மேதகு.வேலுபிள்ளை பிரபாகரன் தலைமையில் போர்.

Friday, November 27, 2009

              தமிழீழ விடுதலை போராட்டத்தை கடந்த முப்பது ஆண்டுகளாக உலகில் எந்த விடுதலைபோராட்ட இயக்கமும் மேற்கொள்ளாத யுக்திகளை மேற்கொண்டு தீவிரப்படுத்திவந்த வேளையில் உடன் இருந்த கருணா போன்ற பதவி சுகத்திற்காக காட்டிகொடுத்த  எட்டப்பன்களாலும் நேசநாடாக இருக்கவேண்டிய  இந்தியா தேசத்தின் பூகோள வரைபடம் ,ஆயுதங்கள் , ராடார் , ஆயுதப்பயிற்சிகள், நிதிஉதவிகள் என விடுதலைபுலிகளின் சக்தியை வீழ்த்துமளவிற்கு அவர்களை ஆய்ந்து இலங்கை அரசிற்கு உதவி செய்ததுதான் விடுதலைப்போர் சரிவை சந்திக்க முக்கிய காரணமாக இருந்தது , பிறகு இலங்கை நாட்டின் வளங்களையும், உதவிகளையும் பெற பாகிஸ்தான்,சீனா போன்ற நாடுகளின் உதவிகள் கூடுதல் பலமாக இருந்தது. இந்தியா நாட்டின் தேர்தல் முடிவுகள் சதிகாரர்களுக்கு கை கொடுக்கும் வேளையில் விடுதலைபோராட்டத்தை இலங்கை அரசு முடிவுக்கு கொண்டுவந்தது .  இதில் பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
வேலுபிள்ளை பிரபாகரன் இறக்கவில்லை:
          வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்ததாக இலங்கைஅறிவித்ததை இந்தியா நம்பினாலும் அதை சட்டரீதியாக ஏற்க மறுத்துவிட்டது. ஏனெனில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை  அரசால் வழங்கமுடியாமல்  போனதுதான் . இந்த இறப்பு சான்றிதழ் இல்லாததால் ராஜீவ் கொலைவழக்கு இந்தியா அரசு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது , ஒவ்வொரு புலிகளின் தலைவர்கள் இறப்பிற்கும் இரங்கல் கவிதை எழுதும் தமிழக முதல்வர் இந்த முறை அதை செய்யாதது , பிரபாகரனின் டி.ஏன்.ஏ. ரேப்போர்ட் இலங்கை அரசால் வெளியிடப்படாதது , ஆயிரக்கணக்கான போராளிகள் , பொதுமக்கள் உயிரிழந்ததற்கும் , தமிழகம் உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் செய்த உயிர்தியாகத்திற்கும் அஞ்சலி உலகம் முழுவதும்  உள்ள தமிழர்களால் செலுத்தப்பட்டபோதும் மாவீரன் விடுதலை புலிகளின் இயக்க தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தாதது போன்ற நடவடிக்கைகள் அவர் உயிருடன் உள்ளதை உறதி செய்திருக்கின்றன.  இன்றைய சூழலில் அவர் உரை ஆற்றுவதை தவிர்த்தது அவர்களின் அடுத்த சர்வதேச கட்டமைப்பை பலப்படுத்த இந்த நிகழ்வை தவிர்த்திருக்கலாம் , புலிகளின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ள பிரபாகரனின் வழிகாட்டலில் தனி தமிழீழத்திற்கான போராட்டம் தொடரும் என்பது அவர் உயிருடன் இருப்பதை தான் காட்டுகிறது.
உண்மைதான் தனி ஈழம் தமிழ் ஈழம் மலரும் வரை ஒவ்வொரு தமிழனின் ஒத்துழைப்பும் தியாகமும் அவசியமானதுதான் உறுதி ஏற்போம் பிரபாகரனின் தலைமையில்  தமிழனின் விடுதலை மலரும் வரை ஓயமாட்டோம் என்று.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger