நித்தியானந்தா கம்பிகள் எண்ணட்டும் புத்திகள் வரட்டும்

Sunday, March 7, 2010


            "பெற்ற தாயாக இருந்தாலும் நள்ளி
ரவில் சந்திக்காதே " இது ஆண்மீகப்பநிகளில் சிறப்புற தன்னை அரநித்து தன்னைப்போலவே உன்னத சீடரை வளர்த்து திருமணத்திற்கு வற்புறுத்தியும் திருமணம் செய்துகொள்ளாமலே எந்தவித களங்கமுமின்றி இந்தியாவின் சாராம்சத்தையும், இந்துமதத்தின் சாராம்சத்தையும்,பாரம்பரியத்தினையும் உலகரியச்செய்து வாழ்ந்து மறைந்த விவேகானந்தர் போன்ற ஆண்மீகத்துரவிகள் வாழ்ந்து மறைந்த புண்ணிய பூமி நமது இந்திய பூமி.
              சமீப காலமாக கடவுளின் அடிமைகள் என்று ஆண்மீகப்பனிகளில் ஈடுபடும் ஆசாமிகள் பணத்தின்மீதும்,புகழின்மீதும் மோகம்கொள்ளும் நிலைக்கு மீறி கள்ள உறவுகளில்  ஈடுபட்டு ஆன்மீகத்திற்கும் இந்த மண்ணின் பண்பாட்டிற்கும் ஊறுவிளைவித்து வருவது பிரேமானந்த ,கல்கி, போன்ற சாமியார்களும் , தேவநாதன் போன்ற குருக்கல்களும் இறைவன் இருக்கும் கருவறை , இறைவனாக தங்களை வணங்கும் பீடங்களில் தங்களது குறைகளை சொல்லி நிவர்த்தி செய்துகொள்ள வரும் பக்தர்களை பொய்யான வாக்குறுதிகளை சொல்லி அப்பாவி பெண்களின் கற்பை சூறையாடி கடவுளின் கற்பகிரகத்தின் புனிதத்தை கெடுத்து , யாதுமறியாத பெண்களையும் பாவசெயலுக்கு ஆளாக்கி வருவது நீண்டகாலமாக நடந்துவருகிறது. தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நிலையில் இவர்களின் லீலைகள் அம்பலமாகிவருகிறது.
கொடியவர்களின் கூடாரமாகிவிட்ட கோவில்கள்:
                "கோவில்கள் வேண்டாமென்று சொல்லவில்லை ,கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது" என்ற பராசக்தி படத்தின் வசனத்திற்கு வக்காலத்து வாங்கும் நிலை ஏற்பட்டு நெடுநாளாகிவிட்டது.
தலைப்பாகை கட்டியவனெல்லாம்:
        புலியைப்பார்த்து பூனை சூடபோட்ட கதையாகிவிட்டது திருவண்ணாமலையை சொந்த ஊராகக்கொண்ட நித்தியானந்தா நிலை.   இந்தியாவின் மிகச்சிறந்த ஆன்மீக தலம் திருவண்ணாமலை , இங்கு மலைவடிவாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து மக்களை காக்கிறார் பரம்பொருளான அருணாச்சல ஈசுவரர்.  இவரின் லிங்கத்தையும் விவேகானந்தரின் மாதிரி தலைப்பாகை இவற்றை வைத்து  தியான மடங்களை ஏற்படுத்தி கோடிக்கணக்கில் பணம், கடவுளாக தன்னை சித்தரித்து வானலாவபுகழ், ஏராளமான சொத்துக்களை , லட்சக்கணக்கான அப்பாவிமக்களை நம்பவைத்து சராசரி மனிதனைவிட கேவலமான முறையில் தன் அந்தரங்க லீலைகளை அரங்கேற்றி வந்துள்ளது சமீபத்தில் சபை அறிந்தது  ஒரு தனியார் தொலைக்காட்சிகளின் மூலம்.
ஆன்மீகமும் ஆகமவிதிகளும்:
                    
ஆன்மீகத்தின் பெயரால் சிலர் இந்தியாவின் சிறப்புகளை உலகறியசெய்ததன் மூலம் இறந்தும் வாழ்ந்துகொண்டிருப்பதன் காரணம் போலிகள் உருவாக நேர்ந்தது. அப்பாவி மக்கள் ஆலயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குமேல் செல்ல அனுமதி மறுப்பது , குறிப்பிட்ட நபர்கள் கடவுள் சிலைகளை தொடுவதற்கும்  பல்வேறு நிலைகளில் ஆகம விதிகள் ஆழ்டாரம் , அனுழ்டாரம் என்றெல்லாம் சொல்லி வந்தவர்கள் பெண்களை கடவுளுக்கருகில் துகிலுரிந்து நாசம் செய்து இச்சை தீர்த்துள்ளனர்.   கடந்த இரண்டாம் நாள் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பான செய்திகளில் நித்தியானந்தா நாடிகள் ரஞ்சிதாவுடன் சல்லாபமாக இருந்துள்ளார் மேலும் பல நடிகைகளை தம் வலையில் வீழ்த்தி இச்சை தீர்த்துள்ளார் .  
சட்டம் தன் கடமையை செய்யட்டும்:
             கடவுள் பெயரால் ஆண்மேகத்தினையும், மக்கள் நம்பிக்கையையும் பாழ்படுத்தி வரும் போலிகளை , போலி நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் .  நித்தியானந்தா , ரஞ்சிதா உள்ளிட்ட புகாரில் தொடர்புடையவர்களை கைது செய்து தண்டிக்க சட்டம் தயக்கம் காட்டிடவேண்டாம். இப்படிப்பட்ட கயவர்களெல்லாம் கம்பிகள்  எண்ணட்டும் புத்திகள் வரட்டும்.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger