நந்தன் கால்வாய் திட்டம் . 6598.06 ஏக்கர் பயன்பெறுகிறது-பொ.ப.து.

Sunday, November 1, 2009

1979 ஆம் ஆண்டு தமிழக அரசால் திருவண்ணாமலை வட்டம்,செஞ்சி வட்டம்,விழுப்புரம்  வட்டம் முறையே 1566.20,1650.52,3,381.34 ஏக்கர் நிலங்கள் மொத்தம் 6598.06 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெரும் நந்தன் கால்வாய் திட்டம் 1979 இல் தொடங்கப்பட்டது .  இத்திட்டம் மூன்று வட்டத்திலும் 39 ஏரிகளை இணைத்து வளப்படுத்த திட்டமிடப்பட்டது.
           இக்கலவை செஞ்சி வட்டம் சோ.குப்பம் வரை வெட்டப்பட்டதாக தெரிகிறது , கால்வாய் தொடங்கப்பட்ட திருவண்ணாமலை வட்டம் கீரனூர் துரிஞ்சல் ஆற்றிலிருந்து வெட்டப்பட்ட சோ.குப்பம் வரை உள்ள கலவி துரவாரப்படாமல் இன்றுவரை பயன்பட்டிற்குவராமல் உள்ளது.  மேலும் மீதமுள்ள துரம் வெட்டப்படவுமில்லைவில்லுபுரம் வட்டத்திலுள்ள எந்த எரியும் இணைக்கப்படவில்லை.
இதுகுறித்து தகவல் உரிமைச்சட்டம் முலம் கால்வாய் வெட்டப்படாதது பற்றிகேட்டதற்கு பொதுப்பணித்துறை பொறியாளர் (நீர்வளத்துறை ) இத்திட்டம் நிறைவுற்று பயன்பாட்டில் உள்ளது என்று விளக்கமளித்துள்ளார்.
           இதே திட்டம் நிறைவேற்றப்படதது குறித்து மேல்மலையனூர் சட்டமன்ற உறுப்பினர் பா.செந்தமிழ்செல்வன் , முகையூர் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் ஆகியோர் கேள்விக்கு நந்தன் கால்வாய் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படு என்று பொதுப்பணி துறை  அமைச்சராக இருந்த துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
             எனினும் இத்திட்டம் 1979 முதல் இந்த மூன்று தாலுக்கா மக்களை ஏமாற்றும் தேர்தல் நேர வாக்குவங்கியாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.  தேர்தல் நேரத்தில் மட்டுமே செய்திக்காக நினைவில் வரும் கால்வாய் நிஜத்தில் வருமா ஏக்கத்தில் விவசாயிகள் அரசு பதிவேட்டில் மட்டும் வளம்பெறும் 6598.06  ஏக்கர் நிலங்கள் நிஜத்தில் வறட்சியின் பிடியில் .  முரண்பாடான அரசு அதிகாரிகள் , அமைச்சர்கள் ..

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger