கழிவு நீரை சுத்திகரித்து தூய்மை படுத்தும் முறை:புதிய கண்டுபிடிப்பு

Wednesday, December 2, 2009

          விழுப்புரம் காமராசர் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மாணவர்கள் தங்களது படைப்புகளை (கண்டுபிடிப்புகளை)பார்வைக்காக வைத்திருந்தனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் உலகம் எதிர்நோக்கியுள்ள சுற்றுச்சூழல் தொடர்பான கண்டுபிடிப்பகளையே செய்திருந்தினர் .
         இதில் கம்பெனிகள் , வீடுகளில் வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிக்கும் முறை நாட்டில் பேரும் சவாலாக உள்ளது , இதற்காக சாயப்பட்டறைகளை மூடுவதற்கு நீதிமன்றங்களே உத்தரவிடும் அளவிற்கு நிலைமை மோசம், உதாரணமாக ஒரத்தநாடு அணையில் கழிவுநீரை கலக்கவிடுவதால் சமீபத்தில் பெய்த மழையில் வந்த நீரை தேக்ககூடாது என அணையில் உள்ள நீரை திறந்து விட்டது வேதனை.  இது போல கழிவு நீரை சுத்திகரிக்க நிறுவனங்கள் அதிக பணம் செலவாவதை  காரணம் காட்டிகழிவுநீராக ஆறுகளில் , ஏரிகளில் கலப்பதை தவிர்க்க  குறைந்த செலவில் கழிவு நீரை சுத்திகரித்து நிறுவனங்களில் வளர்க்கப்படும் மரம், செடிகளுக்கு , அல்லது நிறுவனங்களின் மறுசுழற்சி பயன்பாட்டிற்காக இந்த கண்டுபிடிப்பை DRBCC மேல்நிலைப்பள்ளி சென்னை சேர்ந்த மாணவர்கள் ஹரிஷ்குமார்.எஸ்., மனிஷ் சுஜிர்த்த.வி., பாலு.வி. ஒரு அறிய கண்டுபிடிப்பை பார்வைக்கு செயல் முறையில் விளக்கினர்.
கழிவுநீரை சுத்திகரிக்கும் முறை:
           சுண்ணாம்பு,கரி,மணல் கலந்த கொள்கலனில் கழிவுநீரை செலுத்தினால் அதில் உள்ள ஹெவி மெட்டல்ஸ் ஐ சுண்ணாம்பு,கரி,மணல் ஈர்த்துக்கொண்டு அதில் தங்கவைத்துவிடுகிறது , அடுத்து இரண்டாவது நிலையில் சுழலும் மின்மொடோர் மூலம் துர்நாற்றங்களை அகற்றுகின்றனர் ,மொன்றாவது முறையில் இம்ப்ரரைஸ்  மெட்டல்ஸ் (zing,copper,iron,gold,dust) பிரித்தெடுக்கப்படுகிறது இதனை மீண்டும் மறுசுழற்சி செய்து பிறகு நான்கவதாக சோலார் ஹீட்டர் மூலம் தீமை செய்யும் பாக்டீரியாக்களை எரித்து அடுத்ததாக குளுகோஸ் , லைம் ஸ்டோன் உடன் சேர்த்து சவ்வூடு பரவல் முறையில் தூய நீரை தருகிறார்கள் இம்மாணவர்கள் .  இந்த முறை குறைந்த செலவில் கழிவுணீரை அருகில் உள்ள ஆறுகள், குளங்கள் , ஏரிகள், கடலில் கலந்து மனித குலத்தையும், நீர்வாழ் உயிரினங்களையும் அழிக்கும் முறைக்கு விடுதலை தரும் என்றே நம்புவோம் .  இந்த மாணவர்களின் படைப்புகளை நடைமுறைப்படுத்த சம்பந்த பட்ட கல்விநிறுவனம் உரிய நடவடிக்கையை எடுக்க அந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் நடவடிக்கையடுத்து அவர்களை உலகறிய செய்யவேண்டும். வாழ்த்துக்கள்.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger