உலக அழிவை தடுக்க...

Thursday, February 11, 2010

             அமரிக்காவை ஒட்டியமைந்துள்ள கரிபியன் தீவான ஹைத்தி யில் கடந்த ஜனவரி பனிரெண்டாம் தேதி ஏற்பட்ட நிலநத்க்கத்தில் 2,30,000  பேர் உயிரிழந்தனர். இது உலகெங்கிலும் மனிதகுலத்திற்கு பெருத்த அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கோபன் ஹெகன் புவி வெப்பநிலை மாநாடு:
             கடந்த டிசம்பர் 7-18 வரை நடைபெற்ற உலக அளவிலான மாநாட்டில் உலகின் 192 நாடுகளை சேர்ந்த பிரதம மந்திரிகள் , அதிபர்கள் , அமைச்சர்கள் , தன்னார்வ அமைப்புகள் என அனைவரும் கலந்துகொண்டு உலகின் வெப்பநிலை உயர்வு , பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து தீவுகள் கடலுக்குள் மூழ்குதல் , சுனாமி, புயல்,கடுமையான வறட்சி, நிலநடுக்கள் போன்ற பேரிடர்கள் குறித்தும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் விவாதித்தனர் இதில் வளர்ந்துவாரும் நாடுகள் பொருளாதார மேம்பாடு ,வளர்ச்சித்திட்டங்கள் உள்ளிட்ட காரணங்களை காரணம் காட்டி பசுமை இல்லை வாயுக்களை வெளி விடுவதை  குறைப்பதை மறுத்து நழுவிவிட்டனர். வல்லரசு நாடுகள் வளர்ந்துவரும் நாடுகள் பசுமை இல்லை வாயுக்களை வெளியேற்றத்தை குறைக்க அதற்கான நிதி உதவியை அமரிக்க அளிக்கும் என அறிவித்தது.

வளர்ந்துவரும்,வல்லரசு நாடுகளின் போட்டியால் அழிவின் விளிம்பில் தீவுகள்:
              
            உலகின் எழில மிகுந்த ஹைத்தி , சுமித்ரா உள்ளிட்ட ஏராளமான தீவுகள் கடலுக்குள் செல்லும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றன.சக நாடுகளில் வாழும் சக மனிதர்களின் உயிர்களை காக்கவும், எதிர்கால தலைமுறைக்கு எழில் சூழ்ந்த பாதுகாப்பான உலகை விட்டுசெல்ல மனமில்லாத வல்லரசு நாடுகளின் சுய நலம் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இவர்கள் வெளிவிடும் பசுமை இல்லை வாயுக்களின் வெளியேற்றத்திற்கு பொறுப்பேற்றால் அதற்கான விலை தருவதாக அமரிக்க போன்ற வல்லரசுகள் தெரிவிப்பது அந்நாட்டிற்கு அடிக்கடி வரும் ஹரிக்கேன் சுறாவளி போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை மறந்துவிட்டது போலும் .  எது எப்படியோ அமரிக்க தாழ்த்தப்பட்ட இனத்தின்(கறுப்பரினத்தின்) தலைவர் ஒருவரை ஏற்றுக்கொண்டதிலிருந்து தனது நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே நல்வழிபிறக்கும் என எண்ணிய அமரிக்க உள்ளிட்ட உலக மக்களின் எண்ணங்களுக்கு ஏமாற்றம் நேர்ந்துள்ளது.
அமரிக்க எப்போதும் பொருளாதார முன்னேற்றம் குறித்து கவலைப்படுமே தவிர மக்களை சூழல் , எதிர்காலம் குறித்து கவலைப்பட்டதில்லை அதை புதிய அதிபரும் பின்பற்றுவது வேதனை.
காக்க காக்க ......
         புவி வேப்பமடைவதற்கும் காலநிலை மாற்றத்திற்கும் கடந்த 100 ஆண்டுகளுக்குமேலாக வெளியிடப்பட்ட கரியமிலவாயு உள்ளிட்ட பசுமை இல்லை வாயுக்களை வெளியேற்றத்தின் விளைவுகளை நம்மால் தடுக்க முடியாது ;ஆனால் இனி வெளியிடப்படும் வாயுக்களை நாம் நிச்சயம் குறைக்கவேண்டியது அவசியம் அதை வல்லரசுகள் உணர்ந்து உலகை காக்க தானும் அது தொடர்பான நடவடிக்கைகளில் உடன் இறங்கவேண்டும்.  இயற்கையுடன் இணைந்த வாழ்வு மட்டுமே இனிக்கும் இல்லையேல் நமது அழிவு உறுதிசெய்யப்படும் .......


..

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger