அன்புமணிக்கு இளைஞர்களின் சலாம்

Thursday, February 11, 2010





           இந்திய அரசு கடந்த 2004 மே முதல் தேதியிலிருந்து புகையிலை தடைசட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தது. இதை மாநில அரசுகள் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென மத்திய அரசின் மக்கள் நலவாழ்வு அமைச்சர் மருத்துவர் இரா.அன்புமணி ராமதாஸ் தெரிவித்து , சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசு அதிகாரிகளின் பதவிகளின் பெயர்களை வெளியிட்டார் மாவட்ட சுகாதார செவிலியர் , கிராம சுகாதார செவிலியர் , மருத்தவ கல்லுரி முதல்வர், மருத்துவ இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் ,துணை இயக்குனர்கள், மருத்துவர்கள்,பள்ளி முதல்வர்கள்,உதவி ஆய்வாளர் அந்தஸ்த்திற்கு குறையாத காவல் துறை அதிகாரிகள்.
            இந்த சட்டத்தில் பொது இடங்கள் எவை என தெளிவாக குறிப்பிடப்படவில்லை என சட்டம் வழக்கம் போல காற்றில் பறந்தது , ஆனால் அமைச்சர் மனம் தளராமல் மீண்டும் சட்டத்தை முறையாக  சட்டத்தில் பொது இடங்களின் விவரங்களை குறிப்பிட்டு கடந்த அக்டோபர் இரண்டாம் நாள் தேச தந்தை அண்ணல் மகாத்மாகாந்தி அவர்களின் பிறந்த நாள் அன்று முதல் நடைமுறைப்படுத்தி அதை மாநில அரசுகள் தீவிரமாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டார் பெண்கள் , புகைபிடிக்காதவர்கள் மத்தியிலும் , சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது .  இந்த அறிய செயலுக்காக மருத்துவர் அன்புமணிக்கு  உலக நாடுகளின் பொதுமன்றமான ஐ.நா. பொதுசபையில் நடைபெற்ற உலக தலைவர்கள் மாநாடொன்றில் லூரதர் எல் டெர்ரி  என்னும் உயரிய விருதை உலக நாடுகளின் தலைவர்கள் வழங்கி கவுரவித்தனர். 
   fdfddfdsdsafdsasdபின்னர் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் புகையிலை ஒழிப்புக்காக விருதுவழங்கி கவுரவித்தார்.  ஆனால் சட்டத்தை தீவிரமாக ஒருசில இடங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தினர் பலஇடங்களில் கண்டுகொள்ளவில்லை ; எனினும் அவரின் பசுமைதாயகம்மூலமும் , அவரின் வலியுறுத்தல் மூலமும் மக்களிடம் நாளடைவில் விழிப்புணர்வு ஏற்பட்டு மக்களே புகை என்னும் அரக்கனிடமிருந்து விலகி வருகின்றனர் இதனை புகையிலை தயாரிப்புகள் விற்பனை குறைந்துவருவது சாட்சியாக ஊடகங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.  
pffஅன்புமணியின் புகையிலை தடைசட்டத்தை இளைஞர்கள் ஏற்பு 
       நாளொன்றுக்கு 2500 மனித உயிர்களை கொலை செய்யும் புகையிலை பொருட்கள் நாட்டில் மட்டுமல்ல உலகில் எங்கும் இல்லை என்ற நிலைக்கு இந்தியா முன்மாதிரியாக விளங்க உரிய அனைத்து நடவடிக்கைகளை பதவியின் நலன் சுகங்களை பாராமல் துணிச்சலுடன் செயல்பட்ட விதத்திற்கு மக்களிடம் அங்கிகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியானது. இந்த விருதுகள் அனைத்து விருதுகளிலும் முதலானது.  வாழ்க மருத்துவர் அன்புமணி சிறக்க அவரின் சமூக நலப்பணிகள்.



0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger