கியோட்டோ ,கோபன் ஹெகன் உடன்படிக்கைகள் உலகை காக்குமா?

Friday, December 18, 2009

          கடந்த ஏழாம் நாள் டென்மார்க் நாட்டின் கோபன் ஹெகன் நகரில் 192 நாடுகளைச்சேர்ந்த அமைச்சர்கள் , தொண்டு நிறுவனங்கள் , பல்கலைக் கழகங்கள் என பிரமாண்டமாக மட்டுமல்ல உலக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு தொடங்கிய இந்த மாநாடு 1997 இல்  கொண்டுவரப்பட்டு 2008-2012 என்ற கால வரையறைக்குள் உலக நாடுகள் தாங்கள் ஏற்கனேவே வெளியிட்டுவரும் கரியமில வாயுவை 5.2 சதம் தலைகீழாக குறைத்துக்கொள்ளவேண்டும் இதன் மூலம் உலக கரியமில வாயு வெளியேற்றத்தை பாதியாகக்குறைக்க முடியும் ; காற்று மண்டலத்தில் 280ppm  கரியமில வாயு தற்போது 389ppm என்ற  அளவில் இருப்பதால் புவியிலிருந்து 15 கி .மீ முதல் -45 கி.மீ. வரையிலான காற்றுமண்டலபகுதியிலுள்ள ஓசோன் படலம் , புதைவடிவ எரிபொருட்களான பெட்ரோல்,டீசல் , தார், நிலக்கரி  இவைகளின் அளவுக்கதிக ஒப்யன்பாட்டல் வெளியாகும் கரியமில வாயு, குளிர்சாதன பொருட்களிலிருந்து வெளிவரும் குளோரோபுளோரோ  கார்பன் வாயுக்கள், விவசாய நிலங்களில் தேக்கப்படும் அளவுக்கதிக நீரால் உற்பத்தியாகும் மீத்தேன் வாயுக்கள் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களால் அழிவுற்று காற்று மண்டலத்தில் மூன்று மூலக்கூறுகளை கொண்ட ஆக்சிஜன் (ஓசோன்) வாயுக்கள் குறைந்து , சூரியனில் இருந்து வெளிவரும் சக்திவைந்த புரவூதக்கதிர்கள் புவியை தாக்கி சூடடைய செய்து துருவப்பகுதியிலும், இமய மலையிலும் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து அழகிய தீவுகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் வெகு அருகில் உள்ளது.
                    2004 டிசம்பர் 13 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலை கிட்டத்தட்ட 1,50,000 பேரை சுமித்ரா தீவிலும் தமிழகத்திலும் பலிவாங்கியது, ஏராளமான பொருளாதார சீரழிவை உண்டாக்கியது சுற்று சூழல் வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாக ஆகிப்போனது . இது போல அமரிக்காவிலும் பல அரிக்கன் சூறாவளிகளின் சீற்றத்தால் சில மாகாணங்களே புரட்டிப்போடபட்டது மறக்கமுடியாது , இந்தியாவிலும் குஜராத் நிலநடுக்கம், புயல், ஒரிஸ்ஸா புயல் என புயல், ஆழிப்பேரலை என புரட்டிபோடுவ்வது ஒருபுறம் கடுமையான வறட்சி மறுபுறம் என உலகை பல விதங்களில் பொருளாதார ரீதியாகவும் , மனித வள ரீதியாகவும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தியது நாம் யாவரும் மறக்கமுடியாத சம்பவங்கள்.
                     நடைமுறையில் உள்ள கியோட்டோ உடன்படிக்கை கையோப்பமிட்ட்ட அமரிக்க உடனே வெளியேறியது , உலக நாடுகள் வெளியிடும் மொத்த கரியமில வாயு வெளியேற்றத்தில் பாதியளவு கரியமில வாயு வெளியேற்றத்தை செய்து கால நிலை மாற்ற குற்றத்தை செய்து உலகநாடுகளின் பேராபத்திற்கு அடிப்படை காரணமாக விளங்கியது அமரிக்க .
                    தற்போது நிறைவடையவுள்ள மாநாடு பசுமை இல்ல வாயுக்களின் சதவீதத்தை   25 வரை  குறைக்கவேண்டும் , இதில் வாளர்ந்த நாடுகள் வளர்ச்சியடைந்து வரும்  நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர் , இதை இந்தியா, சீனா , தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்கின்றனர் .
                   இன்று அமெரிக்கா , இந்தியா,சீனா நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளின் பிரதமர்கள் , ஜனாதிபதிகள் கலந்து கொள்ள உள்ளனர் . இதில் நல்ல முடிவெடுக்க வேண்டும் என எதிர்பார்கின்றனர் ஆனால் வழக்கமான அரசியல் சண்டையை அங்கும் அரங்கேற்றியுள்ளனர் இது மனித குலத்திற்கு மட்டுமல்ல உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் காப்பாற்ற எடுக்கும் முடிவு என்பதை உலக தலைவர்கள் நினைவில் கொள்ளவேண்டும் , தற்பொழுது கொண்டுவரவுள்ள கோபென்ஹெகன் உடன்படிக்கை பழைய கியோட்டோ உடன்படிக்கையின் அம்சத்தையும் தழுவி கால மாற்றத்திரும், எதிர்கால மாற்றங்கள் , மனித குளத்தின் பாதுகாப்பு , பொருளாதார சவால்களை உள்ளடக்கியதாக இருக்கும் விதத்தில் அமையவேண்டும் இதில் வளர்ந்த நாடுகள் முக்கியத்துவம் எடுத்து வளர்ந்துவரும் நாடுகளின் நலனையும், ஆபத்தை எதிர்நோக்கியுள்ள தீவுகள் பாதுகாப்பையும் நிலைத்தவலர்ச்சி உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும் , நமக்கு இருப்பது ஒரு பூமி , நாம் பூமியை காப்ப்போம் , பூமி நம்மை காக்கும்.

ஜெயராம் ரமேஷ் கோமாளித்தனம்:கோபென் ஹெகன் மாநாடு

Monday, December 14, 2009

         கடந்த ஏழாம் தேதி டென்மார்க் கோபன் ஹெகன் நகரில் பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாடு தொடங்கியது இந்த மாநாடு வரும் பதினெட்டாம் தேதி வாரை நடைபெறுவதாக உள்ளது.
         இந்த மாநாட்டில் 192 நாடுகளை சேர்ந்த பிரதமர்கள் , குடியரசுத்தலைவர்கள், சுற்றுச்சூழல் அமைச்சர்கள் , தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு உலகம் வெப்பமயமாதலால் கடுமையான சூறாவளி, பேய்மழை , கடுமையான வறட்சி, நிலநடுக்கம், கடல்மட்டம் உயர்வு, சுனாமி எனப்படும் ஆழிப்பேரலைகள் இவைகளின் தாக்கம் மென்மேலும் அதிகரித்துக்கொண்டு வருகின்றன .  கடந்த நூறாண்டுகளாக மனித குளம் உலகை தொழில் மயமாக்கியது , அளவுக்கதிகமான புதைவடிவ பொருட்களான பெட்ரோல்,டீசல்,நிலக்கரி,தார் பயன்பாட்டால் கரியமிலவாயு வெளிஎரியதான் விளைவாக ஓசோன் மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு சூரியனின் புறஊதாக் கதிர்கள் புவியை தாக்கி புவியை வெப்பமாக்கியதால் பருவநிலைகள் மாற்றம்,புவியிலுள்ள உயிர்கள் புதிய வகை நோய்களால் பாதிப்பு, இயற்கையின் பேரிடர்களால் மனிதகுலம் பேரழிவை  உயிர்கள் மூலமும், பொருளாதார மூலமும் சந்தித்தது மறக்கக்கூடியதல்ல அனைத்தும் சூழல் வரலாற்றில் மெயில் கற்களாக மாறிப்போனது.
              இயற்கை மனிதனுக்கு எதிராக மாறிப்போனதை தடுக்க மனிதனால் முடியாததுதான் ஆனால் நிலை மேல்மேலும் தீவிரம் அடையாமல் நிலைமையை ஓரளவுக்கு மனித சக்தியால் சமாளிக்க , நிவாரணம் தேட கூடிய நிலையிலேயே வைத்திருக்கவேண்டியது ஒலகின் மனித சமூகத்தின் கடமை .
கோபென் ஹெகன் மாநாடு:
              கடந்த முறை  நடைபெற்ற  பாலி மாநாட்டில் 192 நாடுகளின் ஒப்புதலோடு கொண்டுவரப்பட்ட கியோட்டோ ஒப்பந்தம் புவியின் வெப்பத்தை குறைக்க உலக நாடுகள் தாங்கள் வெளியிட்டுள்ள கரியமில வாயுவின் அளவை 5.2 ஆக தலைகீழாக குறைக்க வேண்டும் என கொண்டுவரப்பட்டது இதன் காலம்  2008-2012 இடையேயானது இதில் கையொப்பமிட்ட அமெரிக்கா உள்ளிட்ட சில வளர்ச்சியடைந்த நாடுகள் உடன்படிக்கையை மதிக்காமல் வெளியேறின எனவே இந்த ஒப்பந்தம் உயிர்பெற மிகுந்த சிரமம் ஆகிப்போனது.  ஒலக நாடுகள் வெளியிடும் மொத்த கரியமில வாயுவில் அமெரிக்காவின் கரியமில வாயு வெளியிடும் அளவு பாதியாகும் எனவே அமெரிக்கா வெளி ஏறியதும் உடன்படிக்கை கோமா நிலையை அடைந்தது .  2012 முடிவுறும் க்யோட்டோ உடன்படிக்கையை செயல்படுத்த அதற்கான நடவடிக்கையை உலக நாடுகள் எடுக்கவேண்டிய தருணம் இது .
           கடந்த காலங்களில் ஏற்பட்ட  சுனாமி , புயல், ஆழிப்பேரலை,வரட்சி, வெள்ளபெரழிவு , பேய் மழை இவை எல்லாமே இந்தியா போன்ற வளரும் நாடுகளை மட்டுமல்ல சிறிய , வல்லரசுகளையுமே சின்னபின்னம்மாக்கியது மறந்துவிடமுடியாது அதை நினைவில் வைத்து வளர்ந்த நாடுகள் முன்வரவேண்டும்.
              டென்மார்க் கோபன் ஹெகன் நகரில் நடிபெரும் மாநாட்டில் அனைத்து வளரசுகள்,வளர்ந்துவரும் நாடுகள் , தொண்டு நிறுவனங்கள் , பல்கலைகழகங்கள் புவிவெப்பமயமாதளுக்கு காரணங்கள், தீர்வுகள் , மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளுக்கான வரைவு கருத்துருக்களையும் , தாங்கள் நாட்டின் செயல்பாடுகள் குறித்து கொள்கை விளக்க அறிக்கைகளை தாக்கல் செய்யப்படவேண்டும். பல வளர்ந்துவரும் நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளை குற்றம் சாட்டி அவர்களை பொறுப்பேற்க செய்து கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க வகை செய்யவேண்டும் என்றும் , வல்லரசுகள் வளர்ச்சியடையும் நாடுகள் தங்கள் அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க வேண்டும் என பல வரைவு அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர்.
இந்தியாவின் அமைச்சர் கோமாளித்தனம்:
           இந்தியா சுற்று சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இந்தியாவின் சார்பில் சென்ற அரசு பிரதிநிதி, பசுமை தாயக தொண்டு நிறுவனத்தின் சார்பில் முன்னாள் மத்திய  அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவியும் பசுமை தாயகத்தின் தலைவரும் திருமதி.சௌமியா உள்ளிட்ட நபர்கள் கலந்துகொண்டனர் .
            இந்தியா அரசின் சார்பாக பேசிய சுற்றுசூழல் அமைச்சர் யய்ரம் ரமேஷ் புவி வெப்பமயமாதலுக்கும் , இமயமலை உருகுதலுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்து உலக நாடுகள் எதிர்ப்பும், கோபமும் கொண்டுள்ளது இந்தியர்களுக்கு ஒரு அவமானகரமான செயல் பிறகு இந்தியா வின்ஜாநிகளின் மீது பழிபோட்டு தப்ப முயற்சி செய்திருக்கிறார் தான் ஒரு சுற்று சூழல் நிபுணர் அல்ல என சக வாங்கி அவமானப்பட்டுல்லார். துறையினுடைய அமைச்சருக்கு அழகா இது .
               உலகமே புவி வெப்பமயமாதலால் துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது என ஆராய்ச்சியும் , அது தொடர்பான வீடியோ காட்சிகளுமே உலகில் விவாத பொருளாகி நாள் தோறும் கட்டுரைகளாக, கருத்தரங்குகளாக வெளிவந்துகொண்டிருக்க வேற்றுகிரகத்திளிருந்து வந்ததுபோல நாள்தோறும் பாநிபாரைகள் வளருகிறது என்றும், அதுவாக கரைகிறது என்றும் கூறி அவமானப்பட்டு நிற்கிறார்.
             ஓசோன் படலம் (O3)  மூன்று ஆக்சிஜன் மூலக் கூறுகளை கொண்டது,இந்த படலம் தொழிற் சாலைகளால் , வாகனங்களால் வெளியேற்றும் கரியமிலவாயு, குளோரோ ப்ளோரோ கார்பன்,, குளோரின் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களால் சிதைந்து, புவியில் இருந்து உற்பத்தியாகிற  ஆசிஜன்  (இரண்டுமூலக் கூறுகளை கொண்டது  ) பசுமை இல்ல வாயுக்களால் அழிவுற்று இரண்டு மூலக்கொருகளை கொண்ட அக்சிஜன்
அணுக்கள் மீண்டும் மூன்று அணுக்களை கொண்ட ஓசோன் படலமாக மாறி
வருவது இயற்கையாக நடைபெறுவதுவழக்கம் தான் என்றாலும் நாம் அளவுக்கதிகமாக புதை வடிவ எரிபொருகளை பயன்படுத்தி
கரியமிலவாயுவையும், குளிர்சாதன பொருட்களை பயன்படுத்திகுளோரோ புளோரோ கார்பன்களை  ,மற்றும் பசுமை இல்லவயுக்களான மற்ற வாயுக்களையும்
வெளியிடுவத்டை குறைத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் நோக்கம் ,அதை எப்படி செய்வது என அறிக்கை தாக்கல் செய்யும்போது வளர்ந்த நாடுகளின் பங்குபற்றியும் , வளர்ந்துவரும் நாடுகளின் பங்கு பற்றியும் பேசவேண்டுமே தவிர முன்னுக்கு பின் முரனாகபேசி அவமானபடவா நமது தேசசுற்று சூழல் அமைச்சர் சென்றார் வெட்ககேடு.
              இந்தியாவில் கேட்பாரற்ற தமிழன் பிரச்சினையில் கோணங்கித்தனமாக பேசி
முல்லைபெரியார் அணை விவகாரத்தில் கேரளாவிற்கு சாதகமாக நடவடிக்கை செய்ததுபோல செய்ய அந்த மாநாடு என்ன இந்தியா அனைத்துக்கட்சி கூட்டமா அல்லது அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டமா?
            தீவிரவாதம், பொருளாதாரம்,வேலைவாய்ப்பு, சுற்றுசூழல் என எந்த ஒரு துறைக்கும் உருப்படியான தேர்ந்த அமைச்சர் இல்லை என்பது இந்தியா அளவில் இருந்தரகசியம் உலகறிய ஒவ்வொரு வைப்பு ஏற்படுத்திகொள்கிறது அரசு மாற்றப்படவேண்டும் அமைச்சர்கள் திறமையின் அடிப்படையில் இல்லையேல் திறமை உள்ளவர்களுக்கு தரவேண்டும் ஆட்சியை.

நவீன தொழில் நுட்ப முறைகள் முறைப்படுத்தவேண்டும்

Friday, December 11, 2009

          மீபத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு காவல்துறை கஸ்டடியில் வைத்து விசாரிக்க மூன்று நாட்கள் நீதி மன்றம் அனுமதியளித்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் காஞ்சிபுரம் கோவில் ஒன்றின் அர்ச்சகராக பணிபுரிந்த தேவநாதன் காம லீலைகள் .  தேவநாதன் பணிபுரியும் கோவிலுக்கு வரும் பெண்களிடம் நைசாக பேசி அவர்களின் மனநிலை, கழ்டங்கள் , குறைகள் என ஆதரவாக பேசுவதுபோல் பேசி பல பெண்களை விழச்செய்து கருவறையில் உறவு வைத்துக்கொண்டால் புண்ணியம் என சொல்லி புனிதமான் கடவுளின் கருவறையில் பலபெண்களின் திருமணமான , திருமணமாகாத பெண்கள் என இவன் லீலைகளை அரங்கேற்றியுள்ளான்.  இந்த கருமத்தை தன செல் போனில் படம் எடுத்துவைத்து ரசித்திருக்கிறான் இன்று அதை உலகம் முழுவதிலும் செல்போனிலும் , இணையதளத்திலும் வளம் வரும் இந்த கருவறை கருமங்கள் .
  பெண்களை சீரழிக்கும் நிலைக்கு காரணம் என்ன :
                  பெண்கள் பெரும்பாலும் தங்களது அழகு, நேர்த்திக்காக்கப்பட நினைப்பது இயல்பு. ஆனால் அவர்களின் போக்கு நமது கலாச்சார மற்றும் பாரம்பரிய நடைமுறைகளுக்கு ஏற்றவகையில் இல்லாமல் சமீபத்தில்  ஏற்பட்டு அவற்றுடன் பழக்க வழக்கங்கள், நடை,உடை,பாவனைகள், சிந்தனைகள் படித்தவர்கழ்மட்டுமல்லாது, பாமர மக்களிடமும் ஏற்பட்டுவிட்டது தொலைக்காட்சிகள், பேஷன் டி.வி., சினிமாக்கலாச்சாரங்கள், இணையதள நடவடிக்கைகளின் தொடர்பால் நமது கலாச்சாரம், பாரம்பரியம் சலித்துப்போன ஒரு குறிப்பிட்ட செக்டர் பெண்கள் இப்படிப்பட்ட கலாச்சார சீரழிவில் ஈடுபடுகின்றனர்.
               பெரும்பாலும் பெண்களின் எண்ணங்கள் தங்கள் குடும்ப சஊழல், வருமானம், பெற்றோர், கணவர்,பிள்ளைகள் நிலை, குடும்ப நிலை இவைகளை உணர்ந்து இருந்தால் இவர்களுக்கு நிச்சயம் இப்படி நடக்க மனம் வரத்து, நடுத்தர வர்க்கத்தில் உயர்ரக வாழ்க்கை வாழ , உயர்ரக குடும்பத்தில் உறவுகள் சரியில்லாத நிலை , குடும்பத்தில் உறவினர்களுடன் உரையாடாத நிலை இவற்றில் விரக்தி, போன்ற பல காரணங்களால் பெண்கள் நயவஞ்சகர்களின் இச்சைக்கு ஆளாகின்றனர் , இவர்களுக்கும் பொறுப்பு இருந்திருக்கவேண்டும் .  
பிரேமானந்த சாமியார் , டாக்டர் .பிரகாஷ் உள்ளிட்ட பல மோசடிபெர்வழிகளின் கதை தெரிந்திரிந்தும் , அதுவும் ஆலயம் புனிதம் , தெய்வீகம் அறியாது அவன் சொன்ன வார்த்தை பொய் என உயர் நிலை குடும்ப பெண்கள் கூட பகுத்தறிய முற்படாதாதது வெட்ககேடு .
                இப்படிப்பட்ட பெண்கள் இருக்கும் வரை ஆயிரம் பிரேமானதாக்கள் , பிரகாஷ், தேவனாதன்கள் வரத்தான் செய்வார்கள். இன்று இவன் செல்போனில் பதிவு செய்து வைத்து ஆசைக்காக பார்பதற்கு என்று சொல்லிஉள்ளான் , ஆனால் இவன் போன்ற ஆட்கள் இதை வர்த்தக ரீதியாக பணம் பண்ண துணியும் பேர்வழிகள் இவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை அறியவேண்டும் .
 சைபர் க்ரைம் :
சைபர் க்ரைம் என்று ஒரு அமைப்பு உள்ளது அது தன கடமையை செய்யவேண்டும் , இன்று பதிவு செய்து அனுப்பும் முறை நாளை 3G  spectrom waves முறைகள் நடைமுறைக்கு வந்தால் நேரடியாக இணைய தளங்களுக்கு அனுப்பிவிடும் வசதிகள் என உள்ள எதிர்காலத்தை நினைத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு களைய உரிய சட்டங்களை இயற்றவேண்டும். 

விபத்துகள் தானியங்கி தகவல் :விழுப்புரம் மாணவர்கள் கண்டுபிடிப்பு

Wednesday, December 9, 2009

           இந்தியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 114 கொடிகளை தொட்டுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் மக்கள்தொகைக்கு ஏற்ப மட்டுமல்ல இரண்டு சக்கர நான்கு சக்கர வாகனங்களின் வாங்கும் சக்தி கூடுதல் என்பதைவிட வாகன விற்பனை நிறுவனங்கள் பல்வேறு வட்டிவீதங்களை அறிமுகப்படுத்தி ஏராளமான நிதி உதவி நிறுவனங்களின் உதவியோடு இந்தியா சாலைகளை டாடா நிறுவனத்தின் ஒரு லட்ச றுபாயின் நானோ கார் முதல் இளசுகள் விரும்புவதும் , ஏற்படும் விபத்திற்கு கூடுதல் காரணமான சில இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஏழு கோடி வாகனங்களினால் ஆண்டிற்கு 4.5 லட்சம் விபத்துக்கள் நடக்கின்றன.
           இந்த விபத்துக்கள் வாகனங்களை இயக்கும் முறையற்ற தன்மைகளான மிக வேகம், குடித்துவிட்டு வாகனம் ஒட்டுதல் , மோசமான சாலைகள் , வாகனம் ஓட்டும்போது செல் போனில் பேசிக்கொண்டே ஒட்டுதல் என வாகனத்தை இயக்கும்போது சாலை விதிகளை பின்பற்றாமல் ஒட்டுவதால் இந்தியாவில் மட்டுமல்ல உலகில் ஆண்டிற்கு 16 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இறப்பதாக தகவல்கள் கூறுகிறது.
             விபத்து நடப்பது மோசமான சாலைகளிலும் மட்டுமல்ல சர்வதேச தரம்வாய்ந்த தங்க நாற்கர சாலைகளிலும் பேருந்துகள், கார்கள் என விபத்துகள் எதிர்பாராத விபத்துக்கள் வாகனங்களின் பழமைவாய்ந்த தன்மை, முறையான பராமரிப்பின்மை , ஓய்வின்றி வாகனங்களை ஒட்டுதல் என ஏராளமான காரன்களை சொல்லலாம். விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்கவும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கவும் நெடுஞ்சாலை ரோந்து வாகனகளையும், நெடுஞ்சாலை அவசர சிகிச்சை மையங்களையும் அரசு அமைத்துள்ளது.  இதில் பல நேரங்களில் இவர்களால் நேரத்திற்கு வர முடிவதில்லை .  இப்படிப்பட்ட நேரங்களில் விபத்துக்குள்ளான வாகனங்களில் யாருக்கும் சுயநினைவு இன்றி போனாலோ , வெளியில் வர முடியோது போனாலோ நிலமை சிக்கல்.
             இப்படி பட்ட சிக்கலான விபத்து நேரங்களில் அருகில் உள்ள மருத்துவமனைக்கும் ,  உறவினர்களுக்கும் தகவல் தர ஒரு தகவல் சிஸ்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன் விழுப்புரம் காமராசர் அரசு நகராட்சி மேல்நிலை பள்ளி , விழுப்புரத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பார்வைக்காக வைத்திருந்தனர், விழுப்புரம் புனித இருதைய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களான எஸ்.லூசோ,ஸ்ரீ.தேவி , பாக்கியலட்சுமி , ஆனந்த் உள்ளிட்டவர்கள்.
  Accident detector system:
               ரூ.10,௦௦௦ 000  செலவிலான தங்களது படிப்பை விளக்கும் மாணவர்கள்  இந்த சிஸ்டத்தை காரின் ஏதேனும் ஒரு இடத்தில் பொருத்திவிட்டு காரின் ஓரங்களில் சிக்னல் ஒயர் முனைகளை பொருத்திவிட்டால் விபத்து நடந்ததும் குறிப்பிட்ட இடைவெளிக்குள் நாம் பதிவு செய்து வைத்துள்ள  நமது உறவினர்கள் எண்ணிற்கும், அருகில் உள்ள மருத்துவமணி அவசர எண்ணிற்கும் தகவல்களை கொடுத்துக்கொண்டே இருக்கும் என்பது இதன் சிறப்பு.
             இதற்கு எங்களை பதிவு செய்வதற்கும், தகவல் தொடர்பான நிகழ்வுகளுக்கும் புரோகிராம் செய்ய வசதியாக 8052 என்ற மைக்ரோ பிராசசர்(8052 micro processor)  ஒன்றும், குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை நாம் பதிவு செய்துள்ள எண்ணிற்கு தகவல்களை அனுப்ப காலைடைவேளியை நிர்ணயிக்க ஓர் டைமர் ( timer ckt) பயன்படுத்தவேண்டும், தகவல்களை அனுப்புவதற்கு ஒரு மோடம் (modam),  timer circuit  உள்ளிட்ட பொருட்களை பொருத்தி இயங்கவைக்க ஒரு கிட்(kid) இவற்றையெல்லாம் ஒரு அமைப்பாக காரின் ஏதாவது ஒரு இடத்தில் பொருத்தி விபத்து நடந்தவுடன் வாகனங்களிலிருந்தும், விபத்துகளிளிருந்தும் உடனடியாக மீட்க இந்த சிஸ்டம் உதவும்.
              இதுபோன்ற ஒரு கண்டுபிடிப்பை மென்பொருள் நிறுவனகள் தங்கள் நிறுவங்களில் பணிபுரியும் பெண்கள் பாலியல் உள்ளிட்ட தாக்குதல்களில் இருந்த காக்க , நிறுவனத்தின் மீட்புக்குழு நடவடிக்கை எடுக்க வசதியாக கண்டுபிடிக்கப்பட்டது , அதிலிருந்து விபத்திற்காக ஒரு வித்தியாச கண்டுபிடிப்பை மாணவர்கள் படைத்திருக்கிறார்கள் இந்த படைப்பை மோட்டார் தொழிற்சாலைகளில் அங்கீகரித்தால் இந்தியா சாலைகளில் மட்டுமல்ல உலக சாலைகளிலும் உயிரிழப்பை தடுக்க முடியும்.

தமிழனை கை விட்டது மத்திய அரசு . தமிழனுக்கு தேவை தன்னாட்சி ?

Friday, December 4, 2009

            1987 இல் செப்டம்பர் மாதம் மத்திய அரசால் செயல் படுத்தப்பட்ட தேசிய நீர் செயல் திட்டம் நீர் பற்றா குறைவானபகுதிக்கு ,  நீர் மிகுதியான  பகுதியிலிருந்து தேவையான நீரை கொண்டு செல்வதுதான் முக்கிய நோக்கம்.
            நதிகள் இணைப்பை இமாலய நதிகள் இணைப்பு , தீபகற்ப நதிகள்  இணைப்பு என இருவகைகளாக பிரித்து செயல்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமே .
            இதில் தீபகற்ப நதிகளான காவிரி , பாலாறு, மகாநதி,பெண்ணார் , வைகை, அச்சன்கோவில் , கிருஷ்ணா உள்ளிட்ட நதிகளை ஒன்றாக இணைத்து தேவையான இடங்களில் அணைகளை கட்டி நேரை தேக்கி விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தவும் , இதன்மூலம் தேவையான மின்சாரத்தை தயாரித்துக்கொள்ளவும் முடியும் , அதுபோல அதிக வெள்ளபெருக்கு உள்ள இடங்களில் உள்ள நீரை வறட்சி மிகுந்த இடங்களுக்கு கொண்டுசெல்வதன் மூலம் வறட்சியினால் ஏற்படும் உயிரிஷப்புகள், பொருளாதார பட்ற்றக்குரைகள் உள்ளிட்ட இதர பிரச்சனைகளை தீர்க்கவும், வெள்ளப்பெருக்கு உள்ள இடங்களில் ஏற்படும் வெல்ல பேரழிவை தடுக்கவும் , ஆகமொத்தம் பேரிடர்களை சமாளிக்கும் அல்லது வருமுன்காக்கும் ,  வளங்களை பாதுகாக்கவும் பெருக்கவும் போடப்பட்ட மிகப்பெரிய உன்னத திட்டம் இதுதான் இதனை தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் நோக்கிதான் இருந்தார்கள் கடந்த இருபத்தியொரு ஆண்டுகளாக காக்கவைத்து ஏமாற்றிவிட்டது காங்கிரஸ் ,
          சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் பொது செயலாளர் ராகு (ல் காந்தி ) காலம்(இவர் அதிகாரமையமாக உள்ள காலம் தமிழகத்திற்கு) நதிகள் இணைப்பு சுற்றுச்சூழலை பாதிக்கும் , நீண்ட செலவினை ஏற்படுத்தும் என்று சொல்லி இன்று நீர்வளத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் திட்டவட்டமாக அரசின் கொள்கைப்படி இத்திட்டம் கைவிடப்படுகிறது என அறிவித்திருப்பது, நீண்ட நாள் எப்படி சொல்வது என்ற தயக்கத்தை  ராகுல், சூழல் துறை அமைச்சர் ரமேஷ் உள்ளிட்டவர்களால் முன்மொஷியப்பட்டு பின் சம்பந்தப்பட்ட அமைச்சரால் அதிகாரப்போர்வமாக வழிமொழியப்பட்டிருக்கிறது .
            தமிழகத்தை பலவேறு தருணங்களில் ஏமாற்றிய அரசு யாதொரு எதிர்ப்பும் இல்லாத நிலையில் இந்த துரோகமும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது , இதற்கு சப்பை கட்டு கட்டும் விதமாக தீபகற்ப நதிகள் இணைப்பு நடைமுறைப்படுத்தபடும் என சொல்லி இருப்பது விதையிலும் விந்தை. ஏனெனில் எதற்கெல்லாம் லட்சக்கணக்கான கோடி செலவிடும் அரசு ஒரு மானில் குடிநீர் , பாசன வசதியை சரிசெய்ய செலவிட தயங்குவதாகக் கூறி செலவை காரணம் காட்டி திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது.
              இதை தான் பாட்டாளி மக்க கட்சி நிறுவனர் மறித்துவர் ச.ராமதாஸ் பலமுறை நதிகள் இணைப்பிற்கு முன் நதிகளை தேச உடைமை என்று அறிவிக்க சொல்லி போராடி வந்தார் அது கிடப்பில் போட்டு தமிழ் மக்களை வஞ்சித்தது கர்நாடகா , கேரளா, ஆந்திரா மட்டுமல் அவர்களின் சட்ட மீறலுக்கு துனிச்ச்லூட்டியது மத்திய அரசு தான் என தெள்ள தெளிவாகிவிட்டது .
              இனி நதிகள் இணைப்பு என்ற படம் முடிவுக்கு வந்ததால் முதல்வர் நதிநீர் ஆணையம் என்ற ஒன்றை அமைத்து வாக்கு வங்கியை பலப்படுத்திவர முயல்கிறார் ஏனெனில் ஆணையம் மட்டுமே மக்களை ஏமாற்றும் எளிய வழி என்பதனை தமிழக அரசும் உணர்ந்துள்ளது தமிழக மக்களுக்கு என்ன வழி ? தீர்வு என்ன ? போருத்திர்ப்போம் என்பதா? பொங்கி எழுவோம் என்பதா? ......என மில்லியன் டாலர் கேள்விகள் யாருக்கும் எழலாம் மொத்தத்தில் தமிழன் அனாதையகிவருவது வெளிச்சமாகிறது வெட்கக்கேடு

தமிழகத்தில் ஒரு போபால் கடலூர்? தேவை எச்சரிக்கை

Thursday, December 3, 2009


           மத்தியபிரதேசத்தின் தலைநகரான போபால் நகரில் உலகின் சுற்றுச்சூழல் பாதிப்பின் மிகப்பெரிய மைல்கல்லாக விளங்கியது கடந்த 1984 டிசம்பர் 3  நாள் நிகழ்ந்தஅமெரிக்க நாட்டின் யூனியன் கார்பைட் நிறுவனத்தின்  மிகப்பெரிய கோரவிபத்தின் மூலம் சம்பவ நிகழ்வான விழவாயு கழிந்ததால் சுமார் 20000  பேர் அந்த நேரத்திலேயே இறந்துபோனார்கள் இந்து லட்சத்திற்குமேலானவர்கள் தங்களது கண்,கை,கால்களை இழந்து ஊனமானார்கள்.
         இந்த நிகழ்வில் உயிரிழந்த பொதுமக்களின் குடும்பத்திற்கும் , ஊனமான குடும்பத்திற்கும் இது வரை யூனியன் கார்பைட் நிறுவனம் எந்த விதமான நிவாரணமும் முறைப்படி வழங்கவில்லை என்பதுதான் வேதனை .  இந்த விழவாயு கசிவால் அந்த பகுதி உயிர்ச்சூழல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது , இன்றும் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஊனமாகவே பிறக்கிறதாக கூறப்படுகிறது. நமது மத்திய அரசு அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நிவாரநதையோ , மருத்துவ சிகிச்சையோ முழுவதும் வழங்காமல் அவர்களை மனதாலும் , உடலாலும் ஊனமாகவும் பிறக்கவும் வாழவும் வைத்திருக்கிறது என்பது தேசிய அளவில் அல்ல சர்வதேச அளவிலான அவமானம்.
           அமரிக்காவில் ஒருநிறுவனம் தொடங்க முறையான அனுமதி மட்டும் வாங்கிவிட்டால் பொது இழப்புகளை , பாதிப்புகளை காரணம் காட்டி நிறுவனத்தின்மீது  நடவடிக்கை எடுக்க , இழுத்துமூட கம்பனிகள் சட்டம் இல்லை என்று சொல்வது  கேட்கக்கூடியதாக இருக்கலாம் , ஆனால் இந்தியாவில் ஒருநிறுவனம் தொடங்க  அதன் சாதகம், பாதகம் காரணங்களை ஆய்ந்து அனுமதி தருவது வழக்கம் . மேலும் தொடங்கிவிட்ட பிறகு அது பொதுமக்களின் நலனுக்கு  பாதிப்பு என்று புகார் தெரிவித்தாலோ , பாதிப்புகள் ஏற்பட்டாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் , அந்த நிறுவனத்தை மூடவும் சட்டங்கள் இருக்கும்போது இதுவரை அந்த நிறுவன நிர்வாகி வாரன்ஆண்டர்சன் இதுவரை சி.பி.ஐ. அதிகாரியால் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறாரே தவிர இருபத்தைந்து ஆண்டுகளாக ஆகியும் இதுவரை அவரை கைதுசெயதபாடும் இல்லை அந்த பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நிவாரணம் கொடுத்தபாடும் இல்லை , ஒரு சர்வதேச கோர சம்பவத்திற்கே அரசு இப்படி மெத்தனம் காட்டினால் எப்படி ?  அமெரிக்காவின் கைக்கூலியாக மாறிவிட்டதா அமரிக்காவின் எந்த செயலுக்கும் இந்தியா மறுக்காமலும் , சீனா , பாகிஸ்தான் போன்ற வரம்பு மீறலுக்கும் கோபப்படாமல் இருக்கும் தேசம் தனது மக்களின் உணர்வுகளையோ , உயிரையோ, உடமைகலையோ ஒருபொருட்டாகவே மதிக்காமல் மெத்தனமாக இருப்பது வெட்கக்கேடான செயல் , பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கவும், இனி பிறக்கும் குழந்தைகள் ஊனமின்றி பிறக்க சூழல் சாதகமாக நிலவ மருத்துவ , இயற்கை சூழல்களில் அக்கறை காட்ட முடிந்தாலே தவிர மற்றபடி மத்திய மாநில அரசுகள் வேடிக்கைப்பார்ப்பது முடிவுக்கு வரவேண்டும் என்பதே நமது விருப்பம்.
            இதுபோல் தமிழகத்தில் ஒரு போபாலாக கடலூர் இப்பவோ, அப்பவோ என நிலை உள்ளது , கிட்டத்தட்ட இருபதிற்கு மேற்பட்ட (ரெட் லேபல் குத்தப்பட்ட) நச்சு தன்மை உடைய அபாயகரமான நிறுவனங்கள் எனதேரிந்திருந்தும் அனுமதி கொடுக்கப்பட்டு அதனுடைய காலம் முடிவுட்ட்ற சில நிறுவனங்கள் இன்றும் செயல் பட்டுகொண்டிருப்பது பயத்திற்குல்லானதுதான் , இது என்றாவது ஒருநாள் இந்த நிறுவனங்கள் தனது சுய ரூபத்தை காட்டும் அதற்குள் சம்பந்தப்பட்ட அரசுகள் துயர சம்பவங்கள் நிகழும் முன்னமே தடுக்கவேண்டிய செயலில் இறங்க வேண்டிய தருணம் இதுதான் தவறினால் தமிழகத்தில் ஒரு போபால் இன்னொரு டிசம்பர் 3 சம்பவம் தாங்க முடியாது , உஷார் மாநில மத்திய அரசுகள்.

மனித வளம் காக்க மன்னச்சநல்லூர் மாணவிகள்அசத்தல் கண்டுபிடிப்பு

Wednesday, December 2, 2009

           பெண்கள் என்றாலே மென்மையானவர்கள் அவர்கள் தங்கள் அழகிலும், ஆரோக்கியத்திலும் மிகுந்த கவலைப்படுபவர்கள் , அதற்காக எவ்வளவு நேரமானாலும்  எவ்வளவு முக்கிய நிகழ்வானாலும் கவலைப்படமாட்டார்கள் , அப்படித்தான் திருச்சி மாவட்டம்  மன்னச்சநல்லூர் அரசு  பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த டி.டி.கே.லட்ச சந்தியா, பாக்கிய லட்சுமி என்ற இருபெண்கள் விழுப்புரம் காமராசர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அறிவியல் கண்காட்சியில் அறிவியலால் ஏற்பட்டுள்ள சூழல் கேடுகளை நிவர்த்தி செய்து அழகையும் , ஆரோக்கியத்தையும் காக்க ஒரு திட்டத்தை செயல் முறையில் விளக்கினார்கள் , இது அவர்கள் அழகை பாதுக்காக்க அல்ல உலகில் நாளும் அதிகரித்துவரும் கொசுத்தல்லையால் அன்றாடம் வீடுகள் தோறும் தரமட்ட்ற, நச்சுத் தன்மைவாய்ந்த கொசுவத்தி சுருள்களை கொளுத்தி குழந்தைகளுக்கும் , பெண்களுக்கும் ஏற்படும் ஆரோக்கிய கோளாறுகள் , அழகு கோளாறுகளை பற்றி கவலை பட்டிருக்கிறார்கள் .  வயதானவர்களுக்கும் சுவாசக் கோளாறு உள்ளிட்டட உயிர்கொல்லி நோயல்களிளிருந்து விடுபட குழந்தைகளின் ஆரோக்கியம் பாதுகாக்க மூலிகை கொசுவத்தியினை தயாரித்து மனித வளத்தை அழிவிலிருந்து காத்திட நகர ,பெருநகர , கிராம தாய்மார்கள் , குழந்தைகளுக்கு தாயன்புடன் ஆரோக்கிய பாதுகாப்பளித்திருக்கிரார்கள் இவர்கள்.
மூலிகை கொசுவத்தி பற்றி:
              தேவையான மூலிகைகள் :
வெப்ப இலைகள், நொச்சி இலைகள் , புதினா இல்லை, துளசி இல்லை,, வேப்பங்கொட்டை,ஆமானுக்கு விதை,ஆடாதோடை பௌடர் , கண்டங்கத்திரி பௌடர் , செவ்வரளிபட்டை போடி, மரத்தூள் , கரித்தூள் 
செய்யும் முறை :
   இந்த மூலிகைகளை அரைத்து பௌடராக வைத்துக்கொள்ளவேண்டும் , இவற்றை கொசுவத்திபோன்ற அச்சில் இட்டு எடுத்துக்கொள்ளவேண்டும் , அல்லது முருக்கு குழைக்குள் இட்டு கொசுவர்த்தி போன்று பிழிந்துகொள்ளவேண்டும், அல்லது கோன் வடிவத்தில் அச்சிட்டு வைத்துக்கொள்ளலாம் என அந்த மாணவிகள் கூறுகின்றனர், மேலும் அவற்றின் சிறப்புகள் பற்றி கூறும்போது ...
மூலிகை கொசுவர்த்தியின் சிறப்புகள் :
          இயற்கை
          மலிவுவிலை
         சுவாசக்கோளாறு இல்லை , குழந்தைகளுக்கு பாதிப்பு இல்லை, மாசு இல்லை 
இந்த மூலிகைகள் எல்லா கிராமங்கள் , நகரங்களிலும் கிடைக்கும் 
ஆண்களோடு போட்டி போட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏராளமான பெண்கள் செய்தாலும் மனித வள பாதுகாப்பு பற்றி கவலை பட்ட சகோதரிகள் படைப்புகள் புகழ்பெறவேண்டும் மேலும் அவர்களை அவர்களுக்கு பிடித்த இயற்கை பாதுகாப்பு வழியிலேயே சாதிக்க சம்பந்த பட்ட பெற்றோர்கள், மற்றும் கல்விநிலைய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே நமது விருப்பமும் . வாழ்த்துக்கள். 





கழிவு நீரை சுத்திகரித்து தூய்மை படுத்தும் முறை:புதிய கண்டுபிடிப்பு

          விழுப்புரம் காமராசர் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மாணவர்கள் தங்களது படைப்புகளை (கண்டுபிடிப்புகளை)பார்வைக்காக வைத்திருந்தனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் உலகம் எதிர்நோக்கியுள்ள சுற்றுச்சூழல் தொடர்பான கண்டுபிடிப்பகளையே செய்திருந்தினர் .
         இதில் கம்பெனிகள் , வீடுகளில் வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிக்கும் முறை நாட்டில் பேரும் சவாலாக உள்ளது , இதற்காக சாயப்பட்டறைகளை மூடுவதற்கு நீதிமன்றங்களே உத்தரவிடும் அளவிற்கு நிலைமை மோசம், உதாரணமாக ஒரத்தநாடு அணையில் கழிவுநீரை கலக்கவிடுவதால் சமீபத்தில் பெய்த மழையில் வந்த நீரை தேக்ககூடாது என அணையில் உள்ள நீரை திறந்து விட்டது வேதனை.  இது போல கழிவு நீரை சுத்திகரிக்க நிறுவனங்கள் அதிக பணம் செலவாவதை  காரணம் காட்டிகழிவுநீராக ஆறுகளில் , ஏரிகளில் கலப்பதை தவிர்க்க  குறைந்த செலவில் கழிவு நீரை சுத்திகரித்து நிறுவனங்களில் வளர்க்கப்படும் மரம், செடிகளுக்கு , அல்லது நிறுவனங்களின் மறுசுழற்சி பயன்பாட்டிற்காக இந்த கண்டுபிடிப்பை DRBCC மேல்நிலைப்பள்ளி சென்னை சேர்ந்த மாணவர்கள் ஹரிஷ்குமார்.எஸ்., மனிஷ் சுஜிர்த்த.வி., பாலு.வி. ஒரு அறிய கண்டுபிடிப்பை பார்வைக்கு செயல் முறையில் விளக்கினர்.
கழிவுநீரை சுத்திகரிக்கும் முறை:
           சுண்ணாம்பு,கரி,மணல் கலந்த கொள்கலனில் கழிவுநீரை செலுத்தினால் அதில் உள்ள ஹெவி மெட்டல்ஸ் ஐ சுண்ணாம்பு,கரி,மணல் ஈர்த்துக்கொண்டு அதில் தங்கவைத்துவிடுகிறது , அடுத்து இரண்டாவது நிலையில் சுழலும் மின்மொடோர் மூலம் துர்நாற்றங்களை அகற்றுகின்றனர் ,மொன்றாவது முறையில் இம்ப்ரரைஸ்  மெட்டல்ஸ் (zing,copper,iron,gold,dust) பிரித்தெடுக்கப்படுகிறது இதனை மீண்டும் மறுசுழற்சி செய்து பிறகு நான்கவதாக சோலார் ஹீட்டர் மூலம் தீமை செய்யும் பாக்டீரியாக்களை எரித்து அடுத்ததாக குளுகோஸ் , லைம் ஸ்டோன் உடன் சேர்த்து சவ்வூடு பரவல் முறையில் தூய நீரை தருகிறார்கள் இம்மாணவர்கள் .  இந்த முறை குறைந்த செலவில் கழிவுணீரை அருகில் உள்ள ஆறுகள், குளங்கள் , ஏரிகள், கடலில் கலந்து மனித குலத்தையும், நீர்வாழ் உயிரினங்களையும் அழிக்கும் முறைக்கு விடுதலை தரும் என்றே நம்புவோம் .  இந்த மாணவர்களின் படைப்புகளை நடைமுறைப்படுத்த சம்பந்த பட்ட கல்விநிறுவனம் உரிய நடவடிக்கையை எடுக்க அந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் நடவடிக்கையடுத்து அவர்களை உலகறிய செய்யவேண்டும். வாழ்த்துக்கள்.

கல்வி அரசுடமையாக்கப்படவேண்டும் ; சாராயம் ஒழிக்கப்படவேண்டும்

Sunday, November 29, 2009

     
 தமிழகம் சட்டத்தை பொதுமக்களும், அதிகாரிகளும் மதிக்கின்ற மாநிலங்களில்




முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக திகழ்ந்தது. ஏனெனில் இங்கு ஆண்ட மன்னர்களும் அதனைதொடர்ந்துவந்த ஆட்சியாளர்களும் அதாவது பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா , காவல் துறை அமைச்சர் கக்கன் போன்ற முன்மாதிரியாக ஆட்சியாளர்கள் வாழ்ந்து இருக்கின்றார்கள். பொதுமக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல் பட்டு வந்ததால் அதனை பொதுமக்களும் , அதிகாரிகளும் அதனை பின்பற்றிவந்தனர் அதனால் தான் என்னவோ தமிழக உலகிற்கு அமைதி பூங்காவாகவும் , உலகின் இதர நாட்டின் குடிமக்கள் பின்பற்றும் அளவிற்கு நமது கலாச்சாரம் இருந்திருக்கிறது.



சுயநலமும் , மக்கள்நலனை பாதுகாக்கின்ற துணிச்சலும் இல்லாத ஆட்சில்யாளர்கள் கையிலேயே தொடர்ந்து அதிகாரம் இருப்பதால் அமைதிபூன்காவான தமிழகம் குண்டர்கள் , கள்ளச்சாராய,கூலிப்படைகள் , நுகர்வோரை ஏமாற்றுகின்ற கொல்லைகும்பளிடம் வணிகம் போன்ற வெட்ககேடான நிகழ்வுகள் நடைபெற்றுவந்த நிலையில் அமைதி,நேர்மையான நுகர்வு தன்மை , அடிப்படை உரிமைகள் ,இலவச தரமான கல்வி , இலவச தரமான மருத்துவம் , வழங்கல் துறையில் சுத்தமான , தரமான , அத்தியாவசிய பொருட்கள் அவர்களுக்கு உரியவகையில் கிடைப்பது கேள்விக்குரியாகிப்போனது.



அரசின் மாறும் கடமைகள்:



ஆரம்ப கல்வி முதல் கல்வி வரை இலவசமாக தரப்படும் சிறிய நாடாப் கியுபா அளவிற்கு கூட நமது 6 .5 கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் ஆரம்ப கல்விய கூட இன்னோம் முற்றிலும் இலவசமாக அரசே அனைவருக்கும் கொடுக்க சரியான திட்டத்த வகுத்தும் நடைமுறைப்படுத்த முடியவில்லை ஏனெனில் ஆரம்ப கல்வி (pre KG-Phd.,



) முதல் ஆராய்ச்சி கல்வி வரை அரசியல் வாதிகளின் கைக்குள் சிக்கி தவித்துக்கொண்டு வியாபாரத்தலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது கல்வி கோயில்கள் . மிகப்பிரம்மாதமாக கல்லாகட்டும் கடைகளாகிப்போனது கல்வி நிலையங்கள் . முன்னால் ஜனாதிபதி



ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைக்க மூன்று கிலோமீட்டருக்கு ஒரு உயர்நிலை பள்ளி திறக்கவேண்டியது அவசியம் என்று கூறினார்.



அதை தவறாக புரிந்து கொண்ட அரசு தெருவெங்கும் சில ஆயிரங்களை கறக்கும் மழலையர் பள்ளிகள் , லட்சங்களை கறக்கும் பொறியல், மருத்துவக்கல்லுரிகள் மிகப்பெரிய வர்த்தக நிருவனங்களாகிப்போனது ஏழைஎளிய மக்களுக்கு உயர் கல்வி எட்டாக் கனியாகிப்போகச்செய்தது , சேவை வணிக மையமாகி போகச்செய்தது எது?



அது தவிர்த்து தனியாருக்கு விடவேண்டிய சாராயம் அரசுடமையாக்கப்பட்டு இளைஞர்களை சாராயம் விற்க செய்து குடிகாரர்களாகி அழிந்துபோகச் செய்தது அரசின் தர்மாம?



அரசின் நியாய விலை கடைகளில் அத்தியாவசியப்பொருள் களான அரசி , கோதுமை, மண்னென்னை போன்றவைகள் கிடைக்கசெய்யாமல் தரமற்ற சோப்புகள், ஷாம்புகள், டீ தூள் போன்ற விற்காத தரமட்ட்ற பொருட்களை அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் பணம் சம்பந்த பட்ட நிறுவனத்திடம் பெற்றுக்கொண்டு சிபாரிசு செய்து சப்பளை செய்ய வகை செய்கின்றனர் இது நுகர்வோரை ஏமாற்றும் வேலை இல்லையா?



அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் ,ஆட்டோக்கள் என மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய தினசரி சேவைகள் திடீரென அரசு அறிவிக்காமல் கட்டனங்ககளை ஏற்றுவது பொதுமக்களை வேதனையில் சிக்கவைக்கிறது மேற்படி இடங்களில் பெரும்பாலும் ரௌடிகள் ராஜ்யத்தில் பணிபுரிவதால் பொதுமக்கள் கேள்வி கேட்க தயங்குகின்றனர் . இது குறித்து அரசு அதிகாரிகளும் தங்களுக்கு கிடைக்கவேண்டியது கிடைத்தால் போதும் என நினைக்கின்றனர் நடவடிக்கை எடுக்கும் இடங்களில் உள்ளவர்கள் .



இப்படி பொதுமக்கள் களை எழுந்து வாங்கும் பால் பாக்கெட்டில் இருந்து அரசி, பருப்பு ,காய் கரி, செல்லும் ஆட்டோ, பேருந்து , அறுந்து தேனீர், சாப்பாடு இவை எல்லாமே அன்றாடம் நிர்ணயிக்கப்படுகின்ற தங்கம் மற்றும் வெள்ளி விளையைப்போன்றது அதுவும் ஒருநாள் குறையும் இதன் விலை எல்லாம் ஒரு நாள் ஏறினாள் மறுபடி இறங்காது.



பேருந்து கட்டணங்களை அரசு அறிவிப்பின்றி அரசு போக்குவரத்து கழகம், தனியார் பேருந்துகள் ஏற்றுவது எப்படி சரியாகும் . இப்படி ஒரு மனிதன் எழுந்து அலுவலக மற்றும் பிரவேளைகளுக்காக வெளியில் செல்வது பொருட்களை வாங்குவது என எங்கும் ஒழுங்குபடுத்தாதா நிலை ஊழல்கள் கீழ் நிலை முதல் மேல் மட்டம் வரை ஊழல் பெருத்துவிட்டதால் அயல்நாடுகளில் கூட நமது மரியாதை குறைந்து விட்டதை பிரதமர் சமீபத்தில் குறிப்பிட்டு சி.பி.ஐ. அதிகாரிகளை ஊழல் வாதிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் அதற்கு முன் உங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என குறிப்பிட்டார்.



இந்த தேசம் நல்ல வல்லரசாக மாற நிறைய இளைஞர் சக்திகள் நமது நாட்டில் உள்ளது , அறிவு சார்ந்த திறமைசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களின் திறமைகள் முறையாக பயன் படுத்தி ஊழலை ஒழித்தாலே இந்தியா வல்லரசாக மாறும். ஆக மொத்தம் பொதுமக்களுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை வசதிகள் , அடிப்படை உரிமைகள் விசயத்தில் தலையீடுகள் முறைகேடுகள் களையப்பட்டாலே நாடு வளம் பேரும் நல்ல பேர் பேரும்.

பார்த்தீனியம் நச்சு செடிகளை அரசு அழிக்குமா?

Saturday, November 28, 2009


            விவசாயநிலங்களிலும் , சாலையோரங்கள்,வீட்டின் தோட்டங்கள் என எங்கு பார்த்தாலும் தக்காளிச்செடியைப்போன்ற தோற்றமுடைய , வெள்ளை நிறத்திலான பூக்களை பூக்கும் ஒரு நச்சு களைதான் பார்த்தீனியம் .  இதன் பிறப்பிடம் வட மற்றும் தென் அமெரிக்கா இந்த களை தானியங்களை இறக்குமதியின்போது வந்ததாக கூறப்படுகிறது.
பார்த்தீனியம் தீமைகள்:
பார்த்தீனியம் நச்சு செடிகள் செடி முளைத்த 4 முதல் 6 வாரங்களுக்குள்ளாக பூக்களை பூத்து அதன் மூலம் நச்சு வாயுக்களை காற்றில் பரவ விடுகிறது இதனால் மனிதர்களுக்கு சுவாசக்கொலாருகளையும், தோல் நோய்களையும் ஏற்படுத்துவதோடு , பிற உயிர்களுக்கும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது .
பார்த்தீனியம் பரவும்  முறைகள் :
           நீரின் மூலமாகவும் , கால்நடைகள் இதை தின்பதால் அவைகளின் சாணங்களின் மூலமாகவும் , இந்த செடிகளின் விதைகளை சுற்றி முட்கள் போல இருப்பதால் எளிதில் காற்றில் மூலம் பரவும் .
அழிக்கும் முறைகள் :
              இந்த செடிகளை பிடுங்கி ஒரு பள்ளம் வெட்டி அதில் போட்டு சோடியம் குளோரைட் என்ற சாதாரண உப்பை கரைத்து தெளித்தால் அழிந்துவிடும். அல்லது 24D , (gamaxin ) கிரமாக்சின் என்ற ரசாயனங்களை நீரில் லிட்டருக்கு 4 மி.கி.\மி.லி. கரைத்து தெளித்தால் அழிந்துவிடும்.  இந்த களை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இருப்பதால் நீண்ட காலமாக இருப்பதால் ஒரு முறை அழிப்பதால் எளிதில் அழிந்துவிடாது , மூன்று அலது நான்கு முறை அழித்தால் இவை அழிந்துவிடும் , இவற்றை பிடுங்கி அழித்தபின் கைகளை சொப்புபோட்டு நன்கு கழுவவும் , இவைகளை பிடுங்கி போட்டாலோ அல்லது எரித்தாலோ அழியாது . இவைகளை கிராமங்கள்தோறும் சுத்தமாக அழித்து இந்த கிராமம் பார்த்தீனியம் இல்லாத கிராமம் என அறிவிக்கவேண்டும் , இதை தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்ல பொது மக்களும் செய்யலாம். சுற்றுசூழலுக்கு மட்டுமல்ல மனித வளத்தையும் காத்திட இந்த கலைகள் அழிக்கப்படவேண்டும். இதற்கு அரசு சார்பிலான விவசாய துறைகள் வழிகாட்டல் வேண்டும் அரசு ரெக்கார்டுகளில்  மட்டுமே பார்தினியும் அழிக்கப்படுகிறது நிஜத்தில்  அல்ல .அரசின் விவசாயத்துறை அதன்
கடமையை செய்யவேண்டும்.

திறந்தவெளி கழிப்பறை 15 லட்சம் பேர் சாவு

       இந்தியாவில் சுமார் 66.5 கோடிபேர் கழிவறை வசதி இல்லாமல் ஏரிகள் , குளங்கள், சாலை ஓரங்கள் , தெரு       ஓரங்கள் ,வயல்வெளிகள்,கண்மாய்கள் போன்ற இடங்களை தங்களது அன்றாட காலை கடன்களை (கழிப்பறைகளாக) கழித்திடும் இடங்களாக தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையே உள்ளது.  இதனால் வயிற்றோட்ட நோய்கள் உள்ளிட்ட நோய்களால் 15 லட்சம் குழந்தைகள் இறக்கிறார்கள். இந்தியா அரசு 1999 இல் 11 கோடியே 98 லட்சம் கழிப்பறைகள் 2012 க்குள் கட்டிமுடிக்கப்படவேண்டும் என நிர்ணயித்தது.கடந்த பத்து ஆண்டுகளாக 5.95 கோடி கழிப்பறைகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. மீதமுள்ள 6.03  கோடி கழிப்பறைகளை மீதமுள்ள இரண்டாண்டுகளில் செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க முடியுமா.  ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்டிக்கொள்ள ரூ.500 மானியம்  வழங்க அரசு கூறியது ஆனால் இத உறுதிப்படுத்த முடியாத அரசு இன்னும்  ஐம்பது சதவிதம் கூட நாம் எட்டமுடியவில்லை அடிப்படை வசதிகளை அரசு செய்து தந்தாலே நோயவர வாய்ப்புள்ள காரணிகள் அழிக்கப்படும்.கழிப்பறைகள் கிராமங்கள்தோறும் குழந்தைகள் , பெண்களுக்காக கட்டப்பட்டுள்ளவைகள் செயல் வடிவத்திற்கு வராத நிலையிலேயே உள்ளது, தண்ணீர் வசதிக இல்லை, பாதுகாப்பு அல்லது ஊரை விட்டு நீண்ட தொலைவு போன்ற காரணங்களால் சுகாதார கழிப்பறைகள் பாழடைந்த நிலையிலேயே பெரும்பாலான கிராமங்களில் உள்ளது இவைகள் அரசியல்வாதிகள் டெண்டர்  வேலைகள் முடித்து பர்சண்டேஜ் கொடுத்து பில்  பாஸ் செய்து பணம் பெற்று கொள்ளை லாபம் சம்பாதித்ததொடு முடிந்தது சுகாதார கழிப்பறைகள் கிராமங்களில் ஆரோக்கியமாக இல்லை வெட்கக்கேடான அரசியல் நமது நாட்டில் நிலைமை சுடுகாட்டில், கழிப்பறை, சாலைகள்,மருத்துவம் போன்ற அவசியதேவையான அடிப்படை வசதிகள் பேரும் ஊழலில் சிக்கிதவிப்பதால் நிலை மக்களுக்கு பயனின்றி உள்ளது. சட்டம் மட்டுமல்ல மனசாட்சிப்படியும் பணிகள் நடக்கவகைசெய்யுமா அரசு.

மேதகு.வேலுபிள்ளை பிரபாகரன் தலைமையில் போர்.

Friday, November 27, 2009

              தமிழீழ விடுதலை போராட்டத்தை கடந்த முப்பது ஆண்டுகளாக உலகில் எந்த விடுதலைபோராட்ட இயக்கமும் மேற்கொள்ளாத யுக்திகளை மேற்கொண்டு தீவிரப்படுத்திவந்த வேளையில் உடன் இருந்த கருணா போன்ற பதவி சுகத்திற்காக காட்டிகொடுத்த  எட்டப்பன்களாலும் நேசநாடாக இருக்கவேண்டிய  இந்தியா தேசத்தின் பூகோள வரைபடம் ,ஆயுதங்கள் , ராடார் , ஆயுதப்பயிற்சிகள், நிதிஉதவிகள் என விடுதலைபுலிகளின் சக்தியை வீழ்த்துமளவிற்கு அவர்களை ஆய்ந்து இலங்கை அரசிற்கு உதவி செய்ததுதான் விடுதலைப்போர் சரிவை சந்திக்க முக்கிய காரணமாக இருந்தது , பிறகு இலங்கை நாட்டின் வளங்களையும், உதவிகளையும் பெற பாகிஸ்தான்,சீனா போன்ற நாடுகளின் உதவிகள் கூடுதல் பலமாக இருந்தது. இந்தியா நாட்டின் தேர்தல் முடிவுகள் சதிகாரர்களுக்கு கை கொடுக்கும் வேளையில் விடுதலைபோராட்டத்தை இலங்கை அரசு முடிவுக்கு கொண்டுவந்தது .  இதில் பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
வேலுபிள்ளை பிரபாகரன் இறக்கவில்லை:
          வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்ததாக இலங்கைஅறிவித்ததை இந்தியா நம்பினாலும் அதை சட்டரீதியாக ஏற்க மறுத்துவிட்டது. ஏனெனில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை  அரசால் வழங்கமுடியாமல்  போனதுதான் . இந்த இறப்பு சான்றிதழ் இல்லாததால் ராஜீவ் கொலைவழக்கு இந்தியா அரசு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது , ஒவ்வொரு புலிகளின் தலைவர்கள் இறப்பிற்கும் இரங்கல் கவிதை எழுதும் தமிழக முதல்வர் இந்த முறை அதை செய்யாதது , பிரபாகரனின் டி.ஏன்.ஏ. ரேப்போர்ட் இலங்கை அரசால் வெளியிடப்படாதது , ஆயிரக்கணக்கான போராளிகள் , பொதுமக்கள் உயிரிழந்ததற்கும் , தமிழகம் உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் செய்த உயிர்தியாகத்திற்கும் அஞ்சலி உலகம் முழுவதும்  உள்ள தமிழர்களால் செலுத்தப்பட்டபோதும் மாவீரன் விடுதலை புலிகளின் இயக்க தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தாதது போன்ற நடவடிக்கைகள் அவர் உயிருடன் உள்ளதை உறதி செய்திருக்கின்றன.  இன்றைய சூழலில் அவர் உரை ஆற்றுவதை தவிர்த்தது அவர்களின் அடுத்த சர்வதேச கட்டமைப்பை பலப்படுத்த இந்த நிகழ்வை தவிர்த்திருக்கலாம் , புலிகளின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ள பிரபாகரனின் வழிகாட்டலில் தனி தமிழீழத்திற்கான போராட்டம் தொடரும் என்பது அவர் உயிருடன் இருப்பதை தான் காட்டுகிறது.
உண்மைதான் தனி ஈழம் தமிழ் ஈழம் மலரும் வரை ஒவ்வொரு தமிழனின் ஒத்துழைப்பும் தியாகமும் அவசியமானதுதான் உறுதி ஏற்போம் பிரபாகரனின் தலைமையில்  தமிழனின் விடுதலை மலரும் வரை ஓயமாட்டோம் என்று.

ஆங்கிலத்தை தூக்கிபிடிக்கும் தமிழினத்தலைவர் கருணாநிதி

             தமிழகத்தின் கல்வித்தரத்தை உயர்த்துவதர்க்காகவும், கல்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் நீண்ட நாட்களாக கல்வியாளர்கள் , அரசியல் தலைவர்கள் (மருத்துவர் ராமதாஸ் ) போன்றவர்கள் ஆரம்பகல்வியை தரமாக தர அவர்களின் புத்தக சுமையை குறைத்து , சமச்சீரான கல்வியை நடைமுரைப்படுத்தவேண்டி போராடி வந்தனர் .  கடந்த 1996  ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஏ.பி.ல். (செயல் வழி கற்றல் முறை ) கொண்டுவரப்பட்டு கடந்த இரண்டாண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது .  இந்த நிலையில் மருத்துவர் ராமதாஸ் தீவிரமான போராட்டம், கருத்தரங்குகள் , தீவிர பிரச்சாரம் செய்து அரசுக்கு கொடுத்த நெருக்கடிகாரணமாக அரசு பேராசிரியர் முத்துக்குமரன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து சமச்சீர் கல்விகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய சொன்னது , அவரும் அந்த அறிக்கையை தாக்கல் செய்தார் ஆனால் இதுநாள் வரையில் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சமச்சீர் கல்வியை அடுத்த ஆண்டுமுதல் நடைமுறைப்படுத்த நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
சமச்சீர் கல்வியா?சமரசக்கல்வியா?...
           தமிழகஅரசின் சமச்சீர் கல்வித்திட்டம் அமல் முறை ஒரு சமரசத்திட்டம் என ராமதாஸ் தெரிவித்திருந்தார் இதற்கு முதல்வர் சமச்சீர் கல்வியை கேட்டதே அவர்கள்தான் இப்போது இதையும் குறை சொல்லுகிறார்களே என வருத்தப்பட்டார் .  சமச்சீர் கல்வி அண்மைய பள்ளிமுறை , பொதுப்பள்ளி முறையில் அனைத்து அதாவது மாநில பாடத்திட்டம் , மத்திய பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம்,ஆண்களோ இந்தியன் பாடத்திட்டம் என நான்கு படத்திட்டத்திற்குமான பாடங்கள் ஒன்றாக இருக்கவேண்டும் , அண்மை பள்ளிமுறையில் வட்டாரத்திற்குள் வரும் சாதாரண தொழில்லாளி பிள்ளை, மாவட்ட ஆட்சியர் பிள்ளை, அமைச்சர் பிள்ளை என அனைவரும் அன்மைபல்லியில் கல்வி பயில வகை செய்தால் மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் .  முன்னால் ஜனாதிபதி. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வலியுறுத்தியபடி மூன்று கிலோமேட்டேருக்கு ஒரு உயர் நிலை பள்ளி அவசியம் , முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம்  பின்பற்ற  போதிய ஆசிரியர்கள் அரசு நியமிக்கவில்லை இப்படிப்பட்ட சூழலில் அரசு அமல் படுத்தப்போகும் சமச்சீர்கல்வியால் நமக்கு பதிப்பு எனக்கருதிய தனியார் பள்ளி நிர்வாக உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள் அதற்கு கல்வித்துறை அமைச்சர் தனியார் பாதிக்கப்படதவாறு நடைமுறைப்படுத்தப்படும் என்றார். சமச்சீர் கல்வி குறித்தார் கமிட்டி பரிந்துரை வெளியிடப்படாமல் அதற்குரிய சூழலை வகுக்காமல் பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது யாருக்காக நலன்பயக்க என்பதுதான் கல்வியாளர்களின் ஐயம்.அதனால்தான் என்னவோ மருத்துவர் ராமதாஸ் சமச்சீர் கல்வியா சமரசக்கல்வியா என்று வினா எழுப்பியுள்ளார்
                சமச்சீர் கல்வி குறித்த கமிட்டியின் தலைவரும் பேராசிரியருமான முத்துக்குமரன் ஒரு கருத்தரங்கில் பேசும்போது தமிழ் பாடத்திற்கு குறைவான பக்கங்களும், ஆங்கிலப்பாடத்திற்கு அதிகப்பக்கங்களையும் ஒதுக்கியுள்ளனர் என தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வேதனையை தெரிவித்துள்ளார்.
                தமிழ் இனத்தின் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் தமிழை விட ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் தருவது தமிழுக்குமட்டுமல்ல தமிழனுக்கும் செய்யும் துரோகம் இது மாற்றப்படவேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் வாழவேண்டும், தமிழனும்
வாழவேண்டும் , அதற்கு தமிழின் நலன் விரும்பி ஆளவேண்டும் .








விடுதலை புலிகளின் மாவீரர் தின உரை

எமது 2009 -மாவீரர் நாள் உரையில் தலைவர் பிரபாகரன் அவர்களது வழிகாட்டுதலில்செயல் படுவோம் என்றும்புலம் பெயர்ந்து வாழும் எமது சொந்தகள் ஒன்று பட்டுபோராட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.. எமக்காக குரல் கொடுத்தஎமது தமிழ் சொந்தங்களுக்கு,தமிழ் நாடு சொந்தங்கள் ,புலம் பெயர்ந்த தமிழர்கள்அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர் ..



மேலும் உரையின் முழு வடிவம் ...


 விடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களை கௌரவிக்கும் தேசிய நினைவெழுச்சி நாள் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களினால் இன்று அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தின அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கை பின்வருமாறு :

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2009

எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழ் மக்களே!

இன்று மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களை ஒளிவிளக்கேற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள். ‘நான்’, ‘எனது’ என்று பாராமல் தமிழினத்தின் எழுச்சிக்காகவும், தமிழ் மண்ணின் விடிவிற்காகவும் தன்னலமற்று அறப்போர் புரிந்து வீரவரலாறாகிய உத்தமர்களை வாழ்த்தி வணங்கும் திருநாள். தமிழீழத் தாய்நாட்டைக் கட்டியமைக்கும் நோக்கோடு தாயக விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கியவர்களை நினைவுகொள்ளும் எழுச்சிநாள். ஈழத்தமிழினத்தை அடிமைப்படுத்தும் அன்னிய சக்திகளின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்துத் தனிப்பெரும் சக்தியாகத் திகழும் வீரமறவர்களை மனதாரப் பூசிக்கும் புனிதநாள்.
அர்ப்பணிப்பின் உச்சத்தைத் தொட்டு தாயகப் பற்றுறுதிக்கு உதாரணமாக விளங்கிய மாவீரர்களை இன்று நினைவு கூருகின்றோம். கடல்போல திரண்டுவந்த எதிரிகளை மனவுறுதியோடு எதிர்கொண்டு மோதிய எமது மாவீரர்கள் தாயக மண்ணின் மேன்மைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தார்கள். எத்தனையோ வல்லாதிக்கச் சக்திகள் எல்லாம் எதிரியோடு கைகோர்த்து வந்தபோதும் தாயக விடுதலைக் கொள்கைக்காகவே இறுதிவரை போராடி மடிந்தார்கள். தமது உயிருக்கும் மேலாக தாம் பிறந்த மண்ணையும் தம்மின மக்களையும் நேசித்த இம்மாவீரர்கள் தியாகத்தின் சிகரமாய் தனித்துவம் பெறுகிறார்கள்.
வரலாற்று ரீதியாக எம்மினத்துக்கென இருந்த தனித்துவமான அரச கட்டமைப்புக்கள் படிப்படியாக அன்னியப் படைகளால் வெற்றிகொள்ளப்பட்டன. பிரித்தானியர் இலங்கைத்தீவிலிருந்து வெளியேறியபோது இலங்கைத்தீவை ஒரே நாடாக்கி சிங்களவரிடம் கையளித்துவிட்டுச் சென்றார்கள். அன்று தொடக்கம் சிங்களப் பேரினவாதம் தமிழர்களது உரிமைகளைப் பறிப்பதிலேயே கவனம் செலுத்திவந்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள். தனிச்சிங்களச் சட்டமென்றும் கல்வித் தரப்படுத்தலென்றும் தொடர்ந்த அடக்குமுறைகள் தமிழர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடும் நிலையைத் தோற்றுவித்தன. வன்முறையற்ற வழியில் போராடிய எமது மக்கள் மேல் திணிக்கப்பட்ட வன்முறை வழியிலான அடக்குமுறைகளும், தமிழ் அரசியல் தலைவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பின்னர் சிறிலங்கா ஆட்சியாளர்களால் கிழித்தெறியப்பட்ட சம்பவங்களும் தமது உரிமைகளைப் பெற ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்ற நிலைக்கு தமிழ்மக்களை இட்டுச் சென்றது.











ஈழத்தமிழினத்தின் மீதான சிங்களப் பேரினவாத அடக்குமுறை காலத்துக்குக்
காலம் அதிகரித்து இன்றைய நிலையில் அதியுச்சநிலையை அடைந்து தனது கோரமுகத்தை வெளிக்காட்டி நிற்கின்றது. எமக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை தொடக்கத்திலிருந்தே படிப்படியாக மீறிவந்த அரசதரப்பு, மகிந்த ராஜபக்ஷ அரசதலைவர் ஆனதும் இன்னும் மோசமான முறையில் செயற்படத் தொடங்கியது. ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட தாயகப் பகுதிகளுடன் மீண்டும் புதிய நிலங்களுக்கான ஆக்கிரமிப்புப் போரை சிறிலங்கா அரசபடை தீவிரப்படுத்தியது. தென்தமிழீழத்தில் மாவிலாறில் தொடங்கிய நிலஆக்கிரமிப்பு யுத்தம் மென்மேலும் விரிவடைந்து தமிழர்களைப் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கியது. முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை எதிர்த்து எமது இயக்கம் தற்காப்புச்சமர் மட்டும் நடாத்திக்கொண்டிருக்க, சிங்கள இராணுவம் மிகமோசமான முறையில் தனது படைநடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. சிறிலங்கா இராணுவத் தரப்பின் வலிந்த தாக்குதல்களையும் யுத்தநிறுத்த ஒப்பந்த மீறல்களையும் நிறுத்தவேண்டிய கடமைப்பாடு கொண்ட சர்வதேச சமூகமோ பெயரளவில் சில அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டு மெளனமாயிருந்தது.

இந்த ஆக்கிரமிப்புப் போரினால் எமது மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கத் தொடங்கினார்கள். சம்பூர், கதிரவெளி, வாகரை தொடங்கி தமிழரின் பூர்வீக நிலங்கள் அரசபடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மூலம் எமது மக்கள் நெருக்கமாக அடைக்கப்பட்டு அரசபடைகளின் தாக்குதல்கள் மூலம் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகள், மக்கள் தங்கியிருந்த பாடசாலைகள் மீது குண்டுவீச்சுக்கள் நடாத்தப்பட்டன. எமது தரப்பு தற்காப்புப் போரை மட்டுமே நடத்திக் கொண்டிருந்ததையும், சிறிலங்காவின் ஒருதலைப்பட்சமான யுத்தநடவடிக்கையை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததையும் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட சிறிலங்கா அரசதரப்பு, அநீதியான போரொன்றின் மூலம் நிலங்களைத் தொடர்ச்சியாக ஆக்கிரமித்தது.

தென்தமிழீழ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து வடதமிழீழத்திலும் தனது நில ஆக்கிரமிப்பைத் தொடங்கியது சிறிலங்கா அரசாங்கம். வன்னியின் மேற்குப்பகுதியில் தொடங்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் படிப்படியாக வன்னிமுழுவதும் விரிவாக்கப்பட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயரத் தொடங்கினர். 2002 ஆம் ஆண்டு சர்வதேச அனுசரணையோடு செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து தாம் விலகிக் கொள்வதாக சிறிலங்கா அரசதரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொண்டு தனது ஆக்கிரமிப்புப் போரை மேலும் தீவிரப்படுத்தியது. இந்நிலையிற்கூட யுத்த நிறுத்தத்துக்கும் அமைதிப் பேச்சுக்களைத் தொடர்வதற்கும் எமது விடுதலை இயக்கம் தொடர்ந்தும் முயற்சித்தது. இதற்கான எமது அறிவிப்புக்களையும் முயற்சிகளையும் முற்றாகப் புறந்தள்ளி தனது போர் நடவடிக்கைகளிலேயே குறியாக இருந்தது சிறிலங்கா அரசதரப்பு.

ஏற்கனவே 2004 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆழிப்பேரலை அழிவிலிருந்து படிப்படியாக மீண்டுவந்துகொண்டிருந்த எமது மக்கள் மீது மிகப்பெரும் அடக்குமுறைப் போரொன்று கட்டவிழ்த்து விடப்பட்டது. மக்கள்மேல் விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடை மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதித்தது. வன்னிப்பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதனூடாக தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் சாட்சிகளில்லாமல் நடாத்தும் தனது திட்டத்தை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தியது. இந்நிலைமையிலும் தற்காப்புப் போரைச் செய்தபடி யுத்தத்தை நிறுத்தும்படியும் அமைதிப்பேச்சுக்களை மீளத் தொடங்கும்படியும் எமது இயக்கம் சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருந்தது. எதிர்காலத்தில் நிகழப்போகும் பாரிய மனித அவலங்கள், ஆபத்துகள் குறித்து நாம் சர்வதேச சமூகத்துக்குத் தொடர்ந்தும் தெரிவித்த வண்ணமிருந்தோம்.

வன்னியில் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் மோசமான நிலையை எட்டின. நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படவும் காயமடையும் அளவுக்கும் அரசபடைகளின் தாக்குதல்கள் அதிகரித்தன. உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தடுக்கப்பட்டதன் விளைவாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பட்டினிச்சாவை எதிர்கொண்டார்கள். தம்மிடம் சரணாகதி அடைவது ஒன்றே தமிழ்மக்கள் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழியென சிறிலங்கா அரசு கூறிநின்றது.

காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனைகளும் அடுத்தடுத்துத் தாக்குதலுக்கு உள்ளாகின. மருத்துவமனைகள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தி அறிக்கையிட்ட ஒரே நாடாக சிங்கள தேசம் இடம்பெறுகிறது. இன அழிப்பின் இன்னொரு கொடூரமான அங்கமாக பாதுகாப்பு வலயம் என்று அரசு வானொலி மூலம் பிரகடனம் செய்த பின் அதே வலயத்திற்குள் பாதுகாப்புத் தேடிய அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல்களை நடாத்தியது. பாதுகாப்பு வலயம் கொலைக்களமாக மாற்றப்பட்டது. உயிரிழந்த உறவுகளைப் புதைக்கக்கூட அவகாசம் இல்லாமல் மக்கள் அடுத்த பாதுகாப்பு வலயத்திற்கு விரட்டப்பட்டனர். தொடர்ச்சியாகப் பல பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனப்படுத்திய அரசு கொலைவெறித் தாக்குதல்கள் மூலம் எமது மக்களை இராணுவத்தின் பிடியில் சிக்க வைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்பட்டது.

மருத்துவமனைகள், பாடசாலைகள், மக்கள் கூடுமிடங்கள், மக்கள் வாழ்விடங்கள் என்று தொடர்ச்சியான கொலைவெறித் தாக்குதல்களை நடாத்தி ஆயிரணக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்தது சிங்கள அரசபடை. எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு தோளோடு தோள்நின்று எம்மைக் காக்கவும் வளர்க்கவும் பாடுபட்ட எமது மக்கள் கோரமான முறையில் வேட்டையாடப்பட்டார்கள். பன்னாட்டு உதவிகளோடு நவீன ஆயுதங்களையும் யுத்த நெறிகளுக்கு மாறான கொடூர ஆயுதங்களையும் கொண்டு எமது மக்கள் மேல் சிறிலங்கா அரசு தாக்குதலை நடாத்தியது. கொத்துக் குண்டுகள், இரசாயன ஆயுதங்களான வெள்ளை பொஸ்பரஸ் எரிகுண்டுகள், தேர்மோபாரிக் குண்டுகள் என்பன வான், தரை, கடல் மார்க்கமாக அப்பாவிப் பொதுமக்கள் மீது ஏவப்பட்டன. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்கா அரசால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் என்ற மிகக்குறுகிய நிலப்பகுதிக்குள் மக்கள் நெருக்கமாக அடைபட்டிருந்த நேரத்தில், தாம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று பன்னாட்டுச் சமூகத்துக்கு அளித்த வாக்குறுதியையும் மீறி எமது மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அகோரத் தாக்குதலை நடத்தியது சிறிலங்கா அரசு.

எமது மக்களின் இந்த இழப்புக்களையும், ஆபத்துக்களையும் கருத்தில் கொண்டு நாம் பலதடவைகள் போர்நிறுத்த அறிவித்தல்களை மேற்கொண்டோம். அனைத்துலகச் சமூகத்திடம் பொதுமக்களை பெரும் இழப்புக்களில் இருந்து பாதுகாக்குமாறும், அதற்கான ஒத்துழைப்பினை நாம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தோம். புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்ற மக்கள் தமது நாடுகளின் ஊடாக இந்தக் கோரிக்கைகளை விடுத்திருந்தனர். எமது புலம்பெயர்ந்த உறவுகள் தாயகத்தில் அல்லலுற்றுக்கொண்டிருந்த மக்களுக்காக பல்லாயிரக்கணக்கில் வீதிகளில் திரண்டுநின்று என்றுமில்லாத பேரெழுச்சியோடு கனவயீர்ப்புப் போராட்டங்களையும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் சாத்வீக வழியில் தொடர்ந்து முன்னெடுத்தார்கள். இதன் ஒருபடி மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழரல்லாத வெளிநாட்டவர்களும் பங்குபற்றி வலுச்சேர்த்தார்கள்.

அதேநேரத்தில் எமது தமிழக உறவுகள் எம் மக்களின் மீதானஇனப்படுகொலையைக் கண்டித்துக் கொந்தளித்தார்கள்அவர்களின்தன்னெழுச்சியான போராட்டங்கள் அங்கே பேரெழுச்சியை ஏற்படுத்தின.உணர்வாளர்கள் பலர் அர்ப்பணிப்பின் உச்சநிலைக்குச் சென்று தம்மையே தீயிற்கருக்கினார்கள்முத்துக்குமார் தொடக்கிவைத்த தீ மேலும் பரவி ஜெனிவாவின்முற்றத்தில் முருகதாஸ் வரை மூண்டிருந்ததுஈழத்தமிழரின் அழிவையும்அவலத்தையும் தடுக்க உலகெங்கும் தன்னெழுச்சியாக நிகழ்ந்த தமிழ்மக்களின்போராட்டங்கள் பலனற்றுப் போயின.

உலக நாடுகள் தமிழ்மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் தொடர்பில் அக்கறை எடுக்காது பாராமுகமாக இருந்தன. கண்துடைப்புக்காக எடுக்கப்பட்ட சில நகர்வுகளைக்கூட சிறிலங்கா அரசாங்கம் தூக்கி வீசியது. அதேவேளை வன்னியில் எமது மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் உச்சக்கட்டத்தைத் தொட்டிருந்தது. மக்கள் எங்குமே செல்ல முடியாதவாறு கனரக ஆயுதங்களைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டது சிங்கள அரசு. இதனால் சாவும் அழிவும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக உணவின்றி, மருத்துவ வசதிகள் இன்றி ஒரு குறுகிய இடத்திற்குள் இருந்து எமது மக்கள் வதைபட்டார்கள்.

சிங்கள அரச படைகளின் கையில் சிக்கினால் ஏற்படப்போகும் துன்பத்தை உணர்ந்த மக்கள் ஒரு பாதுகாப்பான மூன்றாம் தரப்பின் கண்காணிப்பில் செல்வதற்கே தயாராக இருந்தார்கள். அதுவரை எம்மக்களை சிங்கள அரசபடைகள் அணுகாதவாறு இறுதிவரை போராடினோம். சிறிலங்கா இராணுவ இயந்திரம் பாரிய ஆளணி வளத்தோடும் படைக்கலச் சக்தியோடும் தாயக மண்ணை ஆக்கிரமித்து முன்னேறியபோதும் தமிழரின் வீரமரபை நிலைநிறுத்திப் போர் செய்தோம். புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் எழுச்சியான ஆதரவோடும் தம்மையே தகனம் செய்யும் எமது சகோதரர்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்போடும் வீறுடன் போர் செய்தோம். ஆனால் எமது சக்திக்கு மீறிய வகையில் வல்லாதிக்கங்களின் கரங்கள் சிங்கள அரசைப் பலப்படுத்தின. அனைத்துலகமும், ஐக்கிய நாடுகள் சபையும் வெறும் வார்த்தைகளால் மட்டுமே செயற்பட்டுக்கொண்டிருந்தன. அத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் எதிரான இன அழிப்பைத் தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் சமரசம் செய்து கொண்டிருந்தன. சிலநாடுகள் தமது அரசியல், இராணுவ அதிகாரிகளை அனுப்பி சிங்கள அரசுக்கும் அதன் இராணுவத்திற்கும் ஆக்கமும், ஊக்கமும் அளித்தன.

இந்நேரத்தில் எமது மக்களை மிகப்பெரும் மனிதப் பேரழிவிலிருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளையே சிங்களத் தரப்பும் நடுவர்களாகச் செயற்பட்டவர்களும் முன்வைத்தார்கள். எமது போராட்டத்தையும் அரசியல் வேட்கையையும் புரிந்துகொள்ளாமல் தமது சொந்த நலன்களின் அடிப்படையில் எல்லோரும் செயற்பட்டார்கள். இது எமக்கு மிகவும் ஆழ்ந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆயினும் எமது நிலைப்பாட்டை அவர்களுக்குத் தொடர்ச்சியாக விளக்கி வந்தோம்.

இறுதிநேரத்தில் எமது மக்களையும் காயமடைந்த போராளிகளையும் பாதுகாக்கும் நோக்கோடு சர்வதேச சமூகத்துடன் தொடர்புகொண்டு எம்மால் எடுக்கப்பட்ட உடனடி முயற்சிகளும் நாசகாரச் சதித்திட்டத்தின் மூலம் நிர்மூலமாக்கப்பட்டன. மிகவும் அநீதியான முறையில் தான்தோன்றித்தனமாக சிங்களத் தரப்பு நடந்துகொண்டது. வல்வளைப்புக்குள் அகப்பட்ட மக்கள் பலரைக் கோரமான முறையில் கொன்றொழித்தார்கள். உலகில் எங்குமே நடந்திராத கொடுமைகளை எல்லாம் எம்மக்கள் மீது சிறிலங்கா அரசபடை நிகழ்த்தியது. இம்மனிதப் பேரழிவில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஓரிரு நாட்களுக்குள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.

பன்னாட்டுச் சமூகமும் சிறிலங்கா அரச தரப்பும் உறுதியளித்ததை ஏற்றுக்கொண்டு தமது உயிரைப் பாதுகாப்பதற்காக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது மக்கள் தடுப்புமுகாம்களில் குடிநீருக்குக் கூட வழியின்றி அடைக்கப்பட்டிருந்தார்கள். ஆறுமாதங்களைக் கடந்தபின்னும் இந்த அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எமது போராட்டத்தோடு தோளோடு தோள்நின்ற மக்கள் பலர் இரகசிய தடுப்புமுகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டதோடு இன்றுவரை அவர்களைப்பற்றிய தகவல் எதுவுமே வெளிவரவில்லை.

இதேவேளை சிறிலங்கா அரசபடையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் யுத்தக் கைதிகளைக் கையாளும் சர்வதேச சட்டவிதிகளுக்கு அமைவாக நடாத்தப்படாமல் துன்பங்களை அனுபவித்த வண்ணமுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரினதும் விபரங்கள் சரிவர வெளிப்படுத்தப்படாமல், உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்படாமல், தொண்டு நிறுவனங்கள் அவர்களை அணுகவிடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் நிலை துன்பகரமானது. அதிலும் பெண்போராளிகளைத் தடுத்து வைத்திருக்கும் முறையும் கையாளும் விதமும் கண்டிக்கத் தக்கவை. குறிப்பாக திருமணமான பெண்போராளிகளை அடைத்து வைத்திருப்பது, அவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் தனித்தனியாகப் பிரித்துத் தடுத்து வைத்திருப்பது என்பன மிகவும் பாரதூரமான மனிதஉரிமை மீறல்கள். இவை தொடர்பில் காத்திரமான பணியை ஆற்றவேண்டிய தொண்டு நிறுவனங்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் மெளனமாக இருப்பது வருத்தத்துக்குரியது. தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் தொடர்பாக இவ்வமைப்புகளும் சர்வதேச சமூகமும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஓர் அப்பட்டமான இன அழிப்புப் போரைபுலிகளின் பிடியில் இருந்த மக்களைமீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்று கூறும் அரச பிரகடனம்வேடிக்கையானதுதமிழர் தரப்பில் உயிரிழப்புக்கள் ஏற்படாமல் நடாத்தப்பட்ட நடவடிக்கை என்ற இலங்கை ஜனாதிபதியின் கூற்று நகைப்பிற்கிடமானது. இந்தப் போர் தமிழ் மக்களுக்கு பெரும் உயிரிழப்பு , சொத்திழப்பு, வாழ்விட இழப்பு, சுய கௌரவ இழப்பு என்பவற்றை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத்தமிழினத்தின் பொருண்மிய இழப்பை அளவிட முடியாது. எமது மக்களின் பொருளாதார வளம் துடைத்தழிக்கப்பட்டிருக்கிறது. எமது நிலங்களுக்குரிய மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் எமது இயற்கை வளங்களும் சொந்த நிலங்களும் சூறையாடப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரம் பரிதாப நிலையை அடைந்துள்ளது.

எமது பாசமிகு தமிழ் மக்களே,

வன்னியில் நிகழ்ந்து முடிந்த மனிதப் பேரழிவைத் தொடர்ந்து எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து கொண்டிருக்கும் எமது மக்களின் பேரவலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாகவும் எமது அரசியல் இராஜதந்திர நகர்வுகளை சர்வதேசத்தில் விரிவாக்கிக் கொண்டிருக்கிறோம். எமது அமைப்பின் அரசியற்கட்டமைப்பை வெளிநாடுகளில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தச் செயற்பாடுகளையும் வழிமுறைகளையும்கூட குழப்புவதற்கும் ஒடுக்குவதற்கும் சிறிலங்கா அரசதரப்பு மிகக்கடுமையான முயற்சியில் ஈடுபடுகின்றது. உலகநாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளூடான நகர்வுகளைச் செய்ய முற்பட்ட எமது செயற்பாட்டாளர்களையும் ஆதரவாளர்களையும் கடத்துவது, கைது செய்வது, கைது செய்து தரும்படி அந்நாட்டு அரசாங்கங்களை வற்புறுத்துவது என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் ஜனநாயக வழியில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தவும் செயற்படுத்தவும் முயற்சிப்பதைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே சிங்களப் பேரினவாதம் இன்றுள்ளது.

இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் நாளிலிருந்து, மாறி மாறி பதவிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் அடையாளத்தை அழித்து தமிழினத்தை இல்லாது ஒழிக்க வேண்டுமென கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். எமது தாயக மக்களின் குரல்வளை நசுக்கப்பட்டு அவர்கள் தமது உணர்வுகளைச் சொல்லமுடியாதவாறு சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்தும் செயற்பட்டுவருகிறது. எமது மக்களுக்கு நீதியான, நியாயமான, கௌரவமான தீர்வைத் தருவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் எப்போதுமே தயாராக இருந்ததில்லை.

1956 இல் தொடங்கிய தமிழர்களுக்கு எதிரான வெளிப்படையான இனப்படுகொலை 2009 இல் உச்சக் கட்டத்தையடைந்தது. சிறிலங்கா அரசும் அதன் படைகளும் செயற்பட்டவிதம், குறிப்பாக இப்பாரிய மனிதப்பேரழிவினை ஏற்படுத்திய பின்னர் சிங்களப் பேரினவாதம் நடந்துகொண்ட முறை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நிரந்தரமான பிளவை ஏற்படுத்தியிருக்கிறது.



பாரிய மனிதப்பேரழிவைச் செய்து, தமிழர்களின் மனவுறுதியை உடைத்து, தாங்கள் நினைத்ததை தமிழர்கள்மேல் திணித்து இலங்கைத்தீவு முழுவதையும் தனது ஆதிக்கத்துக்குள் கொண்டுவர சிங்கள அரசு விரும்புகிறது. அதன் ஒரு கட்டமாக அண்மையில் யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலையும் வவுனியா நகரசபைத் தேர்தலையும் நடாத்தி தமிழ்த்தேசியத்தின் வீழ்ச்சியை உலகுக்குச் சொல்லலாமென எண்ணியது. ஆனால் தமிழ்த்தேசியத்தின் மீதான தமது பற்றுறுதியை தமிழீழ மக்கள் மீண்டுமொரு முறை தேர்தலில் வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

எம்மினத்தின் மேல் அக்கறை கொண்ட சர்வதேச நாடுகளின் கரிசனைகளையும் ஆலோசனைகளையும் கவனத்திற்கொண்டு சனநாயகப் பண்புகளை மதிக்கின்ற நாடுகளில் தாயக விடுதலையை முன்னெடுக்கும் அரசியற்கட்டமைப்புக்களை புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் உருவாக்குவது காலத்தின் கட்டாயம். இவ்வாறு மக்களால் மக்களுக்காக அமைக்கப்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் தெரிவுசெய்யப்படுவதன் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறமுடியும். இக்கட்டமைப்புக்கள் ஊடாக பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவைப்பெற்று எமது உரிமைப்போராட்டத்தை சர்வதேசரீதியில் வலுப்படுத்த முடியும். தமிழீழ இலட்சியத்தை நோக்கிய எமது மக்களின் போராட்டத்துக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புக்களும் அதன் செயற்பாட்டாளர்களும் எமது இலட்சியமான தமிழீழத் தனியரசுக் கோட்பாட்டிலிருந்து விலகிப் போவதை தமிழ்மக்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்.

நீண்டகால அடிப்படையில் எமது தாயக விடுதலைக்கான போரினை பல்வேறு வடிவங்களில் உள்ளக வெளியக சூழல்களை கருத்தில் கொண்டு முன்னெடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. அதேநேரம், தாயகத்தில் நீண்டகாலமாக சிங்கள ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட எமது மக்களின் கட்டுமானங்களைச் சீரமைத்து, இடம்பெயர்ந்த மக்களை மறுவாழ்வுக்கு உட்படுத்தவேண்டிய பொறுப்பும் உலகத் தமிழர்களுக்கு உண்டு. அத்தோடு, மக்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் கண்களை மூடிக்கொண்டிருந்த சர்வதேசத்தின் கண்களைத் திறக்கவைக்கும் முயற்சியிலும், சிங்கள அரசின் இன ஒடுக்கல் நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு ஓயாது எடுத்துக் கூறுவதன் மூலமாக எமது உரிமைப் போராட்டத்திற்கான தார்மீக ஆதரவைப் பெறும் முயற்சியிலும் அனைத்துலகத் தமிழர்கள் தொடர்ந்தும் ஒற்றுமையுன் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

அதேநேரம், தாயகத்திலுள்ள அனைத்து தமிழ் முஸ்லிம் கட்சிகளும் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கடந்தகாலத்தில் செயற்பட்டதைப் போன்று இனிவரும் காலங்களிலிலும் ஒற்றுமையோடும் தன்னலமற்றும் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். எமது இலட்சியப் பாதையில் அனைவரையும் அரவணைத்து, புதிய சூழல்கள், புதிய நட்புக்களைத் தேடி உலகத் தமிழர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது விடுதலையினை வென்றெடுக்க முன்வருமாறு இந்தப் புனித நாளில் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் எமது போராட்டத்துக்கான ஆதரவை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்தியதோடல்லாமல் உலக அரங்கில் எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உரத்து ஒலித்த எமது புலம்பெயர்ந்த உறவுகளை நன்றியோடு நினைவு கொள்கிறோம். புலம்பெயர்ந்த தமிழ் இளையோர்களின் நெறிப்படுத்தப்பட்ட பங்களிப்புக்களும் போராட்டங்களும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அதேவேளை, எமது மக்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டு கொதித்தெழுந்து போராடிய தமிழகத்துச் சகோதரர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பான தமிழீழ மக்களே, புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ உறவுகளே, தமிழ் நாட்டு உடன் பிறப்புக்களே, உலகெலாம் பரந்து வாழும் தமிழ்மக்களே, மாவீரர்களின் இலட்சியக் கனவு நிறைவேறும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். சிங்களத்துடன் இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது. சிங்களம் நீதி வழங்கும் என்று நினைப்பது பேதைமை. சிங்கள தேசத்தை நம்பி ஏமாறுவதற்கு உலகத் தமிழினம் தொடர்ந்தும் தயாராக இல்லை. தமிழினம் தன்னிகரற்ற வலுவாற்றல் மிக்க தனித்துவமான இனம். பண்பாட்டு வாழ்வையும் நீண்ட வரலாற்றையும் கொண்ட இனம். உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழனின் இதயத் துடிப்பு தமிழீழப் போராட்டத்திற்காகவே இயங்கும். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைக்கு அமைவாக எமது இலட்சியத்தை அடையும் வரை போராடுவோம். வரும் சவால்களுக்கு முகம் கொடுப்போம். இடையூறுகளைத் தாண்டிச் செல்வோம், எதிர்ப்புச் சக்திகளை முறியடிப்போம், தாயகத்தின் விடிவிற்காகப் போராடுவோம். விடுதலைப் போரை வலுப்படுத்த உதவும் அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்ள அணிதிரளுமாறு உலகத் தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது. காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகளால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்டு எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில், எந்தத் தடைகள் வந்தபோதும் எமது உரிமைகளுக்காக இறுதிவரை போராடிய மாவீரர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்தும் போராடி தமிழீழத் தனியரசைக் கட்டியமைப்போம் என இந்நாளில் நாமனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger