உணவில் விஷம் கலக்காதீர்: மன்மோகனுக்கு

Saturday, November 14, 2009

               விவசாயம் தமிழனுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை முறையில் செய்வது பழக்கப்பட்ட ஒன்று .   சுவையான காய்கறிகள் , தானியவகைகள் என மனித இனம் மகிழ்ச்சி  கொள்கிற ஒரு உணவினை தந்தவன் தமிழன் என்றால் அது மிகையாகாது .  யானைகட்டி போரடித்து உலகிற்கு உணவுபடைத்தவன் தஞ்சை தமிழன்.   இப்படி தமிழன் அறுசுவை அரோக்கிய உணவினை அழித்தவனுக்கு மிகப்பெரிய சோதனை வந்துள்ளது .  விதைகளை விவசாயி வைத்திருந்தாள் அது சட்டப்படி குற்றஞ் என்கிற சட்டத்த்டினை மத்திய அரசு கொண்டுவதுள்ளது.  அதைவிட மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் மரபணுமாற்றம் செய்யப்பட்ட விதைகளை அறிமுகம் செய்ய அமெரிக்காவைசேர்ந்த மாசாண்டோ,மகிக்கோ நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது இந்தியாஅரசு. அதுமட்டுமல்ல இதுகுறித்து மக்களிடமோ, தொண்டு நிறுவனங்களிடமோகருத்ததுஎதுவும்கேட்காமல் நேரடியாக விவசாயத்திற்கு கொண்டுவர தீர்மானித்துள்ளது.
'           இதுகுறித்துமுன்னால் மத்தியஅமைச்சர் மருத்ததுவர் இரா.அன்புமநிரமதாசு பிரதம மந்திரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.
            பி.டி. கத்தரிக்கைக்கும் அனுமதி அளிக்கப்படும் எனில் அது இந்தியாவில் அனுமதிக்கப்படும் முதல் மரபணுமாற்றப்பட்ட உணவு பயிராகவும், நச்சு பி.டி.மரபணுவைக் கொண்ட மரபணுமாற்றப்பட்ட கறிக்கு உலகில் அளிக்கப்படும் முதல் அனுமதியாகவும் இருக்கும்.  சுற்றுசூழல் மற்றும் கானகத்துறை அமைச்சகத்தின்  கீழ் செயல்படுகிற உயர்நிலை ஒழுங்குமுறை அமைப்பான மரபணு போரியல் ஒப்புதல் குழு (GEAC) அக்டோபர் 14 ஆம் தீதி நடைபெற்ற அதனுடைய கூட்டத்தில் , மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
              அமெரிக்காவை தலைமையிடமாகக்கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய விதை உற்பத்தி  நிறுவனமான மான்சான்ட்டோ நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான  மஹிகோ நிறுவனம்தான் இந்தியாவில் இந்த பி.தி.கத்தரிக்காயை உருவாக்கி உள்ளது.  கத்தரிக்காய் உள்ளே ஒரு பாக்டிரிய மரபணுவை செலுத்தி இந்த பி.தி.கத்தரிக்காய் மஹிகோ நிறுவனம் தயாரித்துள்ளது.  அப்போதுதான் கத்தரிக்காய் செடிக்குள் ஒரு புதிய நஞ்சு உருவாகும் .  அந்த நஞ்சு , பயிரை (பழம்,மற்றும் வேரை) சாப்பிடும் குறிப்பிட்ட சில பூச்சிகளை கொள்ளும் நஞ்சாகும்.
               கத்தரிக்காயின் தோற்றத்துக்கும் பல்வகைப் பெருக்கத்துக்கும் இந்தியாதான் மையம். ஆனால் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை உருவாக்குவதை நெறிப்படுத்துவதற்கான எந்த கொள்கை கட்டமைப்பையும் இந்தியாவில் இல்லாத காரணத்தால் இந்த பி.டி. கத்தரிக்காயை உருவாக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  ஒரு குறிப்பிட்ட பயிரின் தோற்றத்துக்கும், பல்வகை பெருக்கத்துக்கும் மையமாக இருக்கும் உலகின்  எந்த ஒரு பகுதியிலுள்ள , எந்த மரபணு மாற்றப்பட்ட பயிரும் பயிரிட அனுமதிக்கப்படுவதில்லை .  ஆனால் இந்தியா,விவேகமட்ட்ற முறையில் பி.டி.கத்தரிக்காயின் வணிக வெளி ஈட்டு நடிமுரைகளை மேற்கொள்ளதொடன்கியிருக்கிறது.  நம் நாட்ட்டில் 2500 க்கும் மீறப்பட்ட கத்தரிக்காய் வகைகள் உள்ளன.  வளம் மிக்க இந்த பல்வகை பண்புதான் மனிதகுலத்தின் மரபாகும் .  மரபணு மாற்றப்பட்ட பி.டி. கத்தரிக்காய்  அனுமதிக்கப்படுமானால் அந்தமரப்பு சீரழிந்துவிடும்.
                ஒவ்வாமை , சிருநீரகம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளுக்கு பதிப்பு , உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அமைப்பு பாதிப்பு போன்ற பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்குடிய மரபணுவை மாற்றப்பட்ட பயிர்கள் .  பி.டி. கத்த்டரிக்காயும் அதற்கு விதிவிலக்கல்ல.  இந்த மரபணு மாற்றப்பட்ட பயிரை அனுமதிப்பதற்குமுன்பாக சுதந்திரமான ஆய்வு எதையும் இந்தியாவின் ஒழுங்குமுறை அன்மைப்பு மேற்கொள்ளவில்லை பி.டி. கத்தரிக்காயின் உயிரி பாதுக்காப்பு தொடர்ச்சியான எல்லா ஆய்வுகளும் இந்த பயிரை உருவாக்கியவர்களால் நடத்த்தப்பட்டுள்ளனஅல்லதுஅவர்களால்அமர்த்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நீண்டகால கண்ணோட்டத்திலான ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை.
                  2010  ம் ஆண்டில் முதல் இரு மாதங்களில் கலந்தாய்வு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுல்லத்தை வைத்து பார்க்கும்போது இந்த விஷயததத்டிள் இக்கிய முற்போக்கு கூட்டணி அரசு  முன்னேச்செரிக்கையுடன் கூடிய அணுகுமுறையை மேற்கொள்வதுதான் விரும்பத்தக்கது.  அணித்து மரபணு மற்ற பயிர்களின் சுற்றுசூழல் வெளிஈட்ட்டுக்கும் தடை விதிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்+

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger