போலிகளை ஒழிக்க வெட்கப்படும் தமிழக அரசு

Saturday, March 27, 2010

          சமீபத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை போலி மற்றும் காலாவதியான மருந்துகளை பதுக்கிவைத்து விற்பனைசெய்துவந்த அங்கிகரிக்கப்பட்ட மருந்துமொத்த விற்பனை ஏஜென்சி கையும் களவுமாக மாட்டி இருப்பதுதான்.   தமிழகத்தில் மருத்துவத்துறையில் போலியான மருத்துவ்வர்கள்,போலிமருந்துகள்,காலாவதியான மருந்துகள் விற்பனை குறித்து நீண்டநாட்களாக சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பதும்,போலிமருத்துவர்களை மீதான நடவடிக்கைகோரி கடலூர் மாவட்ட மருத்துவர்கள் போராட்டமே நடத்தி முடித்தார்கள் இதற்காக அரசு செவிசாக்கவில்லை என்பது வேதனைதான்.
கொடுங்கையூர் காலாவதியான மற்றும் போலியான மருந்துகள் பதுக்கி விற்ற மொத்த மருந்து விற்பனை நிறுவனத்தின் செயல் வெளிஉலகத்திற்கு தெரிய வந்ததும் இந்த கொலை பாதக செயலில் இருக்கும் பிற நிறுவனங்கள் உஷாராக அரசின் தீவிர நடவடிக்கையை கண்டதும் காலாவதி மற்றும் போலி மருந்துகளை குப்பைமேட்டிலும் , ரோட்டின் ஓரத்திலும் கொட்டிவிட்டு செல்வதை அன்றாட செய்தி ஊடகங்கள் வழியாக காணமுடிகிறது. நகராட்சி குப்பையுடன் கொட்டி எரிப்பதுவும் சில இடங்களில் நடக்கிறது.
மருத்துவக்கழிவுகள் அழிக்கும் முறைகள்:
        காலாவதியான மருந்துகளை அழிக்கவும் போலிகளை ஒழிக்கவும் உலக சுகாதார நிறுவனம் மருத்துவ துறைக்கு அறிவுரைகள், விதிகள் வகுத்து வைத்துள்ளது பணத்திற்காக ஆசைப்பட்ட  ஓநாய்கள் தரமில்லாத மருந்துகளை வாங்க மருத்துவகல்லுரிகளுக்கும் , மருந்துகடைகளுக்கும் சிபாரிசு செய்து மக்களை பலி ஆக்க தங்களது அறிவை ஆக்கபூர்வமற்ற முறையில் செலுத்துகின்றனர். மருந்து விற்பனையாளர்கள் மட்டுமல்ல சிபாரிசு செய்யும் அதிகாரிகள் , மருத்துவ அலுவலர்கள் நிச்சையம் கண்கானிக்கப்படவேண்டியவர்கள்.  சமீபத்தில் உச்சநீதிமன்றம் அறுவை சிகிச்சை பலனளிக்காமல் இறப்பவர்கள் தரப்பில் மருத்துவர்கள் மீது தொடரப்படும் வழக்குகளால் அவர்கள் துணிந்து அறுவை சிகிச்சை செய்யமுடியாது என கூறியுள்ளது.  ஒரு சில சமயங்களில் மட்டுமே அவ்வாறு நிகழ்கிறது .   போலிகளாலும் தொழில் தெரியாமலும் ,  சரியான மருந்துகள் இல்லாமல், உரிய கவனம் இல்லாமல் நிகழும் உயிரிழப்புகளுக்கு நிச்சையம் தண்டனைகள் வழங்கமுன்வந்தாலே குற்றங்கள் குறைந்து மருத்துவத்துறையில் மனம் கமழும் உயிர்களும் வாழ முடியும்.
காலாவதியான மருந்துகளும் போலி மருந்துகளும் :  
          உணவும், மருந்துகளும் உயிர்காக்கும் உன்னத வேலையை செய்கிறது காலாவதியான  மருந்துகளும்,உணவுபொருட்களும் விஷமாகி  உயிர்பறிக்கும் வேலையை செய்கிறது.   காலாவதியான மருந்துகளினால் குழந்தைகள்,முதியோர்கள் ,பெரியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் உயிரிழக்கியற கோரமான நிலை ஏற்படுகிறது. மருத்துவமனையில் உற்பத்தியாகும் திசுக்கழிவுகள்,மருந்துகழிவுகள் இவற்றை முறையாக அழிக்க நடவடிக்கை எடுக்காவிடில்  இன்பெகசியன் நோயால் இறந்துபோவார்கள். உலகில் பத்து சதம் பேர் மருத்துவக்கழிவுகளால் இறக்கின்றனர்.  இதேபோல் போலி மற்றும் காலாவதி மருந்துகளால் எத்தனை உயிர்கள் துடிதுடித்து இறக்க இந்த கயவர்கள் பல கோடிகளுக்கு ஏராளமான குழந்தைகள், முதியவர்கள் என கத்தி இன்றி ரத்தமின்றி தமிழகத்தினை கொலைக்களமாக்கியுள்ளனர்.சத்தமின்றி இப்படி ஒரு உயிர்கொல்லி புற்றுநோயிருக்க காரணமான அரசு அதிகாரிகள்,இந்த திட்டத்திற்கு  துணைபோன அத்தனைபேரையும் கண்டிப்பாக தூக்கில் போடவேண்டும் ஏனெனில் இவர்கள் கணக்கில்லாத கொலைகளை செய்துள்ளனர். தண்டனைகள் கடுமையாகாத பட்ச்சத்தில் இப்படிப்பட்ட கொலைபாதக செயல்கள் நிறுத்த முடியாது.  தமிழக முதல்வர் கருணாநிதி மருந்து இல்லாமலோ, மருத்துவர் இல்லாமலோ ஒரு உயிர் போனால் அதற்காக வெட்கப்படுவேன் என்று கூறியுள்ளார்.  போலிமருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகளாலும், போலி மருத்துவர்களாலும் ஏற்படுகிற உயிரிழப்புகளுக்கு அவமானப்படுவார ?  நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல் என்ற திருவள்ளுவரின் வாக்கின்படி தமிழகத்தில் நோய்க்கு ஏற்ற மருந்து எது என கணிக்க தெரியாத மருத்துவர்களும் , உயிர்பறிக்கும் போலி,காலாவதியான மருந்துகளுமே தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கிறது. இந்த வெட்கக்கேட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு அறுவை சிகிச்சை செய்து குனப்படுத்தவேண்டியது தமிழக அரசின் கடமை . சட்டம் தன் கடமையை செய்யுமா?

அதிசய மரம்

Saturday, March 13, 2010


       இப்புவியிலுள்ள மரங்களில் அதிசிய மரம் என அழைக்க தகுதியுடைய மரம் பனை. ஆம் இதன் மரத்தின் தண்டு முதல் பனை ஓலை, மட்டை,கிழங்கு , நுங்கு,நார் என யாதன் பாகங்கள் ஒவ்வொன்றும் ஒருவகையில் பயன் தருகின்றது.
         இதன் சிறப்பம்சம் தீராத வறட்சி காலங்களில் கூட காய்ந்துவிடாமல் வளரும் தன்மைகொண்டது .  அதேசமயம் பனையால் நாடார் என்ற சமூகம் இன்று வாழ்ந்துவருவதற்கும் , பொருளாதார நிலையில் முன்னேற்றத்திற்கும் பேருதவியாக இருந்துவந்தது , இருக்கின்றது.  இந்த புவியில் கடுமையான வறட்சியால் சுற்றுசூழல் சமநிலைக்கு யாதன் பங்கும் முக்கியமானது.
     இப்படி கள் என்ற பானம் தயாரிப்பதிலிருந்து , வெள்ளம் தயாரிப்பது, நுங்கு, கிழங்கு என உணவுப்பொருளாகவும், கட்டுமானத்திற்கு தேவையான மரம், நார், அழகு மற்றும்  குழந்தைகள் விளையாட்டு பொருளாகவும் , படுத்துறங்கும் பாய் முடையவும் பயன்படுகிறது. இப்படிப்பட்ட அதிசயத்தக்க மரம் அதிசய மரம்தானே?

அரங்கேறும் பணநாயகம் குழப்பத்தில் மக்கள்

           தமிழகத்தில் உள்ள தருமபுரிமாவட்டத்தில் பென்னாகரம் தொகுதியின் இடைத்தேர்தல் வரும் இருபத்திஏழாம் தேதி நடைபெற உள்ளது.  இங்கு தி.மு.க., ஆ.தி.மு.க., பா.ம.க. தே.மு.தி.க.வேட்பாளர்கள் உள்ளிட்ட 33 பேரின் மனுக்கள் ஏற்கப்பாட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளனர்.
            கடந்த முறை தேர்தல் தேதி அறிவித்தவுடனே தேர்தல் வேலைகள் சுறுசுறுப்பாக முடிக்கிவிடப்பட்டு தனியாத்துப்போட்டி என அதிரடியாக அறிவித்தார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் .  தி.மு.க.வேட்பாளராக மறைந்த எம்.ல்.ஏ. மகன் இன்பசேகரன் அறிவிக்கப்பட்டு கடுமையான வறட்சி வேலையின்மை காரனகளால் அண்டை மாநிலமான கர்நாடகாவின் பெங்களூர் பகுதிகளில் வசித்துவரும் சுமார் 25,000  வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டியதாக செய்தி .பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அந்த தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய மேட்டூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பாட்டாளிமக்கள் கட்சி தலைவர் மணியின் மகன் தமிழ் குமரன் , ஆ.தி.மு.க. வேட்பாளராக அன்பழகன்,தே.மு.தி.க.வேட்பாளராக பாட்டளிமக்கள் கட்சியிலிருந்து விலகி சென்ற வழக்கறிஞர் போட்டியிட்டாலும் பென்னகரத்தை போருத்தவாரை ஆளும் கட்சியின் இன்பசேகரனும், பாட்டளிமக்கள் கட்சியின் தமிழ் குமரனும் களத்தில் சரிநிகர் போட்டியாளர்கள்.
          ஆளும் கட்சியின் வேட்பாளர் இன்பசேகரன் ஆளும் அதிகாரம்,பணம் இவைகளை நம்பியும் , பா.ம .க.வின் வேட்பாளர் தமிழ்குமரன் தனது தந்தையின் சாதனைகள்,சாதி ஓட்டுக்கள் இவைகளை நம்பி நிற்கிறார்.
தொகுதியில் நடைபெறும் சம்பவங்கள் சில:
           கடந்த இரண்டுமாதங்களாக ராமதாஸ் ஆதரவாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் வீடு வீடாக சென்று வெற்றிலை பக்கு வைத்து , அங்குள்ள மக்களின் வேலைகளை பகிர்ந்து ஒட்டுவேட்டையாடிவருகின்றனர். கடந்த இருமாதங்களாக அமைதிகாத்து கடந்த இருவாரங்களாக சிலிர்த்தெழுந்த ஆளும் திமுக. சேலைகள் , சாக்கெட்டுகள் , வேட்டிகள் என இனாம் பொருட்கள் கொடுத்தான் , பிரியாணி, கலர் சாராயம் என விருந்து வைத்தும் தொகுதியில் குக்கிராமங்கள் விடாது கலக்கி விட்டு காவலர்கள் ஏவிவிட்டு சோதனை சாவடிகளை அமைத்து விட்டு ஊர்களுக்கு திரும்பிவிட்டனர்.
              கடந்த ஐந்து நாட்களுக்கு முன் ஆரம்பித்த மக்களுக்கான பணப்பட்டுவாடா ஒரு ஓட்டுக்கு ஆயிரம் என இரவு பகலாக நடந்து முடிந்தது.கடந்த இரு திங்களுக்கு களத்தில் சுறுசுறுப்பாக ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆதிமுக.வினர் நகர பகுதிகளில் மட்டும் வளம் வருகின்றனர்.
இடைத்தேர்தலின் சனநாயகம்:
              இடைதேர்தல் என்றால் ஆளும் கட்சி மட்டுமே வெற்றிபெறும் நிலை இன்று உள்ளது. இடைதேர்தல் என்பது ஆளும் ,எதிர் கட்சிகளுக்கு மக்கள் மனநிலை அறிய உதவும் தேர்தல்.ஆனால் கடந்த ஆதிமுக காலத்தில் அரக்கோணம்,சைதாபேட்டை என தமிழகத்தின் பல இடைத்தேர்தலில் அதிமுக. வென்றது ஆனால் பொது தேர்தலில் தோல்வியடைந்தது.  அதற்கு காரணம் அதிகார துஷ்பிரயோகம் செய்து வென்றதுதான்.அதேநிலை தற்போதும் தொடருகிறது.  சோதனை சாவடிகளில் உள்ள காவலர்கள் எதிர்கட்சிகளின் பிரதிநிதிகளை சோதனை செய்வதும், ஆளும் தரப்பின் தேர்தல்விதி மீறல்களை கண்டுகொள்ளாமல் விடுவது என்ன ஜனநாயகம்.  எதிர்கட்சிகளின் புகார்கள் மீதான நடவடிக்கைகளை முடிக்கிவிட தேர்தல் ஆணையம் முனைப்புகட்டிடவேண்டும் அப்போதுதான் ஆளும் தரப்பின் வரம்புமீறல் கட்டுக்குள் வரும் .  இதே நிலை பொது தேர்தலிலும் தொடரவேண்டிய நிலைக்கு மக்கள் மனநிலை தள்ளப்ப்படுமானால் நாட்டில் நல்ல மக்கள் பிரதிநிதிகள் இன்றி ஊழல் பேர்வழிகளிடம் நாடு சிக்கினால் மக்கள் பேராபத்தில் சிக்குண்டு வறுமையும் , வேலைவைப்புமின்றி அவதியுறும் நிலைக்கு ஆளாவார்கள் . வாழ்க ஜனநாயகம் . வெல்லட்டும் மக்கள் எண்ணங்கள்.

தண்ணீர் தேவையில் தன்னிறைவு எப்போது?

Friday, March 12, 2010

               புவி 29 சதவிகிதம் நிலப்பரப்பையும் 71 சதவிகிதம் நீர்பரப்பையும் கொண்டது .  புவியிலுள்ள நீர்பரப்பில் 97 சதவிகிதம் உப்புநீராகவும் மீதமுள்ள 3 சதவிகிதம் நன்நீராகவும் உள்ளது.  வீட்டு உபயோகத்திற்கும், விவசாயத்திற்கும்,தொழில் வளர்ச்சிக்கும்,சுற்றுச்சூழல் உள்ளிட்ட மனித வள மேம்பாட்டிற்கு  நன்னீர் தேவைப்படுகிறது .   நன்னீர் தட்டுப்பாடு , தேவையை காட்டிலும் பலமடங்கு அதிகரித்துவிட்டது .  ஆற்றுப்படுகை,ஏரிகள்,குளங்கள்,புவியின் அடிப்பரப்பு,துருவப்பகுதிகளில் உறைந்துள்ள பனிப்பாறைகளில் நன்னீர் உள்ளது.
நன்னீர் தட்டுப்பாடு தேவையைக்காட்டிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது இதற்கு மக்கள் தொகை பெருக்கம் , தொழில் சாலைகள் பெருக்கத்தினால் அவைகளுக்கு தேவைப்படும் அளவுக்கதிக நன்னீர், பெருகி வரும் நகரமயம் ,நதிகளில் கலந்துவிடும் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுகளால் அழிந்துவரும் நன்னீர் ; இவைகளால் நன்னீரின்  அளவு குறைந்து விடுகிறது.
உலக நன்னீர் நாள் :
           மார்ச் 22 உலக அளவிலான நன்னீர் நாளாக கடைபிடிக்கப்படுக்கியறது .  இதில் நன்னீரை  பாதுகாத்தல் ,மழை நீரை சேமித்தல் , தண்ணீர் சிக்கனம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும்.
           தண்ணீர் என்பது ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த ஒரு திரவப்பொருளாக  மட்டுமே பார்க்கக்கூடாது அது இப்புவியில் உயிர்கள் நிலைத்து வாழ அடிப்படை ஆதாரம், இதை பாதுகாப்பதும், சிக்கனமாக செலவிடுவதும் சாதாரண குடிமகன் முதல் முதன்மை குடிமகன் வரை ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல எதிர்கால சந்ததியினரின் தேவைகளை விட்டுசெல்லும் பொறுப்பும் ஆகும்.
 அரசின் கொள்கையும் மக்களின் தண்ணீர் தேவையும்:
              மக்களுக்கு விவசாயம்,குடிக்க உள்ளிட்ட வீட்டு தேவைகளுக்கு சுத்தமான , பாதுகாப்பான நன்னீரை தரவேண்டியது அரசின் கடமை என்பதனை அரசுகள் உணரவேண்டும் இதனை தேர்தல் நேர வாக்குறுதிகளாக மட்டுமே பயன்படுத்தாமல் ஆயுட்கால கடமையாக செய்யவேண்டும். பெரும்பாலும் நச்சு ரசாயனங்கள் பயன்படுத்தப்படும், நச்சு ரசாயனங்கள் உற்பத்திசெய்யப்படும் தொழிற்சாலைகள் முழுவதும் ஆற்றின் கரைகளிலேயே கட்டுவதற்கு அனுமதி கேட்கப்படும்பொழுது அதை அரசுகள் அனுமதிக்கப்படக்கூடாது , ஏற்கனவே செயல்பட்டுவரும் தொழிற்சாலைகள் தாங்கள் வெளியேற்றிவரும் நச்சுக்கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டபிறகு நீர்நிலைகளில் கலக்கவிடவேண்டும், அனுமதி முடிந்த தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்க கூடாது.
பல்லுயிர் பெருக்க பேரழிவு:
             தொழிர்சாளைகளிலிருந்து வெளியேறும் நச்சுரசாயன கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் ஆறுகளில் கலக்கவிடுவதால் ஆற்றின் மூலம் கடலில் கலக்கும் பொது கடலிலுள்ள மீன்கள் ,டால்பின்கள், திமிங்கலங்கள் ,பவளப்பாறைகள் உள்ளிட்ட லட்சக்கணக்கான உயிர்கள் பாதிக்கப்படுகின்றன.  ஆறுகளில் கலக்கின்ற நச்சுரசாயனகழிவுகள் அருகில்(நதிக்கரை) உள்ளஏரிகள்,குளங்கள்,கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில்  கலப்பதால் மக்களின் குடிநீர் மாசடைந்து மனிதா வளமும், பிற உயிர்களும் பல்வேறு உயிர்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு அழிவையும் இதன்மூலம் புவியில் மனிதவளம் அழிவை சந்திக்கிறது.
              மனித வளம் நிலைத்தவளர்ச்சியடைய சுத்தமான நன்னீரை பாதுகாப்பதும், சேமிப்பதும் இன்றியமையாதது இதை அரசின் கொள்கையாகக் கொண்டு அதிக நிதி ஒதுக்கி நீர் தேவையை தன்னிறைவு செய்வதில் முனைப்பு காட்டிடல் வேண்டும்.

    

நித்தியானந்தா கம்பிகள் எண்ணட்டும் புத்திகள் வரட்டும்

Sunday, March 7, 2010


            "பெற்ற தாயாக இருந்தாலும் நள்ளி
ரவில் சந்திக்காதே " இது ஆண்மீகப்பநிகளில் சிறப்புற தன்னை அரநித்து தன்னைப்போலவே உன்னத சீடரை வளர்த்து திருமணத்திற்கு வற்புறுத்தியும் திருமணம் செய்துகொள்ளாமலே எந்தவித களங்கமுமின்றி இந்தியாவின் சாராம்சத்தையும், இந்துமதத்தின் சாராம்சத்தையும்,பாரம்பரியத்தினையும் உலகரியச்செய்து வாழ்ந்து மறைந்த விவேகானந்தர் போன்ற ஆண்மீகத்துரவிகள் வாழ்ந்து மறைந்த புண்ணிய பூமி நமது இந்திய பூமி.
              சமீப காலமாக கடவுளின் அடிமைகள் என்று ஆண்மீகப்பனிகளில் ஈடுபடும் ஆசாமிகள் பணத்தின்மீதும்,புகழின்மீதும் மோகம்கொள்ளும் நிலைக்கு மீறி கள்ள உறவுகளில்  ஈடுபட்டு ஆன்மீகத்திற்கும் இந்த மண்ணின் பண்பாட்டிற்கும் ஊறுவிளைவித்து வருவது பிரேமானந்த ,கல்கி, போன்ற சாமியார்களும் , தேவநாதன் போன்ற குருக்கல்களும் இறைவன் இருக்கும் கருவறை , இறைவனாக தங்களை வணங்கும் பீடங்களில் தங்களது குறைகளை சொல்லி நிவர்த்தி செய்துகொள்ள வரும் பக்தர்களை பொய்யான வாக்குறுதிகளை சொல்லி அப்பாவி பெண்களின் கற்பை சூறையாடி கடவுளின் கற்பகிரகத்தின் புனிதத்தை கெடுத்து , யாதுமறியாத பெண்களையும் பாவசெயலுக்கு ஆளாக்கி வருவது நீண்டகாலமாக நடந்துவருகிறது. தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நிலையில் இவர்களின் லீலைகள் அம்பலமாகிவருகிறது.
கொடியவர்களின் கூடாரமாகிவிட்ட கோவில்கள்:
                "கோவில்கள் வேண்டாமென்று சொல்லவில்லை ,கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது" என்ற பராசக்தி படத்தின் வசனத்திற்கு வக்காலத்து வாங்கும் நிலை ஏற்பட்டு நெடுநாளாகிவிட்டது.
தலைப்பாகை கட்டியவனெல்லாம்:
        புலியைப்பார்த்து பூனை சூடபோட்ட கதையாகிவிட்டது திருவண்ணாமலையை சொந்த ஊராகக்கொண்ட நித்தியானந்தா நிலை.   இந்தியாவின் மிகச்சிறந்த ஆன்மீக தலம் திருவண்ணாமலை , இங்கு மலைவடிவாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து மக்களை காக்கிறார் பரம்பொருளான அருணாச்சல ஈசுவரர்.  இவரின் லிங்கத்தையும் விவேகானந்தரின் மாதிரி தலைப்பாகை இவற்றை வைத்து  தியான மடங்களை ஏற்படுத்தி கோடிக்கணக்கில் பணம், கடவுளாக தன்னை சித்தரித்து வானலாவபுகழ், ஏராளமான சொத்துக்களை , லட்சக்கணக்கான அப்பாவிமக்களை நம்பவைத்து சராசரி மனிதனைவிட கேவலமான முறையில் தன் அந்தரங்க லீலைகளை அரங்கேற்றி வந்துள்ளது சமீபத்தில் சபை அறிந்தது  ஒரு தனியார் தொலைக்காட்சிகளின் மூலம்.
ஆன்மீகமும் ஆகமவிதிகளும்:
                    
ஆன்மீகத்தின் பெயரால் சிலர் இந்தியாவின் சிறப்புகளை உலகறியசெய்ததன் மூலம் இறந்தும் வாழ்ந்துகொண்டிருப்பதன் காரணம் போலிகள் உருவாக நேர்ந்தது. அப்பாவி மக்கள் ஆலயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குமேல் செல்ல அனுமதி மறுப்பது , குறிப்பிட்ட நபர்கள் கடவுள் சிலைகளை தொடுவதற்கும்  பல்வேறு நிலைகளில் ஆகம விதிகள் ஆழ்டாரம் , அனுழ்டாரம் என்றெல்லாம் சொல்லி வந்தவர்கள் பெண்களை கடவுளுக்கருகில் துகிலுரிந்து நாசம் செய்து இச்சை தீர்த்துள்ளனர்.   கடந்த இரண்டாம் நாள் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பான செய்திகளில் நித்தியானந்தா நாடிகள் ரஞ்சிதாவுடன் சல்லாபமாக இருந்துள்ளார் மேலும் பல நடிகைகளை தம் வலையில் வீழ்த்தி இச்சை தீர்த்துள்ளார் .  
சட்டம் தன் கடமையை செய்யட்டும்:
             கடவுள் பெயரால் ஆண்மேகத்தினையும், மக்கள் நம்பிக்கையையும் பாழ்படுத்தி வரும் போலிகளை , போலி நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் .  நித்தியானந்தா , ரஞ்சிதா உள்ளிட்ட புகாரில் தொடர்புடையவர்களை கைது செய்து தண்டிக்க சட்டம் தயக்கம் காட்டிடவேண்டாம். இப்படிப்பட்ட கயவர்களெல்லாம் கம்பிகள்  எண்ணட்டும் புத்திகள் வரட்டும்.

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger