இத்தாலி தாலிக்கு வலி(மை) ! இந்திய தாலிக்கு இல்லை(யா)?

Tuesday, November 17, 2009

       கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் நாள் குஜராத் மாநில மீனவர்களின் படகில் மும்பை கடல்வழியாக மும்பைக்கு வந்த தீவிரவாதிகள் மும்பையின் அடையாளசின்னமான ஹோட்டல் தாஜ்,நரிமன் இல்லம் ,சிவாஜி சத்ரபதி தொடர்வண்டி நிலையம் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் இயந்திரதுப்பாக்கிகளால் காட்டுமிராண்டிதனமாக சுட்டுத்தள்ளியது நாட்டின் பாதுகாப்பு நிலையை தீவிரமாக அறிந்தவர்களால் மட்டுமே செய்யமுடியக்கூடியது நரிமன் இல்லத்தில் தேசப்பாதுகாப்புபடை வீரர்களுடன் எள்ளளவும் அச்சமில்லாமல் சண்டையிட்டது சரித்திரத்தில் இதுஒரு மைல்கல் .  இதில் தீவிரவாத எதிர்ப்பு  படை தலைவர் ஹேமந்த் கர்கரே உடன் கிட்டத்தட்ட பனிரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்தனர்..
               இந்த நிகழ்விற்கு அரசு தீவிரமாக ஏதும் நடவடிக்கை எடுக்கமுயலாதபோது நாட்டின் மக்கள் எதிர்ப்புக்கு பிருகு உள்துறை அமைச்சரை மாற்றி , முதல்வரை மாற்றி சமாதனம் செய்யமுயன்றனர் பாகிஸ்தான் மீது கண்டிப்பாக போர்தொடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர் அது நிறைவேற்றப்படுவதுபோல் சைகை காட்டி அதுகுறித்த சட்டங்கள் கொண்டுவருவதுபோல் புதிய உள்துறை அமைச்சர் சிதம்பரம் சொல்லி சில சட்டங்களை கொண்டுவந்தார்.  மக்களை திருப்திப்படுத்த பாகிஸ்தான் அரசிற்கு ஒரு முறை அல்ல பத்து முறை தீவிரவாதிகளின் பட்டியலை அளித்து அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வலியுறுத்தியது .  இதை ஒருபொருட்டாக மதிக்காத இந்தியில் கொடுங்கள், அரபு மொழியில் கொடுங்கள் என ஏகத்திற்கும் அரசை கேவலப்படுத்தியது பாகிஸ்தான் , இதற்கும் சிதம்பரம் ஒரு விளக்கம் கொடுத்துவிடுகிறார்.  இந்த நிலையில் ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் நாட்டிற்கு  ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையில் அதுகுறித்து துணிச்சலான நடவடிக்கை எடுக்காமல் எனக்கு வனத்துறை அமைச்சர் பதவி மிகவும் பிடிக்கும் வனத்துறை பங்களாவில் உள்ள நூலகத்தில் புத்தகங்களை படிக்கவே விருப்பம் இந்த பதவி பிரதமரின் சொல்லை தட்டமுடியாததால் ஏற்றேன் எனகூறுவதும், வங்கிகடன் வழங்கபோவதும் , பள்ளிகளில் உரையாடுவதும் போன்ற மேம்போக்கான வேலைகளை செய்வதா பொறுப்புள்ள உள்துறை அமைச்சரின் வேலை வெட்கக் கேடானது.
இங்கே உள்ள தீவிரவாதத்தை ஒடுக்க வக்கட்ட்ற இவர்கள் விடுதலை புலிகளை ஒடுக்க ஆயுதம் கொடுத்து போர் நடத்துகிறார்கள், அயல் நாட்டில் உள்ள ராணுவ நடவடிக்கையை தடுக்கமுடியாது என்பவர்கள் தமிழர்கள் அழிக்கப்படுவதற்கு ஆயுதம் தருவார்கள் என்னகொடுமை.
             அமைச்சர் சிதம்பரம் துணிவிருந்தால் நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு நீதிமன்றதண்டனையை நிறைவேற்றட்டும், முபை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை கைதுசெய்து தண்டிக்கட்டும் இல்லையேல் தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலகி நூலகத்தில் புத்தகம் படிக்கட்டும்.  பதவி சுகம் அனுபவிக்க ஏன் மக்களை கொள்ளவேண்டும் வெட்கங்கெட்டவர்கள். சோனியா
 அருத்ததுமட்டும் தாலி பாராளுமன்ற தாக்குதலில் எட்டு பாதுகாப்பு படை வீரர்கள்,மும்பை தாக்குதலில் இறந்த பனிரனடுபெரின் தாளிக்கேல்லாம் மதிப்பில்லையா என்னடா கொடுமை தாலி கட்டாதவர்கள்  எல்லாம் தாளிக்கெல்லாம் வருத்தப்பட்டால் இந்தியா கலாச்சாரத்தில் புனிதமாக கருதப்படுவதும் உயிராக மதிக்கப்படுவதும் தாலி அதை இழந்த எம்மண்ணின் பெண்களின் தாலிக்கு என்மதிப்பில்லை இது தேசிய இல்லை சர்வதேச அவமானம்.       
     

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger