கடன் தொல்லையா-இதோ எளிய வழி?

Thursday, November 12, 2009


         மனிதன் இறைவனை வழிபட நினைப்பது ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் மட்டுமே என்பதால் இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதேனும் ஒரு பிரச்னையை விட்டுவிடுவதாக ஆன்றோர்கள் கூறுவது வழக்கம் .  அதுவும் கடன் தொல்லை என்றால் சொல்லவே வேண்டாம் இரவில் தூங்கமுடியாது , நிம்மதியாக சாப்பிடமுடியாது  இந்த பிரச்சனைகளே உச்சத்தை தொடும்போது தூக்குபோட்டு தற்கொலை , மருந்து குடித்து தற்கொலை என வாழ்க்கை முடிந்து விட்டதாக நினைத்து தற்கொலை முடிவுக்கு செல்லும் அளவிற்கு கொடுமையானதுதான் கடன் தொல்லை.
           இந்தகடன் தொல்லைகளை தீர்க்க பெரும்பாலும் முயற்சித்து பின் கடவுளை நாடுவார்கள் .  அப்படி கடன்களை தீர்ப்பதில் உயிர்களை காக்கும் அவதாரமான சிவபெருமான் அருள்பாலிக்கும் திருத்தலம்தான் விழுப்புரம் அருகேயுள்ள சிறுவாலை கிராமத்தில் உள்ள அருள்மிகு . பாலேசுவரர்.  இங்கு தனது மனைவி பாலாம்பிகையுடன் அருள்பாலிக்கும் சிறப்பைப் பெற்றவராகிறார் மூலவரான பாலேசுவரர்.
             சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் மூலவராக தோன்றி அருள்பாலித்து கொண்டிருந்ததை முன்னோர்கள் சிவகதி அடைந்தவர்களின் கூற்றை செவி வழியாக கேட்டு அறிந்ததுதான்.  காலப்போக்கில் இத்திருத்தலம் சிதைந்து அழிந்து மண்  மேடானது .  அப்பொழுது இவ்வூரில் வசித்து வந்த ரங்கா பைத்தியமாக அலைந்து திரிந்து இத்திருக்கோவிலுக்குள்  சென்று பாம்புகள் சூழ்ந்த அப்புற்றை அன்றாடம் சிறிது சிறிதாக பல வருடமாக தோண்டி தோண்டி அப்புற்றை  அகற்றி அதனுள் இருக்கும் சிவலிங்கத்தை ஊருக்கு வெளிக்காட்டினார் .  அன்றுமுதல் அவருக்கு பைத்தியம் தெளிந்து அவர் இல்லற வாழ்வில் ஈடுபட்டு பிள்ளைபேறு அடைந்து சிவகதியை அடைந்தார், இவருடைய உறவினர்கள் இன்றும் இவ்வூரில்  வாழ்ந்து வருகிறார்கள் என்பது உண்மை. புற்றிலிருந்து வெளிப்பட்டதால் புற்றீசுவரர் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
             கடனை நிவர்த்தி செய்யும் தளமாக கும்பகோணம் வட்டம் திருச்செரையிலும், திருவாருரிலும் கடன் நிவர்த்தி ரின லிங்கேசுவரராக (கடன் நிவர்த்தி ஈசுவரர்) உபமூர்த்தி உட்பிரகாரத்தில் அமைந்து அருள்பாலித்து கொண்டிருக்கிறார்கள் .  ஆனால் சிறுவலையில் மூலவர் கடன் நிவர்த்திளிங்கமாக அருள்மிகு. பாலேசுவரர் காட்சி கொடுப்பது நாமெல்லாம் செய்தபாக்கியம்.  கடன் தொல்லையால் துன்புறும் ஆன்றோர்கள் ஒருமுறை திருமுறைகண்ட  இத் திருக்கோவிலுக்குள் வந்து ஈசனை வணங்கினால் கடன்தொல்லை இல்லாமல் இன்புற்று வாழலாம்.
               இத்திருத்தலத்தின் மார்க்கம்:
        விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் அருள்மிகு பணங்கட்டிசுவரர் தளத்திற்கு மேற்க்கே 15 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் தளத்திற்கு 45 கி.மீ. தொலைவிலும், திருவாமாத்தூர் அருள்மிகு.அபிராமேசுவரர் திருத்தலத்திற்கு 6 கி .மீ. தொலைவிலும் , பணமலை அருள்மிகு . தாளகிரீசுவரர் தளத்திற்கு தெற்க்கே 10 கி.மீ. தொலைவிலும் மையமாக உள்ளது.  இதில் அருள்மிகு தாளகிரீசுவரர் திருத்தலம்,  அருள்மிகு அபிராமேசுவரர் திருத்தலம் , சிறுவாலை அருள்மிகு பாலேசுவரர் திருத்தலங்கள் ஒரே சாலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  வழிபட நினைப்பவர்கள் மூன்று திருத்தலங்களையும் ஒரேநாளில் வழிபட முடியும் என்பதை அறியவும்.
             பக்தர்கள் பக்தியுடன் வழிபாட்டு அருள்மிகு .  பாலேசுவரனின் அருளைபெற்று இன்புற்று வாழ வாழ்த்துக்கள்.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger