அதிசய மரம்

Saturday, March 13, 2010


       இப்புவியிலுள்ள மரங்களில் அதிசிய மரம் என அழைக்க தகுதியுடைய மரம் பனை. ஆம் இதன் மரத்தின் தண்டு முதல் பனை ஓலை, மட்டை,கிழங்கு , நுங்கு,நார் என யாதன் பாகங்கள் ஒவ்வொன்றும் ஒருவகையில் பயன் தருகின்றது.
         இதன் சிறப்பம்சம் தீராத வறட்சி காலங்களில் கூட காய்ந்துவிடாமல் வளரும் தன்மைகொண்டது .  அதேசமயம் பனையால் நாடார் என்ற சமூகம் இன்று வாழ்ந்துவருவதற்கும் , பொருளாதார நிலையில் முன்னேற்றத்திற்கும் பேருதவியாக இருந்துவந்தது , இருக்கின்றது.  இந்த புவியில் கடுமையான வறட்சியால் சுற்றுசூழல் சமநிலைக்கு யாதன் பங்கும் முக்கியமானது.
     இப்படி கள் என்ற பானம் தயாரிப்பதிலிருந்து , வெள்ளம் தயாரிப்பது, நுங்கு, கிழங்கு என உணவுப்பொருளாகவும், கட்டுமானத்திற்கு தேவையான மரம், நார், அழகு மற்றும்  குழந்தைகள் விளையாட்டு பொருளாகவும் , படுத்துறங்கும் பாய் முடையவும் பயன்படுகிறது. இப்படிப்பட்ட அதிசயத்தக்க மரம் அதிசய மரம்தானே?

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger