தமிழனை கை விட்டது மத்திய அரசு . தமிழனுக்கு தேவை தன்னாட்சி ?

Friday, December 4, 2009

            1987 இல் செப்டம்பர் மாதம் மத்திய அரசால் செயல் படுத்தப்பட்ட தேசிய நீர் செயல் திட்டம் நீர் பற்றா குறைவானபகுதிக்கு ,  நீர் மிகுதியான  பகுதியிலிருந்து தேவையான நீரை கொண்டு செல்வதுதான் முக்கிய நோக்கம்.
            நதிகள் இணைப்பை இமாலய நதிகள் இணைப்பு , தீபகற்ப நதிகள்  இணைப்பு என இருவகைகளாக பிரித்து செயல்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமே .
            இதில் தீபகற்ப நதிகளான காவிரி , பாலாறு, மகாநதி,பெண்ணார் , வைகை, அச்சன்கோவில் , கிருஷ்ணா உள்ளிட்ட நதிகளை ஒன்றாக இணைத்து தேவையான இடங்களில் அணைகளை கட்டி நேரை தேக்கி விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தவும் , இதன்மூலம் தேவையான மின்சாரத்தை தயாரித்துக்கொள்ளவும் முடியும் , அதுபோல அதிக வெள்ளபெருக்கு உள்ள இடங்களில் உள்ள நீரை வறட்சி மிகுந்த இடங்களுக்கு கொண்டுசெல்வதன் மூலம் வறட்சியினால் ஏற்படும் உயிரிஷப்புகள், பொருளாதார பட்ற்றக்குரைகள் உள்ளிட்ட இதர பிரச்சனைகளை தீர்க்கவும், வெள்ளப்பெருக்கு உள்ள இடங்களில் ஏற்படும் வெல்ல பேரழிவை தடுக்கவும் , ஆகமொத்தம் பேரிடர்களை சமாளிக்கும் அல்லது வருமுன்காக்கும் ,  வளங்களை பாதுகாக்கவும் பெருக்கவும் போடப்பட்ட மிகப்பெரிய உன்னத திட்டம் இதுதான் இதனை தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் நோக்கிதான் இருந்தார்கள் கடந்த இருபத்தியொரு ஆண்டுகளாக காக்கவைத்து ஏமாற்றிவிட்டது காங்கிரஸ் ,
          சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் பொது செயலாளர் ராகு (ல் காந்தி ) காலம்(இவர் அதிகாரமையமாக உள்ள காலம் தமிழகத்திற்கு) நதிகள் இணைப்பு சுற்றுச்சூழலை பாதிக்கும் , நீண்ட செலவினை ஏற்படுத்தும் என்று சொல்லி இன்று நீர்வளத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் திட்டவட்டமாக அரசின் கொள்கைப்படி இத்திட்டம் கைவிடப்படுகிறது என அறிவித்திருப்பது, நீண்ட நாள் எப்படி சொல்வது என்ற தயக்கத்தை  ராகுல், சூழல் துறை அமைச்சர் ரமேஷ் உள்ளிட்டவர்களால் முன்மொஷியப்பட்டு பின் சம்பந்தப்பட்ட அமைச்சரால் அதிகாரப்போர்வமாக வழிமொழியப்பட்டிருக்கிறது .
            தமிழகத்தை பலவேறு தருணங்களில் ஏமாற்றிய அரசு யாதொரு எதிர்ப்பும் இல்லாத நிலையில் இந்த துரோகமும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது , இதற்கு சப்பை கட்டு கட்டும் விதமாக தீபகற்ப நதிகள் இணைப்பு நடைமுறைப்படுத்தபடும் என சொல்லி இருப்பது விதையிலும் விந்தை. ஏனெனில் எதற்கெல்லாம் லட்சக்கணக்கான கோடி செலவிடும் அரசு ஒரு மானில் குடிநீர் , பாசன வசதியை சரிசெய்ய செலவிட தயங்குவதாகக் கூறி செலவை காரணம் காட்டி திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது.
              இதை தான் பாட்டாளி மக்க கட்சி நிறுவனர் மறித்துவர் ச.ராமதாஸ் பலமுறை நதிகள் இணைப்பிற்கு முன் நதிகளை தேச உடைமை என்று அறிவிக்க சொல்லி போராடி வந்தார் அது கிடப்பில் போட்டு தமிழ் மக்களை வஞ்சித்தது கர்நாடகா , கேரளா, ஆந்திரா மட்டுமல் அவர்களின் சட்ட மீறலுக்கு துனிச்ச்லூட்டியது மத்திய அரசு தான் என தெள்ள தெளிவாகிவிட்டது .
              இனி நதிகள் இணைப்பு என்ற படம் முடிவுக்கு வந்ததால் முதல்வர் நதிநீர் ஆணையம் என்ற ஒன்றை அமைத்து வாக்கு வங்கியை பலப்படுத்திவர முயல்கிறார் ஏனெனில் ஆணையம் மட்டுமே மக்களை ஏமாற்றும் எளிய வழி என்பதனை தமிழக அரசும் உணர்ந்துள்ளது தமிழக மக்களுக்கு என்ன வழி ? தீர்வு என்ன ? போருத்திர்ப்போம் என்பதா? பொங்கி எழுவோம் என்பதா? ......என மில்லியன் டாலர் கேள்விகள் யாருக்கும் எழலாம் மொத்தத்தில் தமிழன் அனாதையகிவருவது வெளிச்சமாகிறது வெட்கக்கேடு

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger