சமூகநீதியின் தந்தை ராமதாஸ்.

Monday, August 16, 2010






சமூகத்தில் ஏற்றதாழ்வுகள் இல்லாமல் அனைவருக்கும்
சமவாய்ப்பு சம அந்தஸ்த்து  கிடைக்கவேண்டும்,
மூடபழக்கவழக்கங்கள்
அறவே ஒழிக்கப்படவேண்டும் என அயராது பாடுபட்டவர்
 ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ற ஈரோட்டுபெரியார்.  பெண்ணடிமைத்தனம்,மூடபழக்கவழக்கங்கள் போன்ற புரையோடிப்போன சமூக அவலங்களுக்கு
சிகிச்சையளித்து வெற்றியும் கண்டார்.  சமூக நீதி
குறித்த சமவாய்ப்பு, சம அந்தஸ்த்து பிற்பட்ட,மிகபிற்பட்ட மக்களுக்கு கிடைக்காததால்
அவரின் சமூக நீதி கனவு கனவாகவேபோனது.  அதனை நிறைவேற்றவேண்டிய பொறுப்பில் அவருடைய தம்பிமார்களான பேரறிஞர் அண்ணா,
நெடுஞ்செழியன் , கருணாநிதி போன்றவர்கள்
அதுகுறித்த முயற்ச்சியில் ஈடுபடவே இல்லை
 என்பதுதான் பெரியாருடைய
ஆத்மாவிற்கேவருத்தமானதாகும்.  
              உண்மையான கனவும், இலட்சியமும்
என்றாவது ஒருநாள்
 நிச்சையம் வெற்றிபெறும் என்பதுபோல பெரியாரின்
கனவுகள் 1980 வன்னியர் சங்கத்தை நிறுவிய திண்டிவனம் அருகே உள்ள கீழ்சிவிரி கிராமத்தில் குற்றப்பரம்பரை
என்று இருந்த வன்னியர் சமூகத்தில்  பிறந்த ச.ராமதாஸ்  என்ற மருத்துவர்.  தன் சமூகத்தின் அவலநிலைகளை கண்டு வேதனை
 அடைந்து சமூக மக்களை ஒன்றுதிரட்டி இட ஒதுக்கீடு கெட்டு போராடதொடங்கினார், அரசின் மேத்தனபோக்கினால் 17.9.1987-23.9.1987  ஒருவாரம்
 தமிழகம் இயக்கமில்லா நிலைக்கு    போராட்டம்
தீவிரமடைந்துபோனாலும்
 அரசின் அடக்குமுறைக்கு வன்னியர் சங்கத்தின் போராளிகள் முன்னறிவிப்பில்லாத
துப்பாக்கி சூட்டில் 21 உயிர்களை பலிகொடுத்த
 மருத்துவர் விடாது அரசை நெருக்கடிகொடுக்க
 முதல்வராக இருந்த மு.கருணாநிதி (தற்பொழுதும்)
தன்சமூகத்தினையும் ,  வன்னியர் சமூகத்தினையும்
சேர்த்து 108 சாதிகளுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு
வழங்கினார்.
              1989 இல்  பா.ம.க. என்ற அரசியல் கட்சியை பொதுசெயலாளர் ஆதிதிராவிடர்,தலைவர்
வன்னியர்,பொருளாளர் இஸ்லாமியர்,என சமநிலை
 அந்தஸ்தில் இயக்கத்தை தொடங்கினார் மருத்துவர்.  மக்களின் பிரச்சினைகள்,தேவைகள் எனதேரிந்துகொண்ட
 மருத்துவர் ராமதாஸ் அவைகளை தீர்க்க தினம் தினம்
போராடி அரசின் கவனத்திற்கு கொண்டுபோனார் அதில்
வெற்றியும் கண்டார். எந்தொரு அரசியல் கட்சியும் ஆளும் கட்சியாக இருக்கும்போது மட்டுமே
 மக்களுக்கு நல்லது செய்யமுடியும் என கருதும்போது எதிர்கட்சியாக இருக்கும்போதும் மக்களுக்காக போராடவேண்டியது ஜனநாயகத்தில் ஆரோக்கியம் என போராடுகிறார்.
               108  சமூகங்களை இணைத்து கொடுத்த ஒதுக்கீடு மிகப்பெரும்பான்மையான சமூகத்திற்கு கல்வி,வேலைவாய்ப்பில் தன்னிறைவடைவது முடியவில்லை எனவே தனி இடஒதுக்கீடு வேண்டுமென கோரினார்.  முன்னதாக இந்தியாவில் மத்தியஅரசின் கல்வி, வேலைவாய்ப்பு பெற பிறபிற்பட்ட சமூக மக்களுக்கு
  27 இடஒதுக்கீடு பெற இந்தியாவின் சாமூக அரசியல் கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு சென்ற பொது வன்னியர்களைபோல இந்தியாவில் பெரும்பான்மை சமூகங்கள் முறையான இடஒதுக்கீட்டில் அந்தந்த மாநிலத்தில் கல்வி,வேலைவாய்ப்பில் தன்னிறைவடைந்து பொருளாதார மேம்பாடடையும்போது இங்குமட்டும் ஏன் இப்படி ஏன் வேதனைப்பட்டார்.  அதற்கு ஒரே வழி இந்தியாவில் நடிபரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தி சமூக மக்களின் எண்ணிக்கைக்கேற்ப இடஒதுக்கீட்டை வழங்கலாம் என போராடினார் இதற்காக இந்தாண்டுமுதல் நடைபெறும் கணக்கெடுப்பில் சாதிவாரியாக கணக்கெடுக்க பிரனாப்முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழுவினரின் கடிதத்திற்கு அரசியல் கட்சியினரின் ஆதரவினால் இந்தியாவில் சாதிவாரியான கணக்கெடுப்பு என்பது நம்பிக்கை அளிக்கிறது பிற்பட்ட மிகப்பிற்பட்ட மக்களுக்கு. 
            இப்படி சமூக நீதிக்காக மிகப்பெரிய அளவில் இந்தியாவில் போராடிய அறிவியல் ரீதியாகவும்,மனிதாபிமானரீதியாகவும் ஆய்வுசெய்து வென்று வருகின்ற மருத்துவர் தந்தைபெரியாரின் கனவுகளை உயிரூட்டிவருவதன் மூலம் பெரியாரின் ஆத்மாவிற்கு சாந்திதந்திருக்கிறார்.  சாமூகநிதியை புதுமையானவிதத்தில் ஆய்வுசெய்து அரசு ஏற்கும் விதத்தில் அறவழியில் போராடி வென்றதன்மூலம் இவர் சமூகநீதியின் தந்தை என அழைப்பது  மிகப்போருத்தமே.

0 பின்னூட்டம்:

 
சி.முருகதாஸ் - by Templates para novo blogger