நவீன தொழில் நுட்ப முறைகள் முறைப்படுத்தவேண்டும்

Friday, December 11, 2009

          மீபத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு காவல்துறை கஸ்டடியில் வைத்து விசாரிக்க மூன்று நாட்கள் நீதி மன்றம் அனுமதியளித்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் காஞ்சிபுரம் கோவில் ஒன்றின் அர்ச்சகராக பணிபுரிந்த தேவநாதன் காம லீலைகள் .  தேவநாதன் பணிபுரியும் கோவிலுக்கு வரும் பெண்களிடம் நைசாக பேசி அவர்களின் மனநிலை, கழ்டங்கள் , குறைகள் என ஆதரவாக பேசுவதுபோல் பேசி பல பெண்களை விழச்செய்து கருவறையில் உறவு வைத்துக்கொண்டால் புண்ணியம் என சொல்லி புனிதமான் கடவுளின் கருவறையில் பலபெண்களின் திருமணமான , திருமணமாகாத பெண்கள் என இவன் லீலைகளை அரங்கேற்றியுள்ளான்.  இந்த கருமத்தை தன செல் போனில் படம் எடுத்துவைத்து ரசித்திருக்கிறான் இன்று அதை உலகம் முழுவதிலும் செல்போனிலும் , இணையதளத்திலும் வளம் வரும் இந்த கருவறை கருமங்கள் .
  பெண்களை சீரழிக்கும் நிலைக்கு காரணம் என்ன :
                  பெண்கள் பெரும்பாலும் தங்களது அழகு, நேர்த்திக்காக்கப்பட நினைப்பது இயல்பு. ஆனால் அவர்களின் போக்கு நமது கலாச்சார மற்றும் பாரம்பரிய நடைமுறைகளுக்கு ஏற்றவகையில் இல்லாமல் சமீபத்தில்  ஏற்பட்டு அவற்றுடன் பழக்க வழக்கங்கள், நடை,உடை,பாவனைகள், சிந்தனைகள் படித்தவர்கழ்மட்டுமல்லாது, பாமர மக்களிடமும் ஏற்பட்டுவிட்டது தொலைக்காட்சிகள், பேஷன் டி.வி., சினிமாக்கலாச்சாரங்கள், இணையதள நடவடிக்கைகளின் தொடர்பால் நமது கலாச்சாரம், பாரம்பரியம் சலித்துப்போன ஒரு குறிப்பிட்ட செக்டர் பெண்கள் இப்படிப்பட்ட கலாச்சார சீரழிவில் ஈடுபடுகின்றனர்.
               பெரும்பாலும் பெண்களின் எண்ணங்கள் தங்கள் குடும்ப சஊழல், வருமானம், பெற்றோர், கணவர்,பிள்ளைகள் நிலை, குடும்ப நிலை இவைகளை உணர்ந்து இருந்தால் இவர்களுக்கு நிச்சயம் இப்படி நடக்க மனம் வரத்து, நடுத்தர வர்க்கத்தில் உயர்ரக வாழ்க்கை வாழ , உயர்ரக குடும்பத்தில் உறவுகள் சரியில்லாத நிலை , குடும்பத்தில் உறவினர்களுடன் உரையாடாத நிலை இவற்றில் விரக்தி, போன்ற பல காரணங்களால் பெண்கள் நயவஞ்சகர்களின் இச்சைக்கு ஆளாகின்றனர் , இவர்களுக்கும் பொறுப்பு இருந்திருக்கவேண்டும் .  
பிரேமானந்த சாமியார் , டாக்டர் .பிரகாஷ் உள்ளிட்ட பல மோசடிபெர்வழிகளின் கதை தெரிந்திரிந்தும் , அதுவும் ஆலயம் புனிதம் , தெய்வீகம் அறியாது அவன் சொன்ன வார்த்தை பொய் என உயர் நிலை குடும்ப பெண்கள் கூட பகுத்தறிய முற்படாதாதது வெட்ககேடு .
                இப்படிப்பட்ட பெண்கள் இருக்கும் வரை ஆயிரம் பிரேமானதாக்கள் , பிரகாஷ், தேவனாதன்கள் வரத்தான் செய்வார்கள். இன்று இவன் செல்போனில் பதிவு செய்து வைத்து ஆசைக்காக பார்பதற்கு என்று சொல்லிஉள்ளான் , ஆனால் இவன் போன்ற ஆட்கள் இதை வர்த்தக ரீதியாக பணம் பண்ண துணியும் பேர்வழிகள் இவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை அறியவேண்டும் .
 சைபர் க்ரைம் :
சைபர் க்ரைம் என்று ஒரு அமைப்பு உள்ளது அது தன கடமையை செய்யவேண்டும் , இன்று பதிவு செய்து அனுப்பும் முறை நாளை 3G  spectrom waves முறைகள் நடைமுறைக்கு வந்தால் நேரடியாக இணைய தளங்களுக்கு அனுப்பிவிடும் வசதிகள் என உள்ள எதிர்காலத்தை நினைத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு களைய உரிய சட்டங்களை இயற்றவேண்டும். 

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger