ஜெயராம் ரமேஷ் கோமாளித்தனம்:கோபென் ஹெகன் மாநாடு

Monday, December 14, 2009

         கடந்த ஏழாம் தேதி டென்மார்க் கோபன் ஹெகன் நகரில் பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாடு தொடங்கியது இந்த மாநாடு வரும் பதினெட்டாம் தேதி வாரை நடைபெறுவதாக உள்ளது.
         இந்த மாநாட்டில் 192 நாடுகளை சேர்ந்த பிரதமர்கள் , குடியரசுத்தலைவர்கள், சுற்றுச்சூழல் அமைச்சர்கள் , தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு உலகம் வெப்பமயமாதலால் கடுமையான சூறாவளி, பேய்மழை , கடுமையான வறட்சி, நிலநடுக்கம், கடல்மட்டம் உயர்வு, சுனாமி எனப்படும் ஆழிப்பேரலைகள் இவைகளின் தாக்கம் மென்மேலும் அதிகரித்துக்கொண்டு வருகின்றன .  கடந்த நூறாண்டுகளாக மனித குளம் உலகை தொழில் மயமாக்கியது , அளவுக்கதிகமான புதைவடிவ பொருட்களான பெட்ரோல்,டீசல்,நிலக்கரி,தார் பயன்பாட்டால் கரியமிலவாயு வெளிஎரியதான் விளைவாக ஓசோன் மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு சூரியனின் புறஊதாக் கதிர்கள் புவியை தாக்கி புவியை வெப்பமாக்கியதால் பருவநிலைகள் மாற்றம்,புவியிலுள்ள உயிர்கள் புதிய வகை நோய்களால் பாதிப்பு, இயற்கையின் பேரிடர்களால் மனிதகுலம் பேரழிவை  உயிர்கள் மூலமும், பொருளாதார மூலமும் சந்தித்தது மறக்கக்கூடியதல்ல அனைத்தும் சூழல் வரலாற்றில் மெயில் கற்களாக மாறிப்போனது.
              இயற்கை மனிதனுக்கு எதிராக மாறிப்போனதை தடுக்க மனிதனால் முடியாததுதான் ஆனால் நிலை மேல்மேலும் தீவிரம் அடையாமல் நிலைமையை ஓரளவுக்கு மனித சக்தியால் சமாளிக்க , நிவாரணம் தேட கூடிய நிலையிலேயே வைத்திருக்கவேண்டியது ஒலகின் மனித சமூகத்தின் கடமை .
கோபென் ஹெகன் மாநாடு:
              கடந்த முறை  நடைபெற்ற  பாலி மாநாட்டில் 192 நாடுகளின் ஒப்புதலோடு கொண்டுவரப்பட்ட கியோட்டோ ஒப்பந்தம் புவியின் வெப்பத்தை குறைக்க உலக நாடுகள் தாங்கள் வெளியிட்டுள்ள கரியமில வாயுவின் அளவை 5.2 ஆக தலைகீழாக குறைக்க வேண்டும் என கொண்டுவரப்பட்டது இதன் காலம்  2008-2012 இடையேயானது இதில் கையொப்பமிட்ட அமெரிக்கா உள்ளிட்ட சில வளர்ச்சியடைந்த நாடுகள் உடன்படிக்கையை மதிக்காமல் வெளியேறின எனவே இந்த ஒப்பந்தம் உயிர்பெற மிகுந்த சிரமம் ஆகிப்போனது.  ஒலக நாடுகள் வெளியிடும் மொத்த கரியமில வாயுவில் அமெரிக்காவின் கரியமில வாயு வெளியிடும் அளவு பாதியாகும் எனவே அமெரிக்கா வெளி ஏறியதும் உடன்படிக்கை கோமா நிலையை அடைந்தது .  2012 முடிவுறும் க்யோட்டோ உடன்படிக்கையை செயல்படுத்த அதற்கான நடவடிக்கையை உலக நாடுகள் எடுக்கவேண்டிய தருணம் இது .
           கடந்த காலங்களில் ஏற்பட்ட  சுனாமி , புயல், ஆழிப்பேரலை,வரட்சி, வெள்ளபெரழிவு , பேய் மழை இவை எல்லாமே இந்தியா போன்ற வளரும் நாடுகளை மட்டுமல்ல சிறிய , வல்லரசுகளையுமே சின்னபின்னம்மாக்கியது மறந்துவிடமுடியாது அதை நினைவில் வைத்து வளர்ந்த நாடுகள் முன்வரவேண்டும்.
              டென்மார்க் கோபன் ஹெகன் நகரில் நடிபெரும் மாநாட்டில் அனைத்து வளரசுகள்,வளர்ந்துவரும் நாடுகள் , தொண்டு நிறுவனங்கள் , பல்கலைகழகங்கள் புவிவெப்பமயமாதளுக்கு காரணங்கள், தீர்வுகள் , மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளுக்கான வரைவு கருத்துருக்களையும் , தாங்கள் நாட்டின் செயல்பாடுகள் குறித்து கொள்கை விளக்க அறிக்கைகளை தாக்கல் செய்யப்படவேண்டும். பல வளர்ந்துவரும் நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளை குற்றம் சாட்டி அவர்களை பொறுப்பேற்க செய்து கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க வகை செய்யவேண்டும் என்றும் , வல்லரசுகள் வளர்ச்சியடையும் நாடுகள் தங்கள் அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க வேண்டும் என பல வரைவு அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர்.
இந்தியாவின் அமைச்சர் கோமாளித்தனம்:
           இந்தியா சுற்று சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இந்தியாவின் சார்பில் சென்ற அரசு பிரதிநிதி, பசுமை தாயக தொண்டு நிறுவனத்தின் சார்பில் முன்னாள் மத்திய  அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவியும் பசுமை தாயகத்தின் தலைவரும் திருமதி.சௌமியா உள்ளிட்ட நபர்கள் கலந்துகொண்டனர் .
            இந்தியா அரசின் சார்பாக பேசிய சுற்றுசூழல் அமைச்சர் யய்ரம் ரமேஷ் புவி வெப்பமயமாதலுக்கும் , இமயமலை உருகுதலுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்து உலக நாடுகள் எதிர்ப்பும், கோபமும் கொண்டுள்ளது இந்தியர்களுக்கு ஒரு அவமானகரமான செயல் பிறகு இந்தியா வின்ஜாநிகளின் மீது பழிபோட்டு தப்ப முயற்சி செய்திருக்கிறார் தான் ஒரு சுற்று சூழல் நிபுணர் அல்ல என சக வாங்கி அவமானப்பட்டுல்லார். துறையினுடைய அமைச்சருக்கு அழகா இது .
               உலகமே புவி வெப்பமயமாதலால் துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது என ஆராய்ச்சியும் , அது தொடர்பான வீடியோ காட்சிகளுமே உலகில் விவாத பொருளாகி நாள் தோறும் கட்டுரைகளாக, கருத்தரங்குகளாக வெளிவந்துகொண்டிருக்க வேற்றுகிரகத்திளிருந்து வந்ததுபோல நாள்தோறும் பாநிபாரைகள் வளருகிறது என்றும், அதுவாக கரைகிறது என்றும் கூறி அவமானப்பட்டு நிற்கிறார்.
             ஓசோன் படலம் (O3)  மூன்று ஆக்சிஜன் மூலக் கூறுகளை கொண்டது,இந்த படலம் தொழிற் சாலைகளால் , வாகனங்களால் வெளியேற்றும் கரியமிலவாயு, குளோரோ ப்ளோரோ கார்பன்,, குளோரின் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களால் சிதைந்து, புவியில் இருந்து உற்பத்தியாகிற  ஆசிஜன்  (இரண்டுமூலக் கூறுகளை கொண்டது  ) பசுமை இல்ல வாயுக்களால் அழிவுற்று இரண்டு மூலக்கொருகளை கொண்ட அக்சிஜன்
அணுக்கள் மீண்டும் மூன்று அணுக்களை கொண்ட ஓசோன் படலமாக மாறி
வருவது இயற்கையாக நடைபெறுவதுவழக்கம் தான் என்றாலும் நாம் அளவுக்கதிகமாக புதை வடிவ எரிபொருகளை பயன்படுத்தி
கரியமிலவாயுவையும், குளிர்சாதன பொருட்களை பயன்படுத்திகுளோரோ புளோரோ கார்பன்களை  ,மற்றும் பசுமை இல்லவயுக்களான மற்ற வாயுக்களையும்
வெளியிடுவத்டை குறைத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் நோக்கம் ,அதை எப்படி செய்வது என அறிக்கை தாக்கல் செய்யும்போது வளர்ந்த நாடுகளின் பங்குபற்றியும் , வளர்ந்துவரும் நாடுகளின் பங்கு பற்றியும் பேசவேண்டுமே தவிர முன்னுக்கு பின் முரனாகபேசி அவமானபடவா நமது தேசசுற்று சூழல் அமைச்சர் சென்றார் வெட்ககேடு.
              இந்தியாவில் கேட்பாரற்ற தமிழன் பிரச்சினையில் கோணங்கித்தனமாக பேசி
முல்லைபெரியார் அணை விவகாரத்தில் கேரளாவிற்கு சாதகமாக நடவடிக்கை செய்ததுபோல செய்ய அந்த மாநாடு என்ன இந்தியா அனைத்துக்கட்சி கூட்டமா அல்லது அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டமா?
            தீவிரவாதம், பொருளாதாரம்,வேலைவாய்ப்பு, சுற்றுசூழல் என எந்த ஒரு துறைக்கும் உருப்படியான தேர்ந்த அமைச்சர் இல்லை என்பது இந்தியா அளவில் இருந்தரகசியம் உலகறிய ஒவ்வொரு வைப்பு ஏற்படுத்திகொள்கிறது அரசு மாற்றப்படவேண்டும் அமைச்சர்கள் திறமையின் அடிப்படையில் இல்லையேல் திறமை உள்ளவர்களுக்கு தரவேண்டும் ஆட்சியை.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger