும் தீவிரப்படுத்தியது. இந்நிலையிற்கூட யுத்த நிறுத்தத்துக்கும் அமைதிப் பேச்சுக்களைத் தொடர்வதற்கும் எமது விடுதலை இயக்கம் தொடர்ந்தும் முயற்சித்தது. இதற்கான எமது அறிவிப்புக்களையும் முயற்சிகளையும் முற்றாகப் புறந்தள்ளி தனது போர் நடவடிக்கைகளிலேயே குறியாக இருந்தது சிறிலங்கா அரசதரப்பு.

ஏற்கனவே 2004 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆழிப்பேரலை அழிவிலிருந்து படிப்படியாக மீண்டுவந்துகொண்டிருந்த எமது மக்கள் மீது மிகப்பெரும் அடக்குமுறைப் போரொன்று கட்டவிழ்த்து விடப்பட்டது. மக்கள்மேல் விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடை மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதித்தது. வன்னிப்பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதனூடாக தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் சாட்சிகளில்லாமல் நடாத்தும் தனது திட்டத்தை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தியது. இந்நிலைமையிலும் தற்காப்புப் போரைச் செய்தபடி யுத்தத்தை நிறுத்தும்படியும் அமைதிப்பேச்சுக்களை மீளத் தொடங்கும்படியும் எமது இயக்கம் சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருந்தது. எதிர்காலத்தில் நிகழப்போகும் பாரிய மனித அவலங்கள், ஆபத்துகள் குறித்து நாம் சர்வதேச சமூகத்துக்குத் தொடர்ந்தும் தெரிவித்த வண்ணமிருந்தோம்.

வன்னியில் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் மோசமான நிலையை எட்டின. நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படவும் காயமடையும் அளவுக்கும் அரசபடைகளின் தாக்குதல்கள் அதிகரித்தன. உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தடுக்கப்பட்டதன் விளைவாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பட்டினிச்சாவை எதிர்கொண்டார்கள். தம்மிடம் சரணாகதி அடைவது ஒன்றே தமிழ்மக்கள் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழியென சிறிலங்கா அரசு கூறிநின்றது.

காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனைகளும் அடுத்தடுத்துத் தாக்குதலுக்கு உள்ளாகின. மருத்துவமனைகள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தி அறிக்கையிட்ட ஒரே நாடாக சிங்கள தேசம் இடம்பெறுகிறது. இன அழிப்பின் இன்னொரு கொடூரமான அங்கமாக பாதுகாப்பு வலயம் என்று அரசு வானொலி மூலம் பிரகடனம் செய்த பின் அதே வலயத்திற்குள் பாதுகாப்புத் தேடிய அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல்களை நடாத்தியது. பாதுகாப்பு வலயம் கொலைக்களமாக மாற்றப்பட்டது. உயிரிழந்த உறவுகளைப் புதைக்கக்கூட அவகாசம் இல்லாமல் மக்கள் அடுத்த பாதுகாப்பு வலயத்திற்கு விரட்டப்பட்டனர். தொடர்ச்சியாகப் பல பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனப்படுத்திய அரசு கொலைவெறித் தாக்குதல்கள் மூலம் எமது மக்களை இராணுவத்தின் பிடியில் சிக்க வைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்பட்டது.

மருத்துவமனைகள், பாடசாலைகள், மக்கள் கூடுமிடங்கள், மக்கள் வாழ்விடங்கள் என்று தொடர்ச்சியான கொலைவெறித் தாக்குதல்களை நடாத்தி ஆயிரணக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்தது சிங்கள அரசபடை. எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு தோளோடு தோள்நின்று எம்மைக் காக்கவும் வளர்க்கவும் பாடுபட்ட எமது மக்கள் கோரமான முறையில் வேட்டையாடப்பட்டார்கள். பன்னாட்டு உதவிகளோடு நவீன ஆயுதங்களையும் யுத்த நெறிகளுக்கு மாறான கொடூர ஆயுதங்களையும் கொண்டு எமது மக்கள் மேல் சிறிலங்கா அரசு தாக்குதலை நடாத்தியது. கொத்துக் குண்டுகள், இரசாயன ஆயுதங்களான வெள்ளை பொஸ்பரஸ் எரிகுண்டுகள், தேர்மோபாரிக் குண்டுகள் என்பன வான், தரை, கடல் மார்க்கமாக அப்பாவிப் பொதுமக்கள் மீது ஏவப்பட்டன. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்கா அரசால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் என்ற மிகக்குறுகிய நிலப்பகுதிக்குள் மக்கள் நெருக்கமாக அடைபட்டிருந்த நேரத்தில், தாம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று பன்னாட்டுச் சமூகத்துக்கு அளித்த வாக்குறுதியையும் மீறி எமது மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அகோரத் தாக்குதலை நடத்தியது சிறிலங்கா அரசு.

எமது மக்களின் இந்த இழப்புக்களையும், ஆபத்துக்களையும் கருத்தில் கொண்டு நாம் பலதடவைகள் போர்நிறுத்த அறிவித்தல்களை மேற்கொண்டோம். அனைத்துலகச் சமூகத்திடம் பொதுமக்களை பெரும் இழப்புக்களில் இருந்து பாதுகாக்குமாறும், அதற்கான ஒத்துழைப்பினை நாம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தோம். புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்ற மக்கள் தமது நாடுகளின் ஊடாக இந்தக் கோரிக்கைகளை விடுத்திருந்தனர். எமது புலம்பெயர்ந்த உறவுகள் தாயகத்தில் அல்லலுற்றுக்கொண்டிருந்த மக்களுக்காக பல்லாயிரக்கணக்கில் வீதிகளில் திரண்டுநின்று என்றுமில்லாத பேரெழுச்சியோடு கனவயீர்ப்புப் போராட்டங்களையும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் சாத்வீக வழியில் தொடர்ந்து முன்னெடுத்தார்கள். இதன் ஒருபடி மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழரல்லாத வெளிநாட்டவர்களும் பங்குபற்றி வலுச்சேர்த்தார்கள்.

அதேநேரத்தில் எமது தமிழக உறவுகள் எம் மக்களின் மீதானஇனப்படுகொலையைக் கண்டித்துக் கொந்தளித்தார்கள்அவர்களின்தன்னெழுச்சியான போராட்டங்கள் அங்கே பேரெழுச்சியை ஏற்படுத்தின.உணர்வாளர்கள் பலர் அர்ப்பணிப்பின் உச்சநிலைக்குச் சென்று தம்மையே தீயிற்கருக்கினார்கள்முத்துக்குமார் தொடக்கிவைத்த தீ மேலும் பரவி ஜெனிவாவின்முற்றத்தில் முருகதாஸ் வரை மூண்டிருந்ததுஈழத்தமிழரின் அழிவையும்அவலத்தையும் தடுக்க உலகெங்கும் தன்னெழுச்சியாக நிகழ்ந்த தமிழ்மக்களின்போராட்டங்கள் பலனற்றுப் போயின.

உலக நாடுகள் தமிழ்மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் தொடர்பில் அக்கறை எடுக்காது பாராமுகமாக இருந்தன. கண்துடைப்புக்காக எடுக்கப்பட்ட சில நகர்வுகளைக்கூட சிறிலங்கா அரசாங்கம் தூக்கி வீசியது. அதேவேளை வன்னியில் எமது மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் உச்சக்கட்டத்தைத் தொட்டிருந்தது. மக்கள் எங்குமே செல்ல முடியாதவாறு கனரக ஆயுதங்களைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டது சிங்கள அரசு. இதனால் சாவும் அழிவும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக உணவின்றி, மருத்துவ வசதிகள் இன்றி ஒரு குறுகிய இடத்திற்குள் இருந்து எமது மக்கள் வதைபட்டார்கள்.

சிங்கள அரச படைகளின் கையில் சிக்கினால் ஏற்படப்போகும் துன்பத்தை உணர்ந்த மக்கள் ஒரு பாதுகாப்பான மூன்றாம் தரப்பின் கண்காணிப்பில் செல்வதற்கே தயாராக இருந்தார்கள். அதுவரை எம்மக்களை சிங்கள அரசபடைகள் அணுகாதவாறு இறுதிவரை போராடினோம். சிறிலங்கா இராணுவ இயந்திரம் பாரிய ஆளணி வளத்தோடும் படைக்கலச் சக்தியோடும் தாயக மண்ணை ஆக்கிரமித்து முன்னேறியபோதும் தமிழரின் வீரமரபை நிலைநிறுத்திப் போர் செய்தோம். புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் எழுச்சியான ஆதரவோடும் தம்மையே தகனம் செய்யும் எமது சகோதரர்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்போடும் வீறுடன் போர் செய்தோம். ஆனால் எமது சக்திக்கு மீறிய வகையில் வல்லாதிக்கங்களின் கரங்கள் சிங்கள அரசைப் பலப்படுத்தின. அனைத்துலகமும், ஐக்கிய நாடுகள் சபையும் வெறும் வார்த்தைகளால் மட்டுமே செயற்பட்டுக்கொண்டிருந்தன. அத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் எதிரான இன அழிப்பைத் தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் சமரசம் செய்து கொண்டிருந்தன. சிலநாடுகள் தமது அரசியல், இராணுவ அதிகாரிகளை அனுப்பி சிங்கள அரசுக்கும் அதன் இராணுவத்திற்கும் ஆக்கமும், ஊக்கமும் அளித்தன.

இந்நேரத்தில் எமது மக்களை மிகப்பெரும் மனிதப் பேரழிவிலிருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளையே சிங்களத் தரப்பும் நடுவர்களாகச் செயற்பட்டவர்களும் முன்வைத்தார்கள். எமது போராட்டத்தையும் அரசியல் வேட்கையையும் புரிந்துகொள்ளாமல் தமது சொந்த நலன்களின் அடிப்படையில் எல்லோரும் செயற்பட்டார்கள். இது எமக்கு மிகவும் ஆழ்ந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆயினும் எமது நிலைப்பாட்டை அவர்களுக்குத் தொடர்ச்சியாக விளக்கி வந்தோம்.

இறுதிநேரத்தில் எமது மக்களையும் காயமடைந்த போராளிகளையும் பாதுகாக்கும் நோக்கோடு சர்வதேச சமூகத்துடன் தொடர்புகொண்டு எம்மால் எடுக்கப்பட்ட உடனடி முயற்சிகளும் நாசகாரச் சதித்திட்டத்தின் மூலம் நிர்மூலமாக்கப்பட்டன. மிகவும் அநீதியான முறையில் தான்தோன்றித்தனமாக சிங்களத் தரப்பு நடந்துகொண்டது. வல்வளைப்புக்குள் அகப்பட்ட மக்கள் பலரைக் கோரமான முறையில் கொன்றொழித்தார்கள். உலகில் எங்குமே நடந்திராத கொடுமைகளை எல்லாம் எம்மக்கள் மீது சிறிலங்கா அரசபடை நிகழ்த்தியது. இம்மனிதப் பேரழிவில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஓரிரு நாட்களுக்குள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.

பன்னாட்டுச் சமூகமும் சிறிலங்கா அரச தரப்பும் உறுதியளித்ததை ஏற்றுக்கொண்டு தமது உயிரைப் பாதுகாப்பதற்காக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது மக்கள் தடுப்புமுகாம்களில் குடிநீருக்குக் கூட வழியின்றி அடைக்கப்பட்டிருந்தார்கள். ஆறுமாதங்களைக் கடந்தபின்னும் இந்த அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எமது போராட்டத்தோடு தோளோடு தோள்நின்ற மக்கள் பலர் இரகசிய தடுப்புமுகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டதோடு இன்றுவரை அவர்களைப்பற்றிய தகவல் எதுவுமே வெளிவரவில்லை.

இதேவேளை சிறிலங்கா அரசபடையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் யுத்தக் கைதிகளைக் கையாளும் சர்வதேச சட்டவிதிகளுக்கு அமைவாக நடாத்தப்படாமல் துன்பங்களை அனுபவித்த வண்ணமுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரினதும் விபரங்கள் சரிவர வெளிப்படுத்தப்படாமல், உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்படாமல், தொண்டு நிறுவனங்கள் அவர்களை அணுகவிடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் நிலை துன்பகரமானது. அதிலும் பெண்போராளிகளைத் தடுத்து வைத்திருக்கும் முறையும் கையாளும் விதமும் கண்டிக்கத் தக்கவை. குறிப்பாக திருமணமான பெண்போராளிகளை அடைத்து வைத்திருப்பது, அவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் தனித்தனியாகப் பிரித்துத் தடுத்து வைத்திருப்பது என்பன மிகவும் பாரதூரமான மனிதஉரிமை மீறல்கள். இவை தொடர்பில் காத்திரமான பணியை ஆற்றவேண்டிய தொண்டு நிறுவனங்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் மெளனமாக இருப்பது வருத்தத்துக்குரியது. தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் தொடர்பாக இவ்வமைப்புகளும் சர்வதேச சமூகமும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஓர் அப்பட்டமான இன அழிப்புப் போரைபுலிகளின் பிடியில் இருந்த மக்களைமீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்று கூறும் அரச பிரகடனம்வேடிக்கையானதுதமிழர் தரப்பில் உயிரிழப்புக்கள் ஏற்படாமல் நடாத்தப்பட்ட நடவடிக்கை என்ற இலங்கை ஜனாதிபதியின் கூற்று நகைப்பிற்கிடமானது. இந்தப் போர் தமிழ் மக்களுக்கு பெரும் உயிரிழப்பு , சொத்திழப்பு, வாழ்விட இழப்பு, சுய கௌரவ இழப்பு என்பவற்றை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத்தமிழினத்தின் பொருண்மிய இழப்பை அளவிட முடியாது. எமது மக்களின் பொருளாதார வளம் துடைத்தழிக்கப்பட்டிருக்கிறது. எமது நிலங்களுக்குரிய மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் எமது இயற்கை வளங்களும் சொந்த நிலங்களும் சூறையாடப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரம் பரிதாப நிலையை அடைந்துள்ளது.

எமது பாசமிகு தமிழ் மக்களே,

வன்னியில் நிகழ்ந்து முடிந்த மனிதப் பேரழிவைத் தொடர்ந்து எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து கொண்டிருக்கும் எமது மக்களின் பேரவலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாகவும் எமது அரசியல் இராஜதந்திர நகர்வுகளை சர்வதேசத்தில் விரிவாக்கிக் கொண்டிருக்கிறோம். எமது அமைப்பின் அரசியற்கட்டமைப்பை வெளிநாடுகளில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தச் செயற்பாடுகளையும் வழிமுறைகளையும்கூட குழப்புவதற்கும் ஒடுக்குவதற்கும் சிறிலங்கா அரசதரப்பு மிகக்கடுமையான முயற்சியில் ஈடுபடுகின்றது. உலகநாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளூடான நகர்வுகளைச் செய்ய முற்பட்ட எமது செயற்பாட்டாளர்களையும் ஆதரவாளர்களையும் கடத்துவது, கைது செய்வது, கைது செய்து தரும்படி அந்நாட்டு அரசாங்கங்களை வற்புறுத்துவது என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் ஜனநாயக வழியில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தவும் செயற்படுத்தவும் முயற்சிப்பதைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே சிங்களப் பேரினவாதம் இன்றுள்ளது.

இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் நாளிலிருந்து, மாறி மாறி பதவிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் அடையாளத்தை அழித்து தமிழினத்தை இல்லாது ஒழிக்க வேண்டுமென கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். எமது தாயக மக்களின் குரல்வளை நசுக்கப்பட்டு அவர்கள் தமது உணர்வுகளைச் சொல்லமுடியாதவாறு சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்தும் செயற்பட்டுவருகிறது. எமது மக்களுக்கு நீதியான, நியாயமான, கௌரவமான தீர்வைத் தருவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் எப்போதுமே தயாராக இருந்ததில்லை.

1956 இல் தொடங்கிய தமிழர்களுக்கு எதிரான வெளிப்படையான இனப்படுகொலை 2009 இல் உச்சக் கட்டத்தையடைந்தது. சிறிலங்கா அரசும் அதன் படைகளும் செயற்பட்டவிதம், குறிப்பாக இப்பாரிய மனிதப்பேரழிவினை ஏற்படுத்திய பின்னர் சிங்களப் பேரினவாதம் நடந்துகொண்ட முறை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நிரந்தரமான பிளவை ஏற்படுத்தியிருக்கிறது.



பாரிய மனிதப்பேரழிவைச் செய்து, தமிழர்களின் மனவுறுதியை உடைத்து, தாங்கள் நினைத்ததை தமிழர்கள்மேல் திணித்து இலங்கைத்தீவு முழுவதையும் தனது ஆதிக்கத்துக்குள் கொண்டுவர சிங்கள அரசு விரும்புகிறது. அதன் ஒரு கட்டமாக அண்மையில் யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலையும் வவுனியா நகரசபைத் தேர்தலையும் நடாத்தி தமிழ்த்தேசியத்தின் வீழ்ச்சியை உலகுக்குச் சொல்லலாமென எண்ணியது. ஆனால் தமிழ்த்தேசியத்தின் மீதான தமது பற்றுறுதியை தமிழீழ மக்கள் மீண்டுமொரு முறை தேர்தலில் வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

எம்மினத்தின் மேல் அக்கறை கொண்ட சர்வதேச நாடுகளின் கரிசனைகளையும் ஆலோசனைகளையும் கவனத்திற்கொண்டு சனநாயகப் பண்புகளை மதிக்கின்ற நாடுகளில் தாயக விடுதலையை முன்னெடுக்கும் அரசியற்கட்டமைப்புக்களை புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் உருவாக்குவது காலத்தின் கட்டாயம். இவ்வாறு மக்களால் மக்களுக்காக அமைக்கப்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் தெரிவுசெய்யப்படுவதன் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறமுடியும். இக்கட்டமைப்புக்கள் ஊடாக பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவைப்பெற்று எமது உரிமைப்போராட்டத்தை சர்வதேசரீதியில் வலுப்படுத்த முடியும். தமிழீழ இலட்சியத்தை நோக்கிய எமது மக்களின் போராட்டத்துக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புக்களும் அதன் செயற்பாட்டாளர்களும் எமது இலட்சியமான தமிழீழத் தனியரசுக் கோட்பாட்டிலிருந்து விலகிப் போவதை தமிழ்மக்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்.

நீண்டகால அடிப்படையில் எமது தாயக விடுதலைக்கான போரினை பல்வேறு வடிவங்களில் உள்ளக வெளியக சூழல்களை கருத்தில் கொண்டு முன்னெடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. அதேநேரம், தாயகத்தில் நீண்டகாலமாக சிங்கள ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட எமது மக்களின் கட்டுமானங்களைச் சீரமைத்து, இடம்பெயர்ந்த மக்களை மறுவாழ்வுக்கு உட்படுத்தவேண்டிய பொறுப்பும் உலகத் தமிழர்களுக்கு உண்டு. அத்தோடு, மக்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் கண்களை மூடிக்கொண்டிருந்த சர்வதேசத்தின் கண்களைத் திறக்கவைக்கும் முயற்சியிலும், சிங்கள அரசின் இன ஒடுக்கல் நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு ஓயாது எடுத்துக் கூறுவதன் மூலமாக எமது உரிமைப் போராட்டத்திற்கான தார்மீக ஆதரவைப் பெறும் முயற்சியிலும் அனைத்துலகத் தமிழர்கள் தொடர்ந்தும் ஒற்றுமையுன் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

அதேநேரம், தாயகத்திலுள்ள அனைத்து தமிழ் முஸ்லிம் கட்சிகளும் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கடந்தகாலத்தில் செயற்பட்டதைப் போன்று இனிவரும் காலங்களிலிலும் ஒற்றுமையோடும் தன்னலமற்றும் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். எமது இலட்சியப் பாதையில் அனைவரையும் அரவணைத்து, புதிய சூழல்கள், புதிய நட்புக்களைத் தேடி உலகத் தமிழர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது விடுதலையினை வென்றெடுக்க முன்வருமாறு இந்தப் புனித நாளில் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் எமது போராட்டத்துக்கான ஆதரவை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்தியதோடல்லாமல் உலக அரங்கில் எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உரத்து ஒலித்த எமது புலம்பெயர்ந்த உறவுகளை நன்றியோடு நினைவு கொள்கிறோம். புலம்பெயர்ந்த தமிழ் இளையோர்களின் நெறிப்படுத்தப்பட்ட பங்களிப்புக்களும் போராட்டங்களும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அதேவேளை, எமது மக்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டு கொதித்தெழுந்து போராடிய தமிழகத்துச் சகோதரர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பான தமிழீழ மக்களே, புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ உறவுகளே, தமிழ் நாட்டு உடன் பிறப்புக்களே, உலகெலாம் பரந்து வாழும் தமிழ்மக்களே, மாவீரர்களின் இலட்சியக் கனவு நிறைவேறும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். சிங்களத்துடன் இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது. சிங்களம் நீதி வழங்கும் என்று நினைப்பது பேதைமை. சிங்கள தேசத்தை நம்பி ஏமாறுவதற்கு உலகத் தமிழினம் தொடர்ந்தும் தயாராக இல்லை. தமிழினம் தன்னிகரற்ற வலுவாற்றல் மிக்க தனித்துவமான இனம். பண்பாட்டு வாழ்வையும் நீண்ட வரலாற்றையும் கொண்ட இனம். உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழனின் இதயத் துடிப்பு தமிழீழப் போராட்டத்திற்காகவே இயங்கும். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைக்கு அமைவாக எமது இலட்சியத்தை அடையும் வரை போராடுவோம். வரும் சவால்களுக்கு முகம் கொடுப்போம். இடையூறுகளைத் தாண்டிச் செல்வோம், எதிர்ப்புச் சக்திகளை முறியடிப்போம், தாயகத்தின் விடிவிற்காகப் போராடுவோம். விடுதலைப் போரை வலுப்படுத்த உதவும் அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்ள அணிதிரளுமாறு உலகத் தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது. காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகளால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்டு எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில், எந்தத் தடைகள் வந்தபோதும் எமது உரிமைகளுக்காக இறுதிவரை போராடிய மாவீரர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்தும் போராடி தமிழீழத் தனியரசைக் கட்டியமைப்போம் என இந்நாளில் நாமனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


நம்பிக்கைக்கு உரிய நாடல்ல அமரிக்கா

            மும்பை நகரம் சர்வதேச நகரமாக முன்னேறி கொண்டிருக்கின்ற வேளையில் அதனை தடுக்கும் விதமாகவோ அல்லது இந்தியாவின் மிகமுக்கிய மாநகரமான மாநில தலைநகரையோ அழிக்கவேனுமேனவோ எண்ணி மிகக்கொடூரமான தாக்குதல்களை நடத்தி மும்பை மாநில தீவிரவாத எதிர்ப்பு படை தலைவரான ஹேமந்த் கர்கர் உள்ளிட்ட தேசப்பதுகாப்புபடை அதிகாரிகளும் அப்பாவி பொதுமக்களும்  சுட்டுத்தள்ளப்பட்டனர் .  உலகமே அதிர்வுறும் இந்த நிகழ்வு நடைபெற்று ஓராண்டு நிறைவற்று விட்ட நிலையில் இன்றுவரை எந்த விதமான நடவடிக்கையுமே எடுக்காமல் இருக்கின்ற நிலையில் இந்தியா அரசு தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை எடுக்க விருப்பமில்லையா அல்லது நடவடிக்கை எடுக்க போதுமான துணிச்சல் இல்லையா என்பதுதான் மக்களின் கேள்வி. அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி.கிளிண்டன் இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்திருந்தார் அந்த உணர்வு இந்தியா மக்களின் அமெரிக்கா மீதான நம்பிக்கையை அதிகரித்தது ஆனால் இன்று ஓராண்டை நிறைவு செய்தும் ஏதும் செய்யாதது வழக்கமாக அமெரிக்கா இந்தியாவை திருப்திபடுத்த சொல்லும் ஏமாற்று வேலையாகவே தெரிகிறது இனியும் அமெரிக்காவை நம்பி இந்தியா தனது தேச நலனை குழிதோண்டி புதைக்கக்கூடாது இனியும் தாமதிக்காமல் தீவிரவாதத்திர்க் கெதிரான வேரறுக்கும் பணிகளை துரிதப்படுதவேண்டும்.  இந்தியமண்ணில் தீவிரவாததிர்க் கெதிரான துணிச்சல் வரும் நாள் தான் இந்தியா உலகின் அமைதி பூங்காவாகும்  நாள். இந்தியமண்ணில் தீவிரவாதத்தின் தாக்குதலில் உயிர் நீத்த உடன்பிறப்புகளுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

நாளை வேலுபிரபாகரன் மாவீரர் தின உரையாற்றுகிறார்?

Thursday, November 26, 2009


           இந்தியா ஜனநாயக தேசத்தின் அண்டை தேசமும் பௌத்த சமய தேசமான இலங்கை மண்ணில் சிங்களர்களும் , தமிழர்களும் மண்ணின் மைந்தர்கள் மன்னர் ஆட்சிக்கு பிறகு ஆங்கில ஆதிக்கத்திற்கு பின் விடுதலையான இலங்கை பிரதேசம் பெரும்பான்மையான சிங்கலர்களைமட்டும் முதன்மைப்படுத்தி , கல்வி,வேலைவாய்ப்பு,அதிகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மறுத்து இனவெறி அரசாக செயல்பட்டதால் கல்வி , வேலைவாய்ப்பு , அதிகார பகிர்வு உள்ளிட்டட தேவைகளுக்காக சொந்தமண்ணின் அரசு இயந்திரத்திற்கெதிராக போராடி பயனளிக்காததால் தமிழ்மக்களின் போராட்டம் தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கம் (liberation tiger tamil ealem - LTTE) என்ற இயக்கத்தை ஏற்படுத்தி போராடினார் தன மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தாங்களே ஏற்படுத்தி கொடுத்து போராடிவந்த முதல் போராட்ட இயக்கம் இதுதான் என்பது உலக வரலாறு. இவர்களின் போராட்டம் கட ந்த முப்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுவந்தது இடையே இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே இருந்தபோது நார்வே நாட்டின் உதவியுடன் சிலகாலம் போர்நிறுத்த நடவடிக்கை அமலில் இருந்தது .  இதனை தொடர்ந்து ரணில் விக்கரமசிங்கே அரசை அந்நாட்டு அதிபர் பண்டாரநாயக்க குமாரதுங்க தனது அதிகாரத்தை பயன்படுத்தி கலைத்துவிட்டார். அதனை தொடர்ந்து நடந்துவந்த போர் ராஜபக்சே அரசு போர்விதிமுறை மீறல், இந்தியா,பாகிஸ்தான்,சீனா போன்ற அண்டை நாடுகளின் ஆயுத , பூகோள வரைபடம் ,இராணுவவீரர்களை அனுப்பியும்,ராடார் உள்ளிட்ட உழவு கருவிகள் வழங்கியும்  அவர்களின் விடுதலை போராட்டத்தை ஒடுக்கி அப்பாவிமக்களின் உயிர்களையும் , உடமைகளையும் அழித்து எஞ்சிய மக்களை கம்பிவேளிக்குள் அடைத்து திறந்தவெளியில் கொட்டும் மழை,புயல் என அப்பட்டமான மனிதஉரிமை மீறலை அமெரிக்கா , ஜெர்மனி , பிரிட்டன்,ஐக்கிய நாடுகள் சபை ஆகியவைகள் எதிர்த்தும், கண்டித்தும் இலங்கை அரசின் காட்டுமிராண்டித்தனங்களை (அப்பாவி இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சுட்டுக்கொன்றும், கானணி பெண்களுக்கு கட்டாய குடும்பக்கட்டுப்பாடு செய்தும் உலக வரலாற்றில் மனிதகுலம் இதுவரை செய்யாத அட்டுழியங்களை அரங்கேற்றி தனது வெறித்தனத்தை தீர்த்துக்கொண்டதுதான்  புத்தபூமியின் வேட்கக்கேடான அரசின் நிலைமை.
                மீதமுள்ளவர்களை காப்பாற்றவும்,எப்போதும் விடுதலை போராட்டங்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை எனவே நிச்சயமான வெற்றியும் ,விடுதலையும் என்றாவது ஒருநாள் நடந்தாகவேண்டியது நியதி.  இந்த போராட்டம் இன துரோகிகள் உடனிருந்தவர்களாலும்,தாய் தமிழர்கள் என எண்ணிய தமிழக அரசியல் தலைவர்கள் பதவிஆசையால் உதவியை தீர்க்கமாக குறித்தகாலத்தில்  செய்யாதது என அதிகார போதைக்கு ஆட்பட்டவர்களால் சந்தித்த மிகப்பெரிய சரிவுதான்.
               இந்த நிலையில் இந்த விடுதலை இயக்கத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு ஆண்டுதோறும் நவ்வம்பர் 27 நாளில் வீரவணக்கம் செலுத்தும் மாவீரர் தினத்தில் விடுதலை இயக்கத்தின் தலைவர் வெலுபிள்ளை.பிரபாகரன் வீர உரை நிகழ்த்துவது வழக்கம் , இந்த நிலையில் பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் நாளை யார் மாவீரர் உரை நிகழ்த்துவது என்ற எதிர்பார்ப்பையும் , அந்த இயக்கம் சார்பில்  விடுதலை போர் நாளை முதல் தொடங்கும் என உள்ளூர் தமிழ்மக்களுக்கும், புலம்பெயர் தமிழ்மக்களுக்கும் செய்தியை அதிகாரபூரவமாக வெளியிட்டுள்ளதாக நாளேடுகளில் வெளிவந்துள்ளது.
                 இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலை புலிகள் இய்யக்கத்தின் தலைவரும் , ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தேடப்பட்டுவரும் முக்கிய குற்றவாளியான பிரபாகரன் இறந்த பின்னர் அந்த இறந்த நபர் பிரபாகரன்தான் என இலங்கை தரப்பு இறப்பு சான்றிதழ் இதுவரை இந்தியா அரசிடம் வழங்கவில்லை. பிரபாகரன் இறப்பு உறுதி செய்யப்படாமல் அவ் வழக்கு இதுவரை முடிவடையவில்லை. தமிழர் தேசிய இய்யகத்  தலைவர் பழ நெடுமாறன் , வை.கோ.போன்றவர்கள் அடித்து கூறும் தகவல்களால் நிச்சயம் பிரபாகரன் உயிருடன் இருப்பதை உறுதியாக நம்பலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது
ஆனால் நாளை மாவீரர் தினத்தில்  உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கும் பிரபாகரன் வீர உரை ஆற்றுவார் என்பது நாளை தெரியவரும் நம்பிக்கை வைப்போம். இருளின் முடிவில் ஒளி கிடைக்கும் ,உண்மையான  போராட்டத்தின் முடிவில் வெற்றி கிடைக்கும் .

.

ஆண்மையை கேள்விக்குறியாக்கும் ஆண்மீகத்தலம்: எச்சரிக்கை.

Monday, November 23, 2009

  தமிழக ஆன்மீக தளங்களில் புகழ்பெற்ற சிவாலய மலைவளம் வரும் இந்தியா அளவில் பக்தர்களை கொண்டுள்ளதுதான்  திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம்.  இந்த ஆலயத்தை சுற்றி பதினான்கு  கிலோமீட்டர்  தொலைவில்  மலைவலப்பாதை  உள்ளது .  இந்தப்பதையை சுற்றிலும் ஒவ்வொருமாதமும் பக்தர்கள் வளம் வருவதுதான் இந்த ஆழத்தின் சிறப்பு இந்த மலை வலத்தின் பொது மலையில் உள்ள ஆயிரக்கணக்கான இயற்கை மூலிகை தன்மைகொண்ட காற்று தம்மீது படுவதால் தம்முடைய நோயல்கள் குனமாகின்றது, உடலுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கின்றது .  மேலும் கடவுள் அனுகிரகத்தையும் நாடி தமிழகத்திளுமிருந்து மட்டுமல்ல  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இலச்சக்கணக்கான மக்கள்  வந்து செல்கின்றனர். இந்த மலை வலப்பாதையில் ஆனாய்பிறந்தான், அடி அண்ணாமலை , வேங்கிக்கால்,அத்தியந்தால் ஊராட்சிகளும் , திருவண்ணாமலை நகராட்சியும் இருக்கின்றது.  ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான மக்கள் போட்டுசெல்லும் பிளாஸ்டிக் குப்பைகள் ,நகராட்சிகுப்பைகள் என நூற்றுக்கணக்கான மெற்றிக் டன் குப்பைகளை தரம் பிரிக்காமல் கிரிவல்;அப்பதையிலும் , ஈசானிய லிங்க ஆலயத்தின் அருகேயுள்ள ஈசன்யத்தில் கொட்டி எரித்துவிடுகின்றனர்.
இதனால் டயாக்சின் விழ வாயுவும் , கரியமில வாயுவும் உற்பத்தியாகிறது.  இந்த குப்பை எரிக்கும் இடம் தி..மலை பேருந்து நிலையத்தின் அருகேயும் , வேலூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்திலும் உள்ளதால் மலை வளம் வருகின்ற பக்தர்களுக்கு நன்மை பயப்பதைக் காட்டிலும் பெரிய அளவில்  உயிர் கொல்லி நோய்கள் வந்து மிகபெரிய கேடுகள் விளைவிக்கின்றன.
தடை செய்யப்பட்ட டயாக்சின் வாயுவால் ஆண்மைக்குறைவு,பெண்தன்மை குறைவு , மலட்டுத்தன்மை , குளோரின் சம்பந்தப்பட்ட நோய்கள் , மயிர்ச்சருமா நோய்கள், நரம்பு மண்டலம் பாதிப்புக்கள் , கொழுப்புசத்து குறைபட்டு நோய்கள், தோல் நிறம் பற்றிய நோய்கள் , பிறவி ஊனங்கள் , உடல் உறவில் குறைந்த நாட்டம் உள்ளிட்ட ஏராளமான உயிர் கொல்லி நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கரியமில வாயுவால் ஓசோன்  மண்டலம் பாதிக்கப்படுவதால் புவி வெப்பமடைதல் , பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்தல், சூரியனின் அதிகப்படியான புற ஊதாக்கதிர்களின்
தாக்கத்தால் புவியில் உள்ள பல்லுயிர்கள் பாதிப்புகள் , மனிதர்களுக்கு தோல்நோய்கள்
உள்ளிட்ட புதியவகை நோய்கள் ஏற்பட்டு மிகப்பெர்யா அழிவை உண்டாக்குகிறது.
திருவண்ணாமலை தீபத்திருவிழா வருடாவருடம் கார்த்திகை மாதம் மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம் இதில் பல லச்சக்கணக்கான மக்கள் திரண்டு வழிபாட்டு மலை வளம் வருவது சிறப்பு , இந்த நிகழ்வு வரும் டிசம்பர் முதல் தேதியில் நடைபெற உள்ளது  அந்த தினத்தில் இந்த குப்பைகள் எரிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், திருவண்ணாமலை நகராட்சி திடக்கழிவுகளை தரம் பிரித்து இயற்கை உரம் தரித்து நகராட்சிக்கு வருமானத்தை அதிகரிக்கவும், அழிந்து வரும் மனித வளத்தை காத்திடவும் நிரந்தர தீர்வு காண வழிவகை  செய்தால் மட்டுமே திருவண்ணாமலை ஆண்மீகத்தளம் இல்லையேல் ஆண்மை அழிக்கும் தளமாகும் , இதுகுறித்து பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஒருவிழிப்புனர்வுக்க்காகமட்டும் இல்லை ஆன்மீகத்திற்கு எப்போதும் வரலாற்றில் வீழ்ச்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே நம் நோக்கம்.



சுத்தமான புதுவை , பசுமையான புதுவை :குப்பை புதுவை

         புதுவை யூனியன் பிரதேசம் இந்தியாவில் உள்ள ஏழு யூனியன் பிரதேசங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகம் போன்று அதிக மக்கள் தொகை , அதிக இடப்பரப்பு இல்லாததால் நிர்வாகம் செய்வதற்கு நல்ல வசதியாக இருந்துவந்தது.  கடந்த முறை முதல்வராக இருந்த ரங்கசாமி அரசுக்கு நெருக்கடிகொடுத்த வைத்தியலிங்கம் இருவருக்குமிடையே ஏற்பட்ட மோதலால் அரசு அதிகாரிகள் அதிகார தோரணையுடன் செயல்படதொடங்கிவிட்டனர். புதுவை அரசின் தூய்மையான புதுவை,பசுமையான புதுவை என்ற கொள்கையை அமல்படுத்த முனைந்ததால், பொதுமக்களின் கோரிக்கைகள், தொண்டுநிறுவனங்கள் வேண்டுகோளுக்கிணங்க கடந்த ஜூன் மாதம் ஒரு அரசாணையை புதுவை அரசு கொண்டுவந்தது (G.O.MS.NO.9\2009, ENVIT.DT.4.6.2009) .  இந்த சட்டம் 1986\5 (CENTRAL ACT 29 OF 1986) ஐ  நடைமுறைப்படுத்த புதுவை அரசு சுற்றுச்சூழல் சட்டத்தை கொண்டுவந்து கடந்த ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தது , பிளாஸ்டிக் பண முதலைகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்த சுற்றுச்சூழல் சட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  புதுவை அரசின் ஆளுகை குறுகிய பரப்பளவு என்பதால் நிர்வாகிப்பதற்கு வசதிதான் அதன் மக்கள்தொகைக்கு நாள்தோறும் உற்பத்தியாகும் நூற்றுக்கணக்கான மெட்ரிக் டன் குப்பைகளை வில்லியனூர் புறவழிசாலை ஓரம் எரித்து அப்பாகுதிமாக்கலுக்கும், அவழியே பயணம் செய்யும் பயணிகளுக்கும் பல்வேறு வகையான உயிர்கொல்லி நோய்களையும் , சூற்றுசூழளையும் கெடுக்கின்றனர், மேலும் புதுவை நகரில் உற்பத்தியாகும் குப்பைகளை சேகரித்து கடலூர் எல்லையிலும், விழப்புரம் மாவட்ட எல்லையிலும் கொட்டிவிட்டு வந்துவிடுகின்றனர், இதனால் அம்மாவட்ட மக்கள் போராட்டம், சாலைமறியல் என கொட்டிய குப்பைகளை மீண்டும் ஏற்றி அனுப்பிய சம்பவங்கள் நடந்துள்ளது.
             இதற்கு அந்த சுகாதார அமைச்சரான நமவச்சிவாயத்திடம்  கேட்டால் 49 கோடி ரூபாயில் உரம் தயாரிக்கும் திட்டம் உள்ளது என மழுப்புகிறார்.  அருமையான சட்டம் பிளாஸ்டிக் உற்பத்திக்கும் , விற்பனைக்கும் தடைவிதித்து இயற்கை கைவினைபோருட்களை ஊக்குவித்தாலே ஏராளமான மக்களுக்கும் வேலைகிடைக்கும் பசுமையான புதுவை, சுத்தமான புதுவை கனவு நனவாகும்.  மேலும் இயற்கை உரம் தரித்தாலே உரம் தட்டுப்பாடு நீங்கி, உரம் விற்பனை மூலம் அரசுக்கும் , பஞ்சாயத்திற்கும் நல்ல வருவாய் கிடைக்கும் , சுற்றுச்சூழல் கெடுவது தடுக்கப்படும். 
அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை சிறிதும் தாமதிக்காமல் உடனே நடைமுரைப்படுதினால் புதுவையில் உள்ள நகர கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கு வருவாய் கிடைக்கும், குப்பைகளை எரிப்பதால் மனிதவளம் அழிக்கப்படுவது தடுக்கப்படும்,  அப்போதுதான் சுத்தமான புதுவை , பசுமையான புதுவை சாத்தியமாகும்.

மாற்றுங்கள் சிதம்பரத்தை......

Sunday, November 22, 2009

கடந்த நவம்பர் 26 ம் நாள் மும்பை நகரத்தை தீவிரவாதிகள் அதிரடித்தாக்குதலில் மும்பை மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்புப்படை தலைவர் ஹேமந்த கர்கரே உள்பட தேசபாதுகாப்புபடை  அதிகாரிகள் , பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பத்து முறை தீவிரவாதிகளின் பட்டியலை இந்தியா அளித்தும் பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளை இந்தியாவிடமும் ஒப்படைக்கவில்லை , நடவடிக்கையும் எடுக்கவில்லை , நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அமெரிக்கா நடவடிக்கையை எடுக்கும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அளித்த உறுதிமொழியும் நிறைவேற்ற  இந்தியா யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை , சம்பந்த பட்ட அமைச்சர்களும் கிருஷ்ணா, சிதம்பரம் போன்றவர்கள் எக்ஸ்குளுசிவ் பெட்டி கொடுத்து ஓராண்டை கடத்திவிட்டார்கள் , உள்நாட்டு தீவிரவாதிகளான மாவோயிஸ்ட் நல்வழிப்படுத்த முடியாத அரசு அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாததால் தீவிரவாத வழிக்கு செல்கிறார்கள் , இதுகுறித்து அரசு மத்திய படைகளை கொண்டு ஒடுக்கும் எனவும், சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போம் எனவும் கூறி ஏமாற்றுகிறவர்கள், அல் குவைதா தீவிரவாதிகளின் செயலுக்கு திடமான இந்தியா அரசின் நடவடிக்கை மட்டுமே தீர்வாகுமே தவிர பெட்டிகளும், அந்நிய நாட்டவரின் உதவி எதிர்பார்ப்பு பலனை தராது , எப்போது துணிச்சல் வருவது சிதம்பரத்திற்கு  இல்லையேல் திறமையான நபரை அமர்த்தவேண்டியது அரசின் கடமை. இந்தியா அரசு மும்பை மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியா மக்களுக்கு என்ன தீர்வு சொல்லபோகிறது.


...

பறவைகளை காப்பதில் ஓர் அழகிய கிராமம் ஆன்னியூர்

Friday, November 20, 2009

   விழுப்புரம் அருகே அன்னியூர் என்ற கிராமம் உள்ளது இக்கிராமத்தில் ஒரு அரசு ஆரம்பப்பள்ளி, மேனிலைப்பள்ளி, சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களை உலடக்கிய ஒரு கிராமம் .  இக்கிராமத்தின் அனைத்து  தெருக்களிலும் தென்னை,வேம்பு,புலியன்,புங்கன் , முருங்கை உள்ளிட்ட மரங்களும் நிறைய கோயில்களும் கோவிலின் எதிரில் ஆலமரம் , அரசன் என பசுமையான மரங்களை கொண்ட  அழகிய கிராமம் அன்னியூர் .  இங்கு உள்ள மரங்களில் மாலை ஆறுமணிக்கு ஆஜராகும் காக்கைகள் , மைனாக்கள், கல்குருவிகள் என பறவைகள் பட்டாளம் ஏராளம்.  பலசூழலில் இருந்த கிராமம் இந்த பறவைகளின் வருகைக்கு பின்னர்தான் கவிஞர்களின்  கற்பனைகளில் காணுகின்ற இனிய கூக்குரல்களை கேட்டிட இன்பமாயிருக்கும் .  கிட்டத்தட்ட ஐந்தாயிரம் காக்கைகள் , இரண்டாயிரத்திற்குமேற்பட்ட மைனாக்கள்,கல்குருவிகள் , சொற்பமான குயில்கள் என இந்த கிராமத்தின் இன்பமயமான் சூழலுக்கு நாதங்களாகின்றன.
         பறவைகள் காலையில் பல்வேறு பகுதிக்கு அதிகாலையில் துயில் எழுந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிடுகின்றன. இந்த பறவைகள் இடும் எச்சத்தினால் பல்லுயிர்பெருக்கம் வலுவடையும், இப்பகுதியில் பறவைகள் இரவில் தங்குவதாலும் , இனப்பெருக்கத்தை இங்கு செய்வதாலும் இப்பகுதி சுற்றுச்சூழல் மாசடையாமல் இயற்கையாகவே இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளமுடிகிறது .  இவ்வளவு பறவைகள் வந்து தங்கவும் , இனப்பெருக்கம் செய்துகொள்ளவும் நீர்நிலைகள் ஏரிகள்,குளங்கள் இங்கு உள்ளது, மேலும் போதுமான மரங்கள்,குடியிருப்புகளில் தங்க வசதியாகவும் உள்ளது இதற்காக மக்கள் யாரும் இவைகளை துன்புறுத்துவதில்லை.
            மேலும் இங்கு பறவைகளை கல்வீசி தாக்கினாலோ, வேட்டையாடினாலோ இவ்வூர் மக்களும், ஊர்பிரமுகர்களும் துரத்தி துரத்தி அடித்துவிடுவார்கள் என அவ்வூர்மக்குள் கூறுகின்றனர். இப்படி மரம் வளர்ப்பதிலும், பறவைகளை காப்பதிலும் கிராமங்கள் தோறும் உள்ள இளைஞர்களும், பெரியோர்களும் இவைகளையும் ஒரு உயிராக நினைத்தாலே கிராமங்கள்தான் சொர்கங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த அழகிய கிராமத்தை ரசிக்க விரும்புபவர்கள் விழுப்புரம் நகரத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் பயனித்தாலே மகிழ்ச்சிக்கடலில் மிதக்கலாம் . இயற்கையை காப்போம் இன்றும் காந்தியின் வாக்கு வாழ்கிறது .

          

ஜனநாயகத்தில் செல்லரித்த தூணான பத்திரிகைகள்

           இந்தியாவின் நான்கு தூண்களுக்கு அடுத்ததாக பத்திரிகை துறையை பெருமையுடன் சொல்லிக் கொள்வார்கள்வார்கள் ஏனெனில் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பாலமாக இருந்து அரசின் திட்டங்கள் , மக்களின் அடிப்படை வசதிகள் , தேவைகள் குறித்தும் மக்களுக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அரசு இயந்திரம் செவ்வனே செயல்பட்டு மக்கள் நலமுடன் வாழ வகை செய்வது அதன் கடமை .  ஆனால் இன்றைய சூழலில் அத்தகைய நிலையில் இருந்து சற்று விலகி மக்கள் நலனைவிட வர்த்தக ரீதியாக செயல்பட்டு வருமானம் பார்க்கவும் , தங்களது டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்துவதற்காக போட்டிபோட்டு வருகின்றவர்கள் ஏராளம் . ஒரு நடிகை பாய் பிரண்டு வைத்திருந்தாள் அதை இதை முதலில் படியுங்கள் என வண்ணப்படத்துடன் கோட்டை எழுத்துக்களில் போடுவார்கள் , ரஜினி நீலகலர் கொட்டு போட்டு அதில் வைலட்கலர் டைகட்டினார், சர்ரென்று வந்தார் விர்ரென்று போனார் என செய்திதாளின் தலைப்புச் செய்தியில்  போடுவார்கள் இப்படியாகிவிட்டது ஈடுகளின் நிலைமை.   அன்னைதெராசா முக்திபேறு பெற்றதற்காக விருது வழங்கியதை உள்பக்க செய்தியாகப்போட்டு நடிகை விபச்சார வழக்கில் கைதை முதல் பக்கசெய்தியாக போட்டது எவ்வளவுபெரிய கேவலம்(தினத்தந்தியில் மட்டும் அன்னைதெராசவிருது செய்தி தலைப்பு செய்தி) .  ஒரு ஆண்டிற்கு புகையிலை பயன்பாட்டால் இந்தியாவில் பத்துலட்சம் பேரும் , உலகில் ஐம்பது லட்சம் பேரும் சாகடிக்கப்படுகிறார்கள் , எய்ட்ஸ் நோயால் ஆண்டிற்கு உலகில் முப்பத்தொரு லட்சம் பேரும் சாகிறார்கள் என்பதனை எந்த செய்தி ஊடகமும் , நாளேடும்  முக்கியத்துவம் தருவதில்லை இதுதான் செய்தி தர்மமா யோசிக்கவேண்டும்  சம்பந்தப்பட்டவர்கள் .  விற்பனையை அதிகரிக்க சினிமாசெய்திகளையும், நடிகைகளின் கிசுகிசுக்களையும் போடுவதால் இன்றைய நிலையை பத்திரிகைகள் கொட்டருக்கும் , கோழி பிரியாணிக்கும் பாடுபட்டதாக சேற்றை வாரி இறைத்ததை மறக்கக்கூடாது இவர்கள்.   நாட்டின் ஆண்கவது,ஐந்தாவது என எந்த தூணாக இருந்தாலும் அப்பவிமக்களையும் , நாட்டின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டுமே தவிர தங்கள் துறைக்கும் , மக்களுக்கும் துரோகம் செய்யவோ, கெட்டபெயரை தேடி தர நினைக்கவோ கூடாது.  வாழ்க பத்திரிகை தர்மம் வளர்ந்திடட்டும் அதன் சேவைகள்.

இத்தாலி தாலிக்கு வலி(மை) ! இந்திய தாலிக்கு இல்லை(யா)?

Tuesday, November 17, 2009

       கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் நாள் குஜராத் மாநில மீனவர்களின் படகில் மும்பை கடல்வழியாக மும்பைக்கு வந்த தீவிரவாதிகள் மும்பையின் அடையாளசின்னமான ஹோட்டல் தாஜ்,நரிமன் இல்லம் ,சிவாஜி சத்ரபதி தொடர்வண்டி நிலையம் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் இயந்திரதுப்பாக்கிகளால் காட்டுமிராண்டிதனமாக சுட்டுத்தள்ளியது நாட்டின் பாதுகாப்பு நிலையை தீவிரமாக அறிந்தவர்களால் மட்டுமே செய்யமுடியக்கூடியது நரிமன் இல்லத்தில் தேசப்பாதுகாப்புபடை வீரர்களுடன் எள்ளளவும் அச்சமில்லாமல் சண்டையிட்டது சரித்திரத்தில் இதுஒரு மைல்கல் .  இதில் தீவிரவாத எதிர்ப்பு  படை தலைவர் ஹேமந்த் கர்கரே உடன் கிட்டத்தட்ட பனிரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்தனர்..
               இந்த நிகழ்விற்கு அரசு தீவிரமாக ஏதும் நடவடிக்கை எடுக்கமுயலாதபோது நாட்டின் மக்கள் எதிர்ப்புக்கு பிருகு உள்துறை அமைச்சரை மாற்றி , முதல்வரை மாற்றி சமாதனம் செய்யமுயன்றனர் பாகிஸ்தான் மீது கண்டிப்பாக போர்தொடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர் அது நிறைவேற்றப்படுவதுபோல் சைகை காட்டி அதுகுறித்த சட்டங்கள் கொண்டுவருவதுபோல் புதிய உள்துறை அமைச்சர் சிதம்பரம் சொல்லி சில சட்டங்களை கொண்டுவந்தார்.  மக்களை திருப்திப்படுத்த பாகிஸ்தான் அரசிற்கு ஒரு முறை அல்ல பத்து முறை தீவிரவாதிகளின் பட்டியலை அளித்து அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வலியுறுத்தியது .  இதை ஒருபொருட்டாக மதிக்காத இந்தியில் கொடுங்கள், அரபு மொழியில் கொடுங்கள் என ஏகத்திற்கும் அரசை கேவலப்படுத்தியது பாகிஸ்தான் , இதற்கும் சிதம்பரம் ஒரு விளக்கம் கொடுத்துவிடுகிறார்.  இந்த நிலையில் ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் நாட்டிற்கு  ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையில் அதுகுறித்து துணிச்சலான நடவடிக்கை எடுக்காமல் எனக்கு வனத்துறை அமைச்சர் பதவி மிகவும் பிடிக்கும் வனத்துறை பங்களாவில் உள்ள நூலகத்தில் புத்தகங்களை படிக்கவே விருப்பம் இந்த பதவி பிரதமரின் சொல்லை தட்டமுடியாததால் ஏற்றேன் எனகூறுவதும், வங்கிகடன் வழங்கபோவதும் , பள்ளிகளில் உரையாடுவதும் போன்ற மேம்போக்கான வேலைகளை செய்வதா பொறுப்புள்ள உள்துறை அமைச்சரின் வேலை வெட்கக் கேடானது.
இங்கே உள்ள தீவிரவாதத்தை ஒடுக்க வக்கட்ட்ற இவர்கள் விடுதலை புலிகளை ஒடுக்க ஆயுதம் கொடுத்து போர் நடத்துகிறார்கள், அயல் நாட்டில் உள்ள ராணுவ நடவடிக்கையை தடுக்கமுடியாது என்பவர்கள் தமிழர்கள் அழிக்கப்படுவதற்கு ஆயுதம் தருவார்கள் என்னகொடுமை.
             அமைச்சர் சிதம்பரம் துணிவிருந்தால் நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு நீதிமன்றதண்டனையை நிறைவேற்றட்டும், முபை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை கைதுசெய்து தண்டிக்கட்டும் இல்லையேல் தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலகி நூலகத்தில் புத்தகம் படிக்கட்டும்.  பதவி சுகம் அனுபவிக்க ஏன் மக்களை கொள்ளவேண்டும் வெட்கங்கெட்டவர்கள். சோனியா
 அருத்ததுமட்டும் தாலி பாராளுமன்ற தாக்குதலில் எட்டு பாதுகாப்பு படை வீரர்கள்,மும்பை தாக்குதலில் இறந்த பனிரனடுபெரின் தாளிக்கேல்லாம் மதிப்பில்லையா என்னடா கொடுமை தாலி கட்டாதவர்கள்  எல்லாம் தாளிக்கெல்லாம் வருத்தப்பட்டால் இந்தியா கலாச்சாரத்தில் புனிதமாக கருதப்படுவதும் உயிராக மதிக்கப்படுவதும் தாலி அதை இழந்த எம்மண்ணின் பெண்களின் தாலிக்கு என்மதிப்பில்லை இது தேசிய இல்லை சர்வதேச அவமானம்.       
     

விடுதலை புலிகளுக்கு ஆயுதங்கள் சப்ளைசெய்வோம்

           கடந்த முப்பது ஆண்டுகளாக பிறந்தமண்ணில் வேலைவாய்ப்பில்,கல்வியில்,அதிகாரத்தில் உள்ளிட்ட உரிமைகளுக்காக தமிழ் ஈழ விடுதலைபுலிகள் இயக்கத்தை நிறுவி போராடி வந்தார்கள் அந்த மண்ணின் மைந்தர்கள் இந்த போராட்டம் நியாயமானது நிச்ச்சயம் வெற்றிபெறும் என உலகில்  வாழும் தமிழர்கள் , விடுதலை ஆர்வலர்கள் மிகுந்த ஆர்வத்தோடு  எதிர்பார்த்தார்கள்.   எதிர்பார்த்த அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்தது.
இந்திய நாட்டின் தேர்தல் முடிவு காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் என திட்டவட்டமான நிலையில் அங்கே விடுதலை புலிகள் தலைமையிலான விடுதலை இயக்கம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததுதான்  தமிழர்களுக்கு எதிரானவர்களின் திட்டமிட்ட சதி. .
               "சுரங்கப்பதையின் முடிவில்வெளிச்சம் கிடைக்கும்,  ஒவ்வொரு போராட்டத்தின்
 முடிவில் நிச்சையம் வெற்றி கிடைக்கும்" என்பது புதுவை அன்னையின் வாக்கு.  இந்த மிகப்பெரிய பின்ன்னடைவு விடுதலை மட்டுமல்ல அரசுக்கு எதிராக மக்கள் நலனுக்காக போராடும் போராளிகளுக்கு வரலாறு காணாத விரக்தியைத்தந்திருக்கும் என்பதில் மாற்றுக்குகருத்து இல்லை.
இப்படிப்பட்ட வரலாறு காணாத பின்னடைவுக்கு அவர்களின் (அரசின்) நடவடிக்கைமட்டும் காரணமல்ல உலக  தமிழன் தாய்நாடு என்று எந்த தேசத்தை முழமையாக நம்பினானோ அந்த அரசுதான் பூகோள வரைபடத்தையும் , இரானுவ தளவாடங்களையும் ,ஆலோசனைகளையும், இராணுவ வீரர்களையும் அளித்து போரை நடத்தி தமிழ் இனத்தை அழித்தது சர்வதேச அவமானம். ஒவ்வொரு விசயத்திலும் உள்நாட்டு தமிழனுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை கிடைக்காமல் செய்யும் பிறமாநில அரசுகளுக்கு சாதக இருந்து வந்த மத்திய அரசு இப்போது தொப்புள் கொடி உறவுகளான ஈழ தமிழர்களை அழித்து  , அங்குள்ள எஞ்சிய மக்களை நிர்வாணப்படுத்தி சுட்டுகொன்றும், தரையில் இவர்கள் செய்த கொடுமைகளை தண்ணீரில் சிங்கள வீரர்கள் தமிழ் வாலிபனை தடியால் அடித்து கொன்றது எந்த விதத்திலும் அங்கே தமிழன் எஞ்சி வாழ அவர்கள் விரும்பவில்லை எனத்தெரிகிறது . தமிழகத்திற்குகூட  எந்தவிதத்திலும் ஈடாகாத ஒரு தீவு அங்கே சக குடிமகனான தமிழனை கொன்றுகுவித்த கொடுஞ்செயல் தமிழகத்தில் உள்ள தமிழ் தலைவர்களின் ஒற்றுமை இல்லாத சுயநல அரசியலால் சக உடன்பிறப்பை குழி தோண்டிபுதைப்பதை வேடிக்கை பார்த்த கேவலம் வேதனைதான்.
             எஞ்சியுள்ள தமிழ்மக்களை மிருகங்களைக் காட்டிலும்  படுகேவலமாக திறந்தவெளியில்  பருவமழை தீவிரத்தின் போதும் அடைத்துவைத்து கொடுமைப்படுத்தியது கானகூடாத காட்சி. இவ்வளவு நடந்த பிறகு தமிழினத்தின் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் கருணாநிதி அரசியல் நாகரிகத்தின் தவப்புதல்வன் என்று காட்டிக்கொல்லுபவர் இந்த அறிய வாய்ப்பில் சனநாயகத்தின் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் கூட்டணிக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுப்பி சப்பக்கட்டை கட்டி அங்கே ஒரு இன்பச்சுற்றுலா நடத்தி பாராட்டு நட்பை சிங்கள என வெறியன் ராஜபக்ஷேவுடன் கைகோர்த்து,பொன்னாடைபோர்த்தி வந்தது பார்த்த தமிழன் நெஞ்சில் வேலைபைச்சியது.  அடங்க மறு அத்து மீறு என்று தன இன இளைஞர்களை ரத்தம் கொதித்து வீறுகொண்டெழச் செய்த திருமாவளவன் அங்கே சென்றதும் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போனதுதன் வேதனை .  இங்கே வீதிகளில் மேடைபோட்டு காதுகளை கிழிக்கும் இவர் அங்கே இவர் பிரபாகரனுடன் இருந்திருந்தால் இன்று இருந்திருக்கமாட்டார் என நக்கலாக பெசியதைக்கூட நகைச்சுவையாக எடுத்துக்கொண்டதாக சொல்லிவிட்டு இங்கேவந்து வீராப்பாக பேசுவது ஆர்ப்பாட்டம் செய்வது இங்குள்ள தமிழர்களை கேனப்பயனாக நினைத்திருப்பதுதானோ எனத்தோன்றுகிறது . தமிழனுக்கு எந்தவிதத்திலும் உறவில்லாத நார்வே நாட்டு அரசு மனிதாபிமானத்தை காக்க பொரடியதிலும் நாம்காட்டாதது குறித்து வெட்கப்பட நமது தலைவர்கள் தயாரில்லை .  இந்த நிலையில் நாடாளுமன்ற குழு இந்தியா திரும்பியதும் நான்கே நாளில் விடுதலை என போஸ்டர் அடித்தது வெட்ககேடானது .  தமிழர்களுக்கு விடுதலை, தனி ஈழம் என பேசியவர்கள் முள்வேலியில் இருந்தவர்களை விடுதலை செய்யவேண்டி குழு அனுப்புவதும்,விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பேசியதற்காக போஸ்டர் அடித்து விடுதலை வாங்கித்தந்ததாக விளம்பரம் செய்கின்ற கேவலநிலையில் போகின்ற தலை தமிழக தலைவர்களின் பார்வையும் உணர்வும் சுருங்கிப்போனது வீரம் செறிந்த தமிழனுக்கு தீராத அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
             ஒருபோராளி இயக்கம் தோற்றுவிட்டதற்கு இன்னொரு போராளி இயக்கம் வருத்தப்பட்டது சிறிது ஆறுதல் அளிக்கிறது.  மேற்கு வங்கம் , பிகார் போன்ற வடமாநிலங்களில் இயங்கிவரும் மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கம் அந்தபகுதி மக்களின் அடிப்படை தேவைகளைபூர்த்தி  செய்யத அரசுக்கு  எதிராகப் போராடிவருபவர்கள் இனவிடுதலையில்  பின்னடைவை  சந்தித்த  விடுதலைபுலிகளுக்கு  aayuthangal சப்பளை  செய்வோம்  எனவும்  அவர்களின்  விடுதலைக்கு  தேவையான   உதவிகளை  யார்தடுத்தாலும்  செய்வோம்  என அறிவித்திருப்பது  மகிழ்ச்சியானது  ஏனெனில்  ஒரு இயக்கத்தின்  முயற்சி  தோற்றால்  அதைவைத்து  அனைத்து  விடுதலை மற்றும்  அரசுக்கு  எதிரான  நியாயமான  போராட்டங்களை  தோல்வியடைய செய்துவிடுவது  வாடிக்கையாகிவிடும் .


             

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger